7. கிரிவலத்தில் கழுதைப் புலிகள்
7. கிரிவலத்தில் கழுதைப் புலிகள்
ஒரு முறை தொடர்ந்து 108 நாட்கள் கிரிவலம் செல்வது என்று உறுதியாக முடிவு செய்துவிட்டார். (எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கக் கூடாது என்பது சுவாமிகளின் அடிப்படை குணம்.) முடிவு செய்தபடி தொடர்ந்து கிரிவலம் சென்று கொண்டிருந்தார்.
ஒரு நாள் தான் ரசித்துப் படித்த பக்திப் பாடல்களை மனதில் பாடியபடி சென்று கொண்டிருந்தார். ஏதோ உள்ளுணர்வு மேலிடக் கவிதை பாடுவதை நிறுத்தி விட்டுக் கூர்மையாகப் பார்த்தார். பார்த்தவர் திகைத்தார்! எதிரே ஐந்து கழுதைப் புலிகள் நின்று கொண்டிருந்தன. என்ன செய்வது என்று எந்த முடிவும் எடுக்க முடியாத மனநிலையில் அப்படியே நின்று விட்டார்.
அப்போது அவரது உள் துடிப்பிலிருந்து "அருணாச்சலா ..." என்ற வார்த்தை வெளிப்பட்டது. எங்கிருந்தோ உரத்த குரல் கேட்டது. முதியவர் ஒருவர் கம்போடு ஓடி வந்தார். அந்த மிருகங்கள் அங்கிருந்து ஓடிவிட்டன. இதை அதிசயம் என்பதா? தெய்வச் செயல் என்பதா?