93. உங்களுடனே இருக்கும் சகுனிதான் உங்களுடைய பட்டறிவ
# உங்களுடனே இருக்கும் சகுனிதான் உங்களுடைய பட்டறிவ
The intellect that remains with you is what Sakuni
ச்சகுனி யார் என்றால், உங்களை அறியாமலேயே, எல்லோர் மேலேயும், சந்தேகம் வரவமைக்கு, தன்மேல் மட்டும் சந்தேகமே வாாமல் பார்த்துக் கொள்கிற பட்டறிவுகான் சகுனி.
சகுனி, மற்ற எல்லோர் மீதும் துரியோதனதுக்கு சந்தேகம் வா வைத்து விட்டான்.
துரியோதனன் மனத்தில் எல்லோர் மேலும் சந்தேகம் வாவைத்து, எல்லோரையும் நம்ப விடாமல் செய்து விட்டான்.
ஆனால், இவன் மீது மட்டும் சந்தேகம் வராமல் பார்த்துக் கொண்டான்.
முதல் குற்றவாளி யார் ?
சகுனிதான்.
துரியோதனனை அழிப்பதற்காகவே, துரியோதனன் கூடவே உட்கார்ந்து கொண்டு, ஆனால் தன்னைத் தவிர, மற்ற எல்லோருமே துரியோதனனை அழிப்பதற்காகத்தான் இருக்கிறார்கள் என்பது போல, துரியோதனனுக்குப் புரிய வைத்து, துரியோதனனுடைய மனத்திலே மாயையை ஏற்படுத்தியவன் சகுனி.
நம்முடைய தர்க்க அறிவு அப்படித்தான்.
நம்மை அழிப்பதற்காகவே, நம்முடன் உட்கார்ந்து கொண்டு, அனால் அதைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் சந்தேகப்படுகிற மாதிரி பார்த்துக் கொண்டு, அதைச் சந்தேகப்படாமலே இருக்க வைக்கிற அந்தப் பகுத்தறிவுக்குத்தான் சகுனி என்று பெயர்.
அடுத்து சகுனியோடு யுத்தம்.
சகுனியை எப்படி அழிப்பது ?
நேர்கொண்டு அப்படியே அழிப்பது. அவ்வளவுதான்.
வேறு வழியே கிடையாது.
அதைக்கான் கிருஷ்ணர் செய்தார்.
தர்க்க அறிவை மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. புறந்தள்ளுவது மூலமாகவே அதை அழித்து விட முடியும்.
உங்களை அறியாமலேயே எல்லோர் மேலேயும் சந்தேகம் வரவமைத்து. தன்மேல் மட்டும் சந்தேகமே வராமல் பார்த்துக் கொள்கிற பட்டறிவு கான் சகுனி
சீடரின் பட்டறிவு எனும் சகுனியிடம் இருந்து அவரைக் காப்பாற்றுவதற்குதான் குருவே தவம் செய்தாக வேண்டும்.
சீ! சும்மா உட்கார் என்றால் பட்டறிவு அழிந்து போய்விடும். அதனால்தான் என்ன செய்தார்? மிக எளிமையாகச் சகுனியை கிருஷ்ணர் அமித்து விட்டார்.
மஹாபாரதத்திலும் சரி, உங்களின் வாழ்விலும் சரி பட்டறிவை அழிப்பது சுலபம்தான்.
ஆனால், அதற்கு உங்களைத் தயார் செய்வதற்கு ஞான சத்குருநாதன் பெரிய தவம் செய்தாக வேண்டும்.
படிப்படியாக உங்களுக்கான நுட்பங்களை தந்து, நம்பிக்கை தந்து, குருபக்தி ஆழமாக உங்களுக்குள் பொங்கும்வரை காத்திருந்து சகுனியை அழிக்க வேண்டும்.