Chapter 25

1. சுவாமிகளின் தரிசனம்

1 sections

1. சுவாமிகளின் தரிசனம்

தமிழ்நாட்டில் அசிரமம் அமைக்கக் கோரி பக்தர் ஒருவர் நன்கொடையாகக் கொடுத்த நிலத்தில் காலடி வைத்ததில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMக்குத் தரிசனம் கிடைத்தது. அதில் பெரிய ஆலமரத்தோடு கூடிய நிலம் ஒன்று பெங்களூரில் இருப்பதாகவும், அதுதான் தலைமையகமாக அமையும் என்றும் தெரிந்ததாகச் சுவாமிகள் கூறினார்.

சில நாட்கள் கழித்து பெங்களூரில் நோயாளி ஒருவருக்கு சிகித்சை அளித்துக் கொண்டிருக்கும் போது, அன்பர் ஒருவர் தட்சணாமூர்த்தியைத் தான் தரிசனத்தில் கண்டதாகவும், அவர் நிலத்தை தானமாகக் கொடுக்கச் சொல்லிப் பணித்ததாகவும் கூறினார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "என்னப்பா உண்மையா என்னைத் தான் தரிசனத்தில் பார்த்தாயா? இது விளையாட்டு விஷயமல்ல. ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலம்." அன்பர் "இல்லை சுவாமிஜி உங்களை நேரில் பார்க்கும் முன்பே நான் இந்த தரிசனத்தைக் கண்டுவிட்டேன். எனக்கு உறுதியாகத் தெரியும் அது சாக்ஷாத் நீங்கள்தான்" என்று கூறி ஆசிரமத்திற்கான நிலத்தைத் தானமாகக் கொடுத்தார். பார்வையிடுவதற்காக அந்த நிலத்திற்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வந்தபோது தரிசனத்தில் தான் பார்த்த அதே ஆலமரம் அங்கே இருப்பதைப் பார்த்தார். வியந்து போனார்!