2. ஆசிரமத்தில் நிகழ்ந்த முதல் அதிசயம்
2. ஆசிரமத்தில் நிகழ்ந்த முதல் அதிசயம்
ஒருமுறை ஆசிரம நிலத்தைச் சுற்றிப் பார்வை யிடுவதற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வந்திருந்தார். அங்கே மக்கள் கூடி நின்று எதையோ வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தார்கள். ஒரு குழியில் நிறை கர்ப்பமாக இருக்கும் பசு மாடு ஒன்று விழுந்து விட்டது. அதைக் காப்பற்றுவதற்காக கயிறுகளை அங்கும் இங்குமாகப் போட்டு மேலே சிலர் இழுக்க, சுற்றி இருக்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்த மிரட்சியில் மாடு ஒரு கட்டுப்பாடே இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இந்த முழு நிலைமையையும் தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டே வந்தார்கள். முதலில் மாட்டைச் சுற்றியிருக்கும் கயிறுகளை அகற்றக் கட்டளையிட்டார். பின் சுற்றி நின்று கொண்டிருந்தவர்களைக் கொஞ்சம் விலகி நிற்கச் சொல்லிவிட்டுப் பசுவின் கண்களை நேருக்குநேர் பார்த்து "வெளியே வா" என்ற ஒரே ஒரு மனக்கட்டளையைப் பிறப்பித்து விட்டு "பசு தானாக வெளியே வந்துவிடும்" என்று கூறிவிட்டுத் திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டார்.
என்ன ஆச்சரியம்! அந்தப் பசு தானாகவே குழியில் இருந்து வெளியேறி விட்டது.
இது எப்படிச் சாத்தியம் சுவாமிஜி என்று உடனிருந்தோர் வினவ_
"அதனுடைய இயற்கையான ஞான சக்தியை வெளிப்படுத்த உதவினேன். அவ்வளவே" என்றார்.