புரிகிறதா என் தவிப்பு
புரிகிறதா என் தவிப்பு
இப்படிக்கு, நான் ஆன்மீகன் பேசுகிறேன் ... என் பெயர் நிட்டி ராஜன். ஆச்சரியமாகப் பார்த்தேன் ! குருவின். . . நடையில் நடனம் ! குரலில் கவிதை ! கண்ணில் கடவுள் ! இதையெல்லாம் தாண்டி என்னையும் மீறிய ஒர் ஈர்ப்பு கன்றுக் குட்டியாகக் கட்டிப் போட்டது தியானத்தில் என்னை. அழுத்திப் பார்த்தால் தெரியும் தசையும் எலும்பும் தாண்டிய ஒரு மண்டலத்தையே என்னுள் கண்டேன் குரு அருகே (அ) முன்னிலையில் தியானித்ததில் நரம்பு மண்டலத்தையும் இரத்த ஒட்ட மண்டலத்தையும் தாண்டிய ஒன்றுண்டு. அதுதானடா சக்தி ஒட்ட மண்டலம் - என என் புத்திசாலி நண்பனொருவன் சொல்லக் கேட்டிருக்கிறேன். இன்று தியானத்தில் கண்டேன் உணர்ந்தேன் சக்தி ஒட்ட மண்டலத்தை. என்ன சுகமிகு நிமிடங்கள் அவை ! !
முக்தி விழிச்சாலையான நிலையான சக்தி ஒட்டப்பாதைகளை என்னுள் உணர்ந்த நிமிடத்தில் எப்படி... வர்ணிப்பேன்!!!
தேடிப் தேடிப் பார்க்கிறேண் வார்த்தைகளே கிடைக்கவில்லை இருந்தும் முயற்சிக்கிறேன் சுகம் மிகு நிமிடங்களை விளக்க ...
அது தென்றலைவிட இதமாய் வருடிவிட்டது உள்ளுக்குள்ளே ...
அது சுகமென நாம் கண்டிருப்பவைகளைச் சுக்கு நூறாய் உடைக்குமளவுக்குப் பெரிய சுகம் ...
அது வாசனைத் திரவியத்தைவிட இனிமையான உணர்வைப் பொங்கச் செய்தது ...
அது
இவ்வுலகமே நம் சொந்தமானாலும் கிடைக்காத பெரும் திருப்தி ... மன்னிக்கவும் தொடர்ந்து பொய்களே சொல்லியிருக்கிறேன்
உண்மையாகச் சொன்னால் சொல்ல முடியவில்லை என்னால், தியானத்தில் கிடைத்த ஆழ்ந்த அனுபவத்தை !
என் தவிப்பு உங்களுக்குப் புரிகிறதா?
இல்லை நிச்சயமாக உங்களுக்குப் புரியாது என்னை போன்று - தியானம் செய்யாதவரை உங்களுக்குப் புரியவே புரியாது.
பின் குறிப்பு:
சுகச் சுரங்கம் உங்களுக்குள் இருக்கிறது அதற்கு நானே சாட்சி.