Chapter 16

ஒளிந்து கொண்ட இறைவனைக் கண்டுபிடி…

1 sections

ஒளிந்து கொண்ட இறைவனைக் கண்டுபிடி…

'பார்க்க வேண்டும் காட்டு உன் கடவுளை' கேட்ட நாத்திகனுக்குப் பதில் சொல்லாது வேர்த்திருந்தான் ஆத்திகன். 'மடையா ! ஒட ஓட ஓடறஇறைவனை நீ துரத்திவிட்டு, காட்டு கடவுளையென்று கிண்டலா செய்கிறாய் ? ' கேட்ட ஆன்மீகனின் புதிர்கேள்வியில் உதிரம் துடித்துப்போனது நாத்திகனுக்கு. 'வேதக் கூற்றுப்படி கண் காது மூக்கு வாய் தோன்று முன்னேயே ... உருவமேயில்லாத - மனிதக் கூட்டத்தோடு கடவுள் கொஞ்சிக் கொண்டிருந்தாரமே! சாத்தியமா இதெல்லாம்' வாதமிட்டு வம்பென்னும் அம்பெய்தினான் நாத்திகன்.

யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?

ஆன்மீகன் 'கடவுள் இல்லை நிரூபித்து விட்டோம்' கொக்கரித்த ரஷ்யாவின் ஜெயத்தொனியை கத்தரித்தது 'முதல் ஒரு செல் உயிரான அமீபாவை உயிரூட்டியது எது ?' என்ற கேள்வி.

கடவுள் இல்லவே இல்லை பரபரப்பு அறிக்கையிட்ட அறிவியல் ஆராய்ச்சிக் குழுவே மீண்டும் அறிக்கையிட்டது ...

'பூலோகத்தில் தோன்றிய முதல் உயிருக்குக் காரணமானது எதுவென்று தெரியவில்லை ஒருவேளை அது கடவுளாக இருக்கலாம்'.

'ஒருவேளை அது கடவுளாக இருக்கும்'. என நீங்கள் சந்தேகிப்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன் 'அதுதான் கடவுள்' கடவுளால் உயிரூட்ட முடியும்போது, உருவற்றதோடு கொஞ்ச முடியாதா ?

என ஆன்மீகன் கேட்டு நிறுத்தியதும் வம்பெனும் அம்பைத் தடுத்த குஷி ஆத்திகனுக்கு.

தொடர்ந்த ஆன்மீகன் 'கடவுளைக் காட்ட முடியாது காண மட்டுமே முடியும்

கடவுளை விளக்க முடியாது விளங்கிக்கொள்ள மட்டுமே முடியும்.

வகுப்புவாதத்திற்கும் சண்டைக்கும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பெயர் நாத்திகன் ஆத்திகன்

வாதமிடும்வரை வேதம் புரியாது இருவருக்குமே. ஆராய்ச்சிக்கும் அறிக்கைக்கும் அப்பாற்பட்டவன் ஆதிமுதல் தெய்வம் அனுபவத்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் அவனை ஆழ்ந்துசெல் உண்னுள்ளே அங்கே காத்துக் கொண்டிருக்கிறான் அருவ இறைவன்' ஆன்மீகனின் அதிரும் அதரச்சொற்களில் அமைதியாய்க் கரைந்தது ஆத்திகமும் நாத்திகமும் 'உனக்குப் பேசக் கற்றுக் கொடுத்த முதல் நாளிலிருந்து (நீ பேசியவை) ஆப்பிள் கொடு ! ஆடை கொடு ! ஆசீர்வதி என்னை ! என்று உன்னையே அன்றிலிருந்து மையமாக்கி இதைக் கொடு அதைக் கொடு என்று சதா இறைவனைத் தொந்தரவு செய்த அன்றிலிருந்து தப்பிக்க யோசித்த இறைவனுக்குத் தான் பதுங்கிக் கொள்ள ஒரிடம் கிடைத்தது ! ' அவ்வளவு எளிதில் எவனுமே கண்டுபிடிக்க முடியாத இடம் அது. ஆஹா என்ன அற்புதமான இடமிது ஒளிந்து கொள்ள! எண்றெண்ணி ஒளிந்து கொண்டான் உன் இதயத்துக்குள் ! இறைவனையும் உன்னையும் தொந்தரவு செய்யும் வெளிஉலக ஆசைகளைத் தாண்டாமல், உள்ளுலகில் ஒளிந்திருக்கும் இறைவனைக் கண்டே பிடிக்க முடியாது - இது தந்திரம் படித்த மனதுக்கு இறைவன் வைத்த 'செக்' இறைவனைக் காட்ட முடியாது காண மட்டுமே முடியும் அதுவும் அவனே அவனுள் பார்க்கும்போது மாத்திரமே' ' B

நாத்திகனாயிருந்தாலென்ன ஆத்திகனாயிருந்தாலென்ன வெளியே பார்க்கும்வரை பதிலில்லை உள்ளே பார்க்கும் போதுதான் பதிலிருக்கு '.

  • இருவருக்கும் குட்டு வைத்துக் கருத்துக் கதை கூறி முடித்தான் இறைவனைக் கண்ட ஆன்மீகன்.