Chapter 6

2. பிறப்பின் ரகசியம்

1 sections

2. பிறப்பின் ரகசியம்

முக்காலத்தையும் உணரும் நான அனுபவம் கிடைத்த பின் அவருடைய பிறப்பைப் பற்றி ஞான தரிசனத்தில் தெரிந்து கொண்டதை பக்தர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னது, "என்னுடைய உடலில் பகுந்து கொள்வதற்கு முன்பும், புகுந்த பொழுதும் இருந்த நிலைகள் எல்லாமே எனக்குத் தெளிவாக நினைவில் இருந்து தெரிகிறது. எல்லாம் நானாக இருக்கும் நினைவில் இருந்து பூமியைப் பார்த்தேன். பூமி இருளால் கவ்வப்பட்டிருந்தது. காற்று மண்டலம் அமைதியாக இருந்தது. அப்போது தென்னிந்தியாவின் ஒரு மூலையில் நட்சத்திரம் போன்ற ஓர் ஒளியைக் கண்டேன். அடுத்த

வினாடியே அந்த ஒளியில் புகுந்தேன். கண் விழித்துப் பார்த்தேன். அது திருவண்ணாமலையில் பிறந்திருப்பது தெரிந்தது. அந்த க்ஷனத்தில் தான் நான் உடலில் புகுந்து இந்தப் பிறவியை எடுத்தேன்."

தன் சூட்சும உடலிலிருந்து ஸ்தூல உடலில் புகுந்த பிறகு திருவண்ணாமலைக் குன்றில் தன் ஞானக் கண்ணால் கண்ட காட்சிதான் மேலே தரப்பட்டுள்ள பிறப்பின் ரகசியம்

குடும்ப வழக்கப்படி அவர் பிறந்த பத்தாம் நாள் ஜாதகம் கணிக்கப்படுவதற்காகக் குடும்ப ஜோதிடர் அழைக்கப்பட்டார். அவரது ஜன்ம திதியில் நசுஷத்திரங்களின் போக்கை மிகவும் கவனத்தோடு கவனித்து, "இவர் கன்யா ராசி, கன்யா லக்னத்தில் பிறந்தவர். இந்த ஜாதகத்துக் கணிப்பின்படி இவர் ஒரு நாள் உலக வாழ்க்கையைத் துறந்து சந்நியாசியாகி விடுவார்" என்று சொன்னார்.

தங்கள் மகன் சந்நியாசியாகப் போய்விடுவான் என்று தெரிந்து கொண்ட கணம் பெற்றோர்கள் மிகவும் மனக் க்ஷ்டத்திற்கு ஆளானார்கள்.

"இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா" என்று ஜோசியரைக் கேட்டத்த்த "இந்த கணிப்பு இம்மி அளவு கூடப் பிசகாது, நான் கூறிய படி நடந்தே தீரும் தன் ஜாதகம் பற்றி தெரிந்து கொள்ளாதவரை - சந்நியாசி அவது கொஞ்சம் தாமதப்படும்; அவ்வளவுதான்" என்று முடித்துக் கொண்டார்.

இப்படித்தான் நடக்கும்; இதுதான் இறைச் சித்தம் என்று தெளிவாகத் தெரிந்த பின் பெற்றோர் தங்களைத் தேற்றிக் கொண்டு, தங்கள் பிள்ளை சன்னியாசியாகத்தாவ் போக வேண்டியிருந்தால் அப்படியே நடக்கட்டும். நாம் நமது பிள்ளையின் எந்தச் செயல்களிலும் குறுக்கிட வேண்டாம் என்று தெளிவான முடிவுக்கு வந்தார்கள்.