பொறுப்பெடுத்தலை உங்களைப் பலசாலியாக்கும்
பொறுப்பெடுத்தலை உங்களைப் பலசாலியாக்கும்
பொறுப்பெடுத்தல் என்பது ஒரு சுமை என்றுதான் நாம் எப்போதுமே நினைக்கின்றோம். இல்லை! அது ஒரு சக்தி! பொறுப்பு, நேரடியாகவே உங்களை தலைமைப்பண்பு உணர்விற்கு எடுத்துச் சென்றுவிடும்.
உங்களுடைய குடும்பத்திற்கு மட்டுமே பொறுப்பு என்று உணரும் வரை, நீங்கள் உங்களுடைய வீட்டுக்குத் தலைவராகிறீர்கள். சமுதாயத்திற்குப் பொறுப்பு என்று உணரும்பொழுது, நீங்கள் சமுதாயத்திற்கு தலைவராகிறீர்கள். உங்களுடைய பொறுப்பெடுக்கும் தன்மை விரிவடைய விரிவடைய, உங்களுடைய தலைமைப்பண்பும் விரிவடையும். மொத்தப்பிரபஞ்சத்திற்கே பொறுப்பெடுக்க உணரும் தீர்மானமே ஞானத்தன்மை! எல்லாவற்றுக்குமே நானே பொறுப்பு என்று உணர்வதும், 'அந்த உணர்வுக்கேற்ற வாழ்க்கையை வாழ்வேன்' என்று பிரகடனப்படுத்துவதும்தான் 'பொறுப்புப் பிரகடனம்' (Responsible declaration) எனப்படுகிறது. இதுவே இந்து ஆன்மிகப் பயிற்சியில் நீத்த்யாசனம் என்றறியப்படுகிறது. பொறுப்புப் பிரகடனம், உங்களுள் உள்ள உணர்வின் சக்தியை விடுவிக்கிறது.