ந்தைவுற்றப்படாத வார்த்தைகள் உங்களுக்குள் தொக்கி நன்றுவிடும்
ந்தைவுற்றப்படாத வார்த்தைகள் உங்களுக்குள் தொக்கி நன்றுவிடும்
பல சமயங்களில், நீங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்துக் கொள்ளுளும் வாக்குறுதிகளை ஞாபகம் கூட வைத்துக் கொள்வதில்லை; ஏனெனில், அந்தளவிற்கு அதைப்பற்றி சிந்திக்கக் கூட இல்லாமல், விழிப்பற்ற நிலையிலேயே வார்த்தைகளைக் கொட்டுகிறீர்கள். அது மற்றவர்களிடம் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக்கூட நீங்கள் புரிந்துகொள்வதில்லை.
நீங்கள் ஒரு வாக்குறுதியைக் கொடுத்து விட்டு அதைக் காப்பாற்றவில்லையென்றால், உங்களுக்குள்ளோ அல்லது மற்றவர்களுக்குள்ளோ அது ஒருவித தொடர்விளைவை விட்டுச் செல்கிறது. இந்தத் தொடர்விளைவு உங்கள்
சுய-நம்பிக்கையையும் அழித்து விடும். மற்றவர்கள் உங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் அழித்து விடும்.
உங்கள் வாழ்க்கையின் எந்த ஒரு பகுதியிலும் - அது உங்கள் உறவுமுறையிலாகட்டும், உங்கள் வியாபாரத்திலாகட்டும், எந்த ஒரு அம்சத்திலும் நீங்கள் விழிப்புணர்வற்ற வார்த்தைகளை உச்சரிக்கும்போது, வாழ்க்கை உங்களுக்கு எந்தவித பின்விளைவுகளைக் கொண்டு வரப்போகிறது என்பதைப்பற்றி நீங்கள் உணர்வதில்லை. வாழ்க்கை உங்களுக்குத் தொடர்ந்து அதிர்ச்சிகளையே கொண்டுவந்து கொண்டிருந்தால், ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் ஒருங்குவித்தலில் வாழவில்லை!