Chapter 20

அன்று அங்கே

1 sections

அன்று அங்கே

மைல் கல் மேல் மயில் அமர்ந்திருந்தது அற்புதம் !

அருகே குடிசையில் ...

கால்சட்டையணிந்த இளம்பஞ்சு சம்மணம் போட்டு முயல்போல் அமர்ந்திருந்தது தியானத்தில் ... அதுவும் அற்புதம் !

குடிசை வெளியே…

நாய் ஒன்று வாய் பிளந்து குரைத்தது வால் ஆட்டிக் கொண்டே தன் எஜமானனைப் பார்த்தது என்ன கிடைக்கும் என்று ! நம்பிக்கையாய் ...

குடிசை உள்ளே ...

தியானம் ஒன்று கற்றுக்கொண்டு செய்தான் தியானத்தால் என்னவோ கிடைக்கும் என்று ! நம்பிக்கையால் ...

பின் குறிப்பு :

ஒரு நாள் நம்பிக்கை நிஜமாகும் அந்நாளில் நாய்போல் குரைக்கும் மனம் வாலாட்ட ஆரம்பிக்கும் பின்னாளில் அதுவே அழகாய் ஆடும் மயில் போல !