Chapter 18
3. இமயமலையில் சுவாமிகள்
3. இமயமலையில் சுவாமிகள்
வடக்கே சாதுக்களிடம் டிக்கெட் கேட்பதில்லை, அவர்கள் எங்கு வேண்டுமானாலும் ரயிலில் செல்லலாம். சுவாமிகள் ஏதாவது ஒரு ரயிலில் ஏறுவார். மனதுக்குப் பிடித்தமான இடத்தில் இறங்கிக் கொள்வார். ஏதாவது ஒரு திசையில் பயணப்படுவார். நடந்து நடந்து களைத்துப் போனால் அடுத்த ரயிலில் ஏறி வேறு இடத்திற்கு போவார். இந்த ரயில் எங்கே போகிறது, இது எந்த இடம் என்று எதையுமே தெரிந்து கொள்ளமாட்டார். ஜன்னலுக்கு வெளியே பார்ப்பார். இடம் பிடித்திருந்தால் இறங்கிவிடுவார்.