Chapter 21
3. பஞ்ச தபஸ்
3. பஞ்ச தபஸ்
குரனப் பாதையில் பல தபஸ்களைச் செய்து வந்தார். அதில் ஒன்று பஞ்சதபஸ். விழிப்புணர்வை அதிகப்படுத்த தன்னைச் சுற்றித் தீயை எரியச் செய்து, தலையில் ஒரு தீச் சட்டியை வைத்துக் கொண்டு, தீ அணையாமல் இருக்கச் சில சிறுவர்களை அமர்த்திவிட்டுக் காலையில் இருந்து மாலை வரை செய்வார். இதுபோன்ற மிகக் கடினமான தபஸ்களை ஏன் செய்கிறீர்கள் என்று சிலர் கேட்ட தற்கு, "வெளியில் உள்ள தீ சுடுவதை விட, என்னுள் இருக்கும் தீ சுடுவதை என்னால் பொறுக்க முடியவில்லை, அதனால் தான் இப்படி" என்று சாதாரணமாகப் பதில் அளித்து விட்டார்.