Chapter 24

6. ஞானம் அடைதல்

1 sections

6. ஞானம் அடைதல்

மர்ண பயத்தைத் தாண்டிய அனுபவத்தோடு அவர் மீண்டும் தெற்கு நோக்கிப் பயணம் செய்தார்.

ஆழ்ந்த தவம், ஆழ்ந்த தியானம், அநேக தபஸ் ஆகியவற்றில் தூய்மை அடைந்த உடலையும்; தனிமை, வெறுமை, பசி, பட்டினி, 100 சதவிகிதம் பாதுகாப்பில்லாத வாழ்க்கை, ஆகியவற்றால் கிட்டதட்ட ஒரு கட்டுப் பாட்டிற்குள் வந்துவிட்ட மனத்தையும் உடலையும் விட்டு வெளியேறிய அனுபவம், இயற்கையோடு வாழ்ந்த அனுபவங்கள், தரிசனங்கள், மரண பயத்தைத் தாண்டிய அனுபவங்கள் அகியவற்றால் சில துளிகள் ஆத்மாவின் ஆனந்த நிலையைப் பற்றிய அனுபவங்களோடு -சுவாமிகளின் ஆன்மீகப் பயணம் பூரண ஞானத்தை நோக்கி மேலும் மேலும் செல்லத் துவங்கியது.

தியானத்தின் உச்சம் நோக்கி மனமும் உடலும், பக்குவப்பட் ஆரம்பித்தது. அதன் பிறகும் கூட வாழ்க்கையில் பூரண அனுபவம் கிடைக்கவில்லை. ஞானப் பாதை வெற்றி தவறிக் கொண்டே போவது போல் தோன்றியது.

தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவும் செய்த பின்பு ஞான அனுபவம் "ஏன் தள்ளிப் போகிறது?" என்று ஒரு மாதிரியான குழப்பம் ஏற்பட்டது. ஞான அனுபவம் கிடைக்கும் என்ற நம்பிக்கையே ஒரு கட்டத்தில் ஆட்டம் கண்டது.

கிட்டத்தட்ட விரக்தியின் உச்சத்தையே அடைந்து விட்டார். ஞானம் பற்றிய போதனைகள் எல்லாம் பிரமையோ, இல்லை தொடர்ச்சியாக சித்தரிக்கப்பட்ட பொய்களோ என்று எண்ணும் அளவுக்கு விரக்தி அவரை ஆட் கொண்டது.

"வாழ்க்கையின் ஏமாற்றங்களால் நான் தோற்கடிக்கப் படமாட்டேன்" என்று அவரது ஸ்திரமான மனஉறுதியும் குலைந்தது. தன் இலக்கினை எட்ட எவ்வளவு தீவிரமாக முயன்றாரோ அந்த அளவுக்கு இலக்கு அவரை விட்டு விலகிச் செல்வதைத் தெளிவாக உணர்ந்தார்.

"இனிமேலும் இப்படித் தீவிரமாக முயற்சிப்பதில் என்ன பயன்" என்று "இனி எல்லாத் தேடுதல் முயற்சிகளையும் கை விட்டு விடலாம்" என்ற முடிவோடு முழு விரக்தியில் செய்வதறியாது அப்படியே, அமைதியாகி விட்டார்.

அந்த விரக்தி வந்து சரியாக ஏழாம் நாள் பூரண ஞான அனுபவம் கிடைத்தது. சுவாமிகள் ஞான அனுபவம் பற்றி விளக்கும் போது சொன்னார், "திடீரென்று, சற்றும் எதிர்பாராத தருணத்தில், எனக்குள் ஒரு ஆனந்தமான சக்தி பெருகியதை உணர்ந்தேன்.

ஆனந்தமயமான உணர்வு அதிகமாகிக் கொண்டே சென்றது. நான் உணர்ந்து அனுபவித்த ஆனந்தக் கடலில் நான் கரைவதைத் தெளிவாக உணர்ந்தே நான் மறைந்து, தான் என்ற தெய்வீக உணர்வு வெளிப்பட்டது. காலம், நேரம்; உடல், மனம்; இடம், பொருள் தாண்டி 'தானே எல்லாமாகவும், எப்போதுமாகவும் இருத்தல்' போன்ற உணர்வையும், அனுபவத்தையும் பெற்றேன்."

"என் பலவருடக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்தது, பிரபஞ்ச உண்மைகள் தெளிவாகப் புரிந்தன. ஆனந்த அனுபவத்தை இதற்கு மேல் விளக்க வார்த்தைகள் இல்லை" என்றார். அதன்பின் அந்த அனந்த சுகத்திலேயே, தெய்வீக நிலையிலேயே நான் என்று தனி உணர்வற்ற. பொது உணர்விலேயே கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் கடுத்தார்.

மீண்டும் ஆனந்தப் பெருக்கில் ஆனந்தமாக முழுமையாக இருந்தபோது தமிழ்நாடு வரை வந்து, பிறகு மகாராஷ்டிரவுக்குச் சென்றார்.

ஒன்பது மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக மனதிலிருந்து வார்த்தை வர ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிருந்த சக்தி அதிகமாகிக் கொண்டே வந்தது. "ஆனந்தமாக இருங்கள்" என்ற முதல் வார்த்தைகள் வந்தன.

பின்பு தமிழ்நாட்டில் மக்களுக்கு நோய்களைக் குணப்படுத்தினார். ஆன்மீக அற்புதங்களையும், போதனைகளையும் நிகழ்த்திக் கொண்டிருந்தார். பிறகு இறைசக்தியின் சித்தப்படி பெங்களூரில் தியானபீடம் என்ற ஆசிரமத்தை உருவாக்கினார்.

ஒரு முறை சேலம் பக்தர்களுக்கு ஆன்மீகச் சொற்பொழிவு நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் ஆர்வம் மேலிட, "சுவாமி, நீங்கள் எங்களுக்கு ஏதாவது ஒரு அதிசயத்தைச் செய்து காட்டுங்கள்" என்று வேண்டினார்கள். சுவாமிகள், '' அதிசயம் என்பது செய்வது கிடையாது, அதிசயம் என்பது தானாக நடப்பது." "நீங்கள் அதிசயம் என்று நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் சித்து வேலைகளே.

உண்மையான அதிசயம் எப்போதுமே தானாகவே நடந்தேறும்" என்று அதிசயம் பற்றிய ஆன்மீக உண்மையை விளக்கி விட்டு, ஒரே சொடக்கில் வெறும் கையில் இருந்து ஒரு லஷ்மி விக்ரகத்தை வரவழைத்துக் கொடுத்தார்.

"அஹா_ என்ன அதிசயம், என்ன ஆச்சரியம்!" என்று வியந்தனர். சுவாமிகள், "மீண்டும் சொல்கிறேன், இது அதிசயம் அல்ல. இது சாதாரண சித்து வேலைதான், இதனால் உங்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை" - என்று ஒரு மிகப் பெரிய விஷயத்தைச் சாதாரணமாக விளக்கினார்.

VI உலக மக்களுக்கு ஆன்மீகப் பணியில்

தான் பெற்ற அந்த ஞான அனுபவத்தையும், அனந்தத்தையும், வாழ்க்கைத் தெளிவையும் இன்னல்களில் சிக்கித் தவிக்கும் மானிட குலத்திற்குச் சேவை செய்ய இறைசக்தியின் வழிகாட்டுதல் என்று தன்னை ஆன்மீகப் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டார்.

இதுவரை ஒரு லட்சம் பேருக்கு மேல் சுவாமிகளிடமிருந்து ஆன்மீகத் தொடுதலையும், ஆன்மீகக் கருத்துக்களையும் பெற்றிருக்கிறார்கள். ஏராளமான நோயாளிகள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMகளால் தொடப்பட்டு குணப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வளவு பணிகளையும் தியானபீடம் என்ற ஆசிரமத்தின் மூலம் செய்து வருகிறார். தியானபீடம் எனும் ஆன்மீக மையம் பெங்களூரில் இருக்கிறது. இந்த ஆசிரமம் அமைந்ததே ஓர் அதிசயம்தான்.