Chapter 16

1. பரிவராஜக வாழ்க்கை

1 sections

1. பரிவராஜக வாழ்க்கை

பதினேழு வயது முடிந்து ஆறு மாதம் ஆன நிலையில் தன் ஆன்மீகத் தேடுதலின் மிகத் தீவிரமான கட்டத்தை நெருங்கி விட்டார். வீட்டை விட்டு வெளியேறினார்.

சில காலம் ஆன்மீக ஸ்தாபனங்களிலும், சில காலம் மலைகளிலும் கழித்தார்.

இறைவனை நோக்கித் தவம்; தியானம்; சாஸ்திரங்களைப் படிப்பது வேதங்களைப் படிப்பது. ஞானிகள் பலரைச் சந்திப்பது, ஞான வழிகள் என்று பல்வேறு தெய்வீக, ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டார்.

இமயம் முதல் குமரி வரை பல தீர்த்த ஸ்தலங்கள், கோயில்கள், புராதனச் சிறப்பு மிக்க இடங்கள் என்று யாத்திரை செய்தார். பாரதத்தின் குறுக்கும் நெடுக்குமாக 2000 கிமீக்கு மேல் நடந்து சென்றார்.