Chapter 9

6. யோகி ராம் சூரத் குமாருடன்

1 sections

6. யோகி ராம் சூரத் குமாருடன்

திருவண்ணாமலை கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள சின்ன நந்திக்கு எதிரே இருக்கும் படிக்கட்டில் அமர்ந்து கொண்டிருப்பது யோகி ராம் கூரத்குமாருக்கு வழக்கமான ஒரு விஷயம். இளம் மாணவர்கள் யோகியை வணங்கி, "சாமி, நான் இந்தப் பரீட்சையில் தேறி விடுவேனா?" என்று கேட்பது வழக்கம். யோகி சிலசமயம் ஏதாவது பதில் கூறுவார். பெரும்பாலும் பதில் கொடுக்க மாட்டார். சில சமயங்களில் "ராம், ராம்" அல்லது "போய் வா" என்பார். இதனால் அவரை ஒரு புரியாத புதிராகவே எல்லோரும் நினைத்தனர். ஒரு முறை ராஜசேகரன் வணங்கி எல்லோரும் போல் "சாமி, நான் பரீட்சையில் தேறி விடுவேனா?" எனக் கேட்டார். அவரோ, "நீ வாழ்க்கைப் பரீட்சையில் தேறிவிடுவாய்" என்றார்.

ராஜசேகரனுக்கு ஏதோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் பகில்ளிப்பது போல தோன்றியது. என்வே விளக்கம் கேட்டு நின்றார். யோகி சொன்னார், "போ, போ, இது இப்போதைக்குப் புரியாது; ஆனால் போகப் போக இந்த வார்த்தைகளை நீ மறக்க மாட்டாய்" என்றார்.

மெல்ல மெல்ல யோகியின் வார்த்தைகளில் இருந்த அர்த்தம் சிறுவனுக்குப் புரிய ஆரம்பித்தது. இன்றளவும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அந்த வார்த்தைகளை நினைவில் வைத்திருக்கிறார்.