Chapter 22

4. எலும்பு முறிவும் அதிசய குணமும்

1 sections

4. எலும்பு முறிவும் அதிசய குணமும்

தபோவனிலிருந்து திரும்பும் பொழுது சுவாமிகள் ஒரு ராணுவ வாகனத்தில் பயணம் செய்தார். அதில் வசதியாக உட்காருவதற்கான இருக்கைகளுக்கு பதிலாக மரப் பலகைகளை இருந்தன. திடீரென எதிர்பாராத ஒரு பள்ளத்தில் இறங்கி ஏறியதில் வாகனம் கொஞ்சம் தடுமாறியது. சுவாமிகளின் இடுப்பெலும்பில் ஏதோ ஒரு விரிசல் ஏற்பட்டது போன்ற உணர்வும், வலியும் தெரிந்தது. அந்த இராணுவ முகாமைச் சேர்ந்த மருத்துவர் மாவுக்கட்டு போட்டு விடுவதாகக் கூறினார். சுவாமிகள் அதை ஏற்கவில்லை. உள்ளங்கையால் தடவிவிட்ட படியே எல்லாம் சரியாகிவிடும்" என்றார்.

ஹரித்வார் சென்றதும் ஒரு மருத்துவமனையில் Radiograph எடுக்கப்பட்டது. அதைப் பார்த்த மருத்துவர் திகைத்துப் போனார். எலும்பு முறிவு இருந்தும், சுவாமிகள் எதுவும் நடக்காதது போல் இயல்பாக வலி இல்லாமல் இருந்ததைப் பார்த்து உடனே மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போனார். சுவாமிகள் முதன் முதலில் தனக்கே Healing செய்து கொண்டு, இன்று அதை உலக மக்கள் பலருக்கும் ஒரு பெரும் சேவையாகச் செய்து வருகிறார்.