Chapter 7

1. பாட்டனார்க்டன்

1 sections

1. பாட்டனார்க்டன்

பாட்டனார் ராஜி முதலியார் பேரன் ராஜசேகரனை தனக்கு கிடைத்த பொக்கிஷமாகவே நினைத்து கொண்டாடினார்கள்.

ராஜசேகரன் நடக்க ஆரம்பித்த காலத்திலிருந்து பாட்டனாரும், பல அன்மீகக் கதைகளைச் சொல்லி வளர்த்தார்கள். வளரும் போதே, ஒர் ஆன்மீகச் கும்நிலையில் வளர்ந்தார்.

ராஜசேகரனுக்கு முதன் முதலில் கிடைத்த அன்பளிப்பு "விநாயகர் விக்ரகம்!". பிறந்த நாள் பரிசாகக் கிடைத்த இந்த விக்ரகத்தை ஏதோ ஒர் உயிரை பாவிப்பது போல பாவித்துப் பாதுகாத்து வந்தார்.

பால்ய பொழுதில் அந்த விக்ரகத்தை வைத்து பூஜை செய்ய அரம்பித்துவிட்டார். சிறுவன் அவனுக்கே உரிய பால்ய மொழியில் விக்ரகத்திற்கு பூஜை செய்து. படையல்கள் படைத்துவிட்டு, "நாளைக்கு காலையில் வரும் போது எல்லாத்தையும் சாப்பிட்டிருக்கணும், இல்லனா உன்ன கிணத்துல தூக்கிப் போட்டுடுவேண்!" என்று பேச உரிமையும், பக்தியும் கலந்த கலவையாக ஆன்மீகப் பாதையில் காலடி எடுத்து வைத்தான்.

் சிறுவனைப் பாட்டனார் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் சென்று கண்ணப்பர், மார்க்கண்டேயன், பிரகலாதன் போன்ற மகான்களின் கதைகளைச் சொல்லுவதுண்டு. இது போன்ற கதைகளைக் கேட்டு முடித்தவுடன் சிறுவன் வீட்டிற்குச் சென்று குடும்பத்தில் உள்ள எல்லோரையும் அழைத்து, தான் கேட்ட கதைகளை ரசனையோடு சொல்லும் விதத்தையும், அர்வத்தையும் இன்று நினைத்தாலும் குடும்பத்தார் புரிப்படைகிறார்கள்.

  1. பாட்டியிடன் ட

பாட்டி தனுக்கோடி அம்மாளுக்கு பேரனின் மீது கொள்ளைப் பிரியம். துருதுருவென இருக்கும் கட்டிப் பேரனுக்குப் பரிசளிக்க நினைத்தார். ராஜசேகரணைக் கூப்பிட்டு வீட்டின் நகைப் பெட்டியைத் திறந்து காண்பித்து "உனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்" என்றார். சிறுவனுக்கு ஒரே குஷி.

தங்க நகைகளில் எந்த நகையைப் பேரன் எடுக்கப் போகிறான் என்று பாட்டி ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

நகைப் பெட்டியை உற்சாகத் துள்ளலோடு பார்க்க ராஜேஸ்வரன் தங்க நகைகளுக்கு நடுவே இருந்த ருத்ராட்ச மாலையை அதே துள்ளவோடு தாவி எடுத்துக் கொண்டான். பாட்டிக்கு ஒரு கணம் ஒன்றுமே புரிய வில்லை. இந்தச் சிறுவயதில், ருத்ராட்ச மாலை மேல் எப்படி ஆசை வந்தது என்பது பாட்டிக்கு மிகப் பெரிய வியப்பாக இருந்தது.

  1. ரகுபதி யோகியுடன்

திபெத்திலும், பர்மாவிலும் யோகமூம், தாந்திரிகமும் கற்றுத் தேர்ந்து மற்றவர்களுக்கும் கற்றுத் தந்து கொண்டிருந்த ரகுபதி யோகியுடன் சுமார் ஐந்து வயதில் அறிமுகம் ஏற்பட்டது.

யோகி என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்தாற்போல் உடலமைப்பு கொண்டிருந்தார் ரகுபதி யோகி. சிறுவன் ராஜசேகரனை தினம் கோயிலுக்கு அழைத்துச் செல்வதும் அங்கு தினம் "யோகம்" கற்றுக் கொடுத்துச் செய்ய வைப்பதுமாய் இவர்களின் நட்புறவு தொடர்ந்தது.

கிருத்திகை மண்டபத்தில் யோகி இவருக்கு சக்தி தீட்சை கொடுத்தார். தீட்சை பெற்ற அதே கணம் ராஜசேகரனுக்கு பராசக்தியின் தரிசனம் கிடைத்தது. யோகியும் நடந்ததை உணர்வுபூர்வமாக அறிந்து கொண்டார். சிறுவனிடம் "பராசக்திதான், இனி உன் இஷ்டதேவதை" என்று கூறினார்.

வீட்டிற்கு வரும் வழியெங்கும் தரிசனத்தில் தோன்றிய பராசக்தியின் நினைவாகவே சிறுவன் நடந்து வந்தான். வீடு வந்ததும் முதல் வேலையாக ஒரு மாவுக்கல்லை எடுத்து, வெறும் கோணி ஊசி கொண்டு, தரிசனத்தில் பார்த்த அம்பிகையின் சிலையை உருவாக்கினான்.

"பிற்காலத்தில் நீ ஒரு பெருந்துறவி" அவாய் என்று ரகுபதி யோகி ஆரூடம் கூறினார்.