5. மரண பயத்தை வெல்லுதல்
5. மரண பயத்தை வெல்லுதல்
தேடுதல் தீவிரம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. தவம், தியானம் என்றே 24 மணி நேரமும் வாழ்ந்து வந்தார். பயணம் திடீர் திடீர் என்று மாறிப் பல்வேறு இடங்களுக்குச் சென்று கடைசியில் காசியில் வந்து நின்றது.
காசியில் மணிகர்னிகா காட் என்ற இடத்தில் நூற்றுக் கணக்கான பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன. அதைப் பார்த்ததும் சுவாமிகளின் மனதில் ஒரு உத்வேகம் தோன்றியது. "மரண ரகசியம் பற்றித் தெரிந்து கொள்ளாமல், உணராமல் இந்த இடத்தை விட்டு எழுந்திருக்கப் போவதில்லை" என்று உறுதி பூண்டார். மரண பயத்தை வெல்ல இரண்டரை நாட்கள் மௌன நிலையில் பொறுத்திருக்க வேண்டியிருந்தது.
அந்த நாட்களில் அவரது உடல் காலில் இருந்து மெல்ல மெல்ல இறக்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக மரண பயம் தெளிந்தது. முழு மௌன நிலையில் முழு விழிப்புணர்வோடு இருந்ததால் அந்த பயத்தை இரண்டரை நாட்களில் தாண்டிவிட்டார். அதற்குப் பின் பயம் என்பது ஏற்பட்டதே இல்லை.