2. ஓம்காரீஸ்வர் மலையில்
2. ஓம்காரீஸ்வர் மலையில்
இப்படி ஞானத் தேடுதலில் பல மலைகளில் அவர் அனுபவங்களை பெற்றிருந்தாலும் ஜன நடமாட்டமே இல்லாத ஓம்காரீஸ்வரா மலையில் ஏற்பட்ட அனுபவம் குறிப்பிடத்தக்கது. அந்த மலையில் இயற்கையிலேயே தியானம் செய்ய வசதியாக உட்காரும் வகையில் சிறு பிளவுள்ள ஒரு பாறை இருந்தது. வெகுநேரம் அந்தப் பாறையில் அமர்ந்தபடியே தியானம் செய்வார். ஒரு நாள் சாயங்கால வேளையில் ஜன நடமாட்டமோட்டமே இல்லாத அந்த மலைப் பகுதியில் தூரத்தில் மரத்தடியில் யாரோ ஒருவர் வருவது போல் தெரியவே ஆச்சரியம் தாளாமல் யார் அது என்று பார்க்க அந்த நபரை நோக்கி ஓடினார்.
அருகே சென்ற பிறகு அது மனிதன் இல்லை கரடி என்று தெரியவே சற்று திகைத்தார். என்ன செய்வது என்று தெரியாததால் வெறுமனே அமைதியாக அந்தக் கரடியைப் பார்த்தார். இவ்வளவு அருகே வந்தபின் தப்பிக்க முடியாது எனவே என்ன நடக்கிறதோ நடக்கட்டும் என்று அமைதியோடு கரடியைப் பார்த்தார். சில நொடிகள் கரடியும் என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்து விட்டு, வலதும், இடதுமாக உடலை ஆட்டித் திரும்பிச் சென்று விட்டது, அமைதியாக.