1. மஹா அவதார் ஸ்ரீ பாபாஜியோடு
1. மஹா அவதார் ஸ்ரீ பாபாஜியோடு
இப்படியாக, தேடுதல் என்னும் தீ அவரை இமயமலை வரை அழைத்துச் சென்று விட்டது. அங்கே கங்கோத்ரிக்கு அப்பால் உள்ள தபோவனம் அருகில் தவமேற்றுக் கொண்டிருந்தார். அப்போது அவர் இருந்த இடத்தை ஜடாதாரியான, கட்டுடலும், நீண்ட தலைமுடியும், தெய்வீகத் தன்மையைப் பிரதிபலிக்கும் முக அமைப்பும் பாவமும் கொண்டவராக ஒரு மனிதர் கடந்து சென்றார். அவரது இளமை மிளிரும் உடலும், நடையும்; வெளிப்பட்ட தெய்வீகத் தன்மையும் நமது சுவாமிகளை "இவர் நிச்சயம் ஏதோ ஒரு பெரிய மகானாகத்தான் இருக்க வேண்டும்" என்று உணரவைத்தது.
அந்த மனிதர் சுவாமிகளை தாண்டும் போது "பரமஹம்ஸ ... நித்யானந்த ..." என்ற வார்த்தைகளை உதிர்த்தவாறு கடந்து சென்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு தாடியோடு வந்த ஒரு வயதானவர் சுவாமிகளைப் பார்த்து, "நீங்கள் பாபாஜியை சந்தித்தீர்களா?" என்று கேட்டார். (தன்னைக் கடந்தது மகா அவதார் பாபாஜி என்ற விஷயம் சுவாமிக்கு அப்போது தெரியாது)
"பாபாஜியா! யார் அவர்? அப்படி யாரையும் நான் சந்திக்கவில்லையே", என்றார் சுவாமிகள்.
"இல்லை இல்லை! உங்களைப் பார்த்த உடனேயே நீங்கள் பாபாஜியின் தரிசனம் பெற்றவர் என்பதை உணர முடிகிறது. நான் பாபாஜியின் சிடன்" என்றார்.
பாபாஜி உதிர்த்த "பரமஹம்ஸ . . நித்யானந்த" என்ற வார்த்தைகளுக்கு என்ன பொருள் என்று அப்போது அவரால் உணர முடியவில்லை. பின்னர் சுவாமிகள் சந்நியாசம் பெற்றுக் கொள்ளும் போது அவருக்கு நித்யானந்த என்று பெயர் அருளப்பட்டபோது பாபாஜியை நினைத்து ஆச்சர்யப்பட்டார், பரவசம் அடைந்தார்.