5. மரண அனுபவம் 1986
5. மரண அனுபவம் 1986
பல்வேறு ஆன்மீகப் பாதையில் வழி நடத்தியவர்களில் ஒருவரான அவரது பெரிய பாட்டியின் மரணத்தை சிறு வயதில் அருகில் இருந்து பார்த்தார். அப்படி மரணத்தைப் பார்த்தபின் "வாழ்க்கையில் என்னதான் இருக்கிறது என்று எப்பாடு பட்டாவது உணர்ந்தே ஆக வேண்டும்" என்று அவரது ஆன்மீகத் தேடல் என்னும் தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
6. கல்லூரி வாழ்க்கை
பத்தாம் வகுப்பு முடித்த கையோடு சுவாமிகள் குடியாத்தம் நகரில் விடுதி ஒன்றில் தங்கி ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். அங்கும் சக மாணவர்களோடு சேர்ந்து ஊர் சுற்றி நேரத்தை வீணாக்கவில்லை. ஆட்டம், பாட்டம், சினிமா, சேட்டை, கூத்து என்று வாழும் சக மாணவர்களின் வாழ்க்கை இவரைச் சிறிதும் ஈர்க்கவில்லை. "நீரின் மேல் இருக்கும் தாமரை" போன்று விடுதி வாழ்க்கையைக் கழித்தார்.
"நீ ஏன் எங்களோடு வெளியில் சுற்ற வருவதில்லை? இப்படித் தியானம், தியானம் என்று செய்து அப்படி என்னதான் சாதிக்கப் போகிறாய்?" என்று கேலி செய்தார்கள். சக மாணவர்கள் "என்னிடம் ஆசிர்வாதம் வாங்க நீங்கள் எல்லாம் வரிசையில் நிற்க வேண்டிய காலம் வரும் அப்போது புரியும் உங்களுக்கு" என்று ஏதோ ஒரு உத்வேகத்தில் கூறினாரே தவிர, பின்னாளில் இப்படியெல்லாம் ஞான அனுபவம் கிடைக்கும் என்றோ, கேலி பேசிய அந்த நபரே வரிசையில் நின்று ஆசிர்வாதம் வாங்குவார் என்றோ அவர் அப்போது நினைக்கவில்லை.
நேரம் கிடைத்த போதெல்லாம் தியானம், தியானம் என்றே ஏதாவது ஆன்மீக முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். படிப்பிற்காகப் பெரிதாக நேரம் எதுவும் ஒதுக்கவில்லை. பாடம் நடத்தும் போது கவனிப்பதிலேயே கருத்தைப் புரிந்து கொண்டுவிடுவார். "அது போதும் தேர்வுத் தாளை எதிர்கொள்ள" என்பது அவரது அனுபவம். அதிக மதிப்பெண்களை எடுத்து அவர் தன் கல்லூரிப் படிப்பை முடித்தார்.