Chapter 10

7. வகுப்பறையில் ஜயப்பன் தரிசனம்

1 sections

7. வகுப்பறையில் ஜயப்பன் தரிசனம்

ஒரு நாள் வகுப்பிற்குத் தாமதமாக வந்தததால் அனுமதி வேண்டி வகுப்பு வாசலில் நின்று கொண்டிருந் தார் ராஜசேகரன். அது கணித வகுப்பு. கணித ஆசிரியர் ஏதோ குனிந்தபடி எழுதிக் கொண்டிருந்தார். அவர் ஐயப்ப பக்தர். உள்ளுணர்வு தூண்டப்பட்ட வராய் வாசலை நோக்கித் திரும்பிப் பார்த்தார். பார்த்ததும் திடீரென்று ஏதோ மாயக் காட்சியைக் கண்டது போல் செயலற்றுச் சில வினாடிகள் எழுந்து நின்றார். பின் ராஜசேகரனுக்கு வணக்கம் தெரிவித்தார்.

வகுப்பு முடிந்ததும் ஆசிரியர் சிறுவனைத் தன் வீட்டுக்குச் சாப்பிட வருமாறு அழைத்தார். அழைத்திருந்தபடி ராஜசேகரன் ஆசிரியர் வீட்டிற்கு வந்தார். மாணவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவர் காலில் விழுந்த ஆசிரியர் "நீங்கள் என் குருநாதர்" என்றும் "நான் தங்கள் சிஷ்யர்" என்றும் கூறினார். மேலும் "நான் உங்களைப் பார்க்கும்போது சுவாமி ஐயப்பனைத் தரிசனத்தில் கண்டேன்" என்றார். அந்த நிமிடம் ராஜசேகரனால் 'என்ன நடக்கிறது, என்ன பேசுகிறார் இவர்' என்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.