Chapter 5
V. ஏன் தியான சிகிச்சையாளராக வேண்டும்?
V. ஏன் தியான சிகிச்சையாளராக வேண்டும்?
நீங்கள் எல்லாரும் முன்குறிக்கப்பட்டவர்கள். நீங்கள் இங்கு வந்திருப்பதை ஏதோ தற்செயலாக நடந்த ஒரு விஷயம் அல்ல. இறை சக்தியால் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இது கூட்சுமமான உண்மை. புரிந்து கொள்ள கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்.
இருந்தாலும், உண்மை, உண்மையே.
ஆன்மீகப் பாதையில் உங்களுக்குள் மூழ்குவது தான் அடிப்படை. எல்லா தியானங்களுக்கும் அடிப்படை நோக்கம் ஒன்றே.
அன்மீகப் பாதையில் அடுத்தக் கட்டத்தில் நீங்கள் நுழைவதற்காக கொடுக்கப்படும் தீட்சையும், தியான முறையும் தான் ஆனந்த கந்த தீட்சை. இந்த தியானத்தைத் தொடர்ந்து செய்வதால்
★ சேவையின் திருப்தியையும்
- அமைதியான மனதையும்
- ★ உற்சாகமான உடலையும்
- தெளிவான சிந்தனையும்
- அருமையான வாழ்க்கையும்
- ★ உள்ளிருந்து பொங்கும் அனந்த அனுபவத்தையும்
ஒரு சேர பெற்று - ஆன்மீகப் பாதையில் குரு சக்தியோடு இணைந்து நம் கவலைகளை மறந்து, நிம்மதியான வாழ்விற்கு வழி செய்யலாம்.