Chapter 29

உங்களுடைய பிரம்மாண்டத்தன்மை உங்களைப் பயமுறுத்துகிறது

1 sections

உங்களுடைய பிரம்மாண்டத்தன்மை உங்களைப் பயமுறுத்துகிறது

நீங்கள் எப்போதுமே, உங்களுடைய சிறிய தன்மையால்தான் திக்கு முக்காடுகிறீர்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள். இல்லை! நீங்கள் உங்கள் பிரம்மாண்டத்தன்மையால் தான் திக்குமுக்காடிப் போகிறீர்கள்! எப்போதெல்லாம் உங்களுடைய பிரம்மாண்டத்தன்மை உங்களை விரிவடைய வற்புறுத்துகிறதோ, உங்களை விரிவுப்படுத்த நீங்கள் நிர்பந்திக்கப்படுகிறீர்கள் என்று எப்போதெல்லாம் உணர்கிறீர்களோ, அப்போதெல்லாம் உங்களை உங்களுடைய சௌகரியமான வட்டாரத்திற்குள் மேலும் சுருக்கிக் கொள்கிறீர்கள். உங்களுடைய சோர்வுத் தன்மை, உங்களுடைய பலஹீனம், உங்களுடைய சக்தியற்றதன்மை இவை எல்லாமே உங்களுடைய பிரம்மாண்டத்தைப் பார்க்க நீங்களே கொண்டிருக்கும் எதிர்பார்ப்புத்தன்மையே தவிர, வேறொன்றில்லை.

அதனால்தான் யாராவது உங்களிடம், ''நீங்கள் ஏழை, பலஹீனமானவா், பாவம் செய்தவர்,'' என்று சொன்னால் அதை ஒப்புக் கொள்வதென்பது உங்களுக்கு மிக எளிதாக இருக்கிறது. ஆனால், யாராவது உங்களிடம், 'நீங்கள் தெய்வீகமானவர், நீங்கள் சக்தி மிக்கவர், நீங்கள் முமுமையானவர்,'' என்று சொன்னால், உடனே உங்களுடைய மொத்த அடையாளமும் பயத்தால் நடுங்க ஆரம்பித்து விடுகிறது. ஆனால் வாழ்க்கை உங்களிடமிருந்து எப்போதும் விரிவாக்கலையே எதிர்பார்க்கிறது. எனெனில் விரிவடைதலே வாழ்வின் இயல்பான விதி! அதனால்தான் நீங்கள் வாழ்வைப்பற்றி அவ்வளவு ஆழமான ஒரு பயத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.

குறிப்பாக, மற்ற மக்கள் வடிவத்தில் இருக்கும் வாழ்க்கையைப்பற்றி அதிக அளவு பயத்தைக் கொண்டிருக்கிறீர்கள்-ஏனெனில் மக்கள்தான், வாழ்வின் சிறப்புமிக்க, உயிர்ப்புள்ள வெளிப்பாடுகள்! நீங்கள் வாழ்க்கையுடன் எந்த அளவுக்கு அதிகமாக உங்களைப் பிணைத்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கான விரிவாக்கத்தை உங்களிடமிருந்து அது எதிர்பார்க்கிறது. எப்போதெல்லாம் பலஹீனமாகவும், சக்தியற்றும், சோர்வாகவும் உணர்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் இது: 10 பொறுப்புகளை எடுத்து, அவற்றை ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் செய்து முடிப்பதற்கான வாக்குறுதி கொடுங்கள். உங்களுக்குள் பலஹீனமும், சோர்வும், சக்தியற்ற நிலையும் வளர்வதற்கான வழியே இல்லாத வகையில், அந்த ஒப்பிய பொறுப்புக்கள் மூலம், உங்கள் உள் உணர்வை மிக பலமாக உலுக்குங்கள்.