Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

89. செத்த பிணத்தின் சொத்தை, சாகப் போகும் பிணங்கள் பங்கிடுதல்

# செத்த பிணத்தின் சொத்தை, சாகப் போகும் பிணங்கள் பங்கிடுதல்

The living corpses dividing the dead corpse's wealth

நன்கு ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், மரணத்தின் பின் நடக்கும் நாடகத்தை பார்க்கும்போது ஒரு பன்னிரெண்டு வயதுப் பையனின் உணர்வில் என்னனன்ன மாற்றங்கள் வரும் ? !

அடுத்து வருவதுதான் முக்கியமான நிகழ்ச்சி. பெரிய கொடுமை என்ன வென்றால், பிணம் நடுக்கூடத்தில் இருக்கிறது. பிணமாக அந்தப் பாட்டி ஒரு வீட்டில் இருக்க, ஆசாரியை அழைத்து வந்து பாட்டியினுடைய நகையைப் பாகம் பிரித்தார்கள். இதைச் சொல்லக் கூடாதென்றுதான் நினைத்தேன். ஆனால், பரவாயில்லை பதிவாகட்டும். வரலாற்றில் பதிவாகட்டும் என்றுதான் சொல்கிறேன்.

அப்போது நகையை இவர்கள் எல்லாம் சேர்ந்து பிரிக்க, எனக்குப் பக் என்றது.

இந்தப் பாட்டியினுடைய நகைப் பெட்டியைப் பார்த்த உடனே, எனக்கு வந்த முதல் எண்ணம் என்னவென்றால், ''ஆஹா, இந்தக் கிழவி மட்டும் இவ்வளவு பணத்தை இந்தப் பெட்டிக்குள் வைத்திருக்குமென்று தெரிந்திருந்தால், மொத்தத்தையும் எடுத்து மூலக்கடை செட்டியாரிடம் கொடுத்து, காலம் முழுக்க இந்தக் கிழவிக்கும் புகையிலை வாங்கிக் கொடுத்து, நானும் மிட்டாய் வாங்கித் தின்றிருப்பேனே!''

பாட்டி எப்போது பார்த்தாலும் "உன் அப்பாவிடம் போய் பணம் கேள்" என்றால்,

அவர் 10 பைசாதான் கொடுப்பார். அந்த 10 பைசாவில், 8 பைசாவிற்கு புகையிலை வாங்குவேன். அப்போதெல்லாம் பைசாவிற்கு மதிப்பு உண்டு.

8 பைசாவிற்கு புகையிலை, 2 பைசாவுக்கு மிட்டாய். சரி கதைக்கு வருவோம்.

நான், 'என்னடா இந்தக் கிழவி இவ்வளவு பணத்தையும் விட்டு போய்விட்டதே' என்று நினைத்தேன். பிறகு, அந்தப் பணத்தையெல்லாம் பங்கிடும்போது பார்த்தேன். அந்த வைர நகையையெல்லாம்

பிரிக்க வேண்டுமில்லையா ? ஆசாரி பாகம் போட ஆரம்பித்தார்.

கூட்டுக் குடும்பம் என்பதனால், அத்தனை பேரும் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். எனக்குப் பளிச்சென்று தோன்றிய முதல் விஷயம், 'ஆஹா, இந்தக் கிழவி ஒன்றையும் அனுபவிக்காமல் படுக்கைக்குக் கீழே வைத்துவிட்டுப் போய்விட்டது.

இரண்டாவது விஷயம், இந்தப் பைத்தியக்காரர்கள் இப்போது பாகம் போட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் மட்டும் என்ன செய்யப் போகிறார்கள் ?. அட இவர்களும் அதை அப்படியேதான் வைத்துவிட்டுப் போகப் போகிறார்கள்.

சரி சரி, செக்த பிணக்கின் நகைகளைச் சாகப் போகும் பிணங்கள் பாகம் இட்டுக் கொண்டிருக்கின்றன்' என்று உணர்ந்ததும், அது நிகழ்ந்தது. என்னுடைய பீஷ்மா் சாய்ந்தது. வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு அடியோடு சாய்ந்தது. சமூதாயத்தோடு கட்டப்பட்டிருந்த கட்டு அவிழ்ந்தது.

அப்போது என்ன நிகழந்தது என்று ஆழ்ந்து பார்த்தால் ... அதுவரை மொத்தச் சமூகத்தின் மேல் எனக்கு இருந்த மதிப்பு, என்னை வளர்த்த சமுதாய அமைப்பின் மேல் இருந்த மொத்த மரியாதை, எல்லாமே வீணாகப் போய்விட்டது.

அதுவரையில் மாமா என்றால் மாமா, சித்தப்பா என்றால் சித்தப்பா, அப்பா என்றால் அப்பா, தாத்தா என்றால் தாத்தா, பாட்டி என்றால் பாட்டி, அவர்கள் வகிக்கிற எல்லா மதிப்பு மரியாதைகளும், அவா்களின் எல்லா உறவுநிலைகளும், பொறுப்புக(ளும், ஆகிய எல்லாமே சத்தியம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதுதான் உலகம், அதெல்லாமே நிஜம், நிரந்தரம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

எதை நிஜம், எந்தச் சமூகத்தை சாஸ்வதம், நிரந்தரம் என்று நம்பிக் கொண்டிருந்தேனோ, அந்த எல்லாமே, அவர்கள் பிணத்தை வைத்துக் கொண்டே சொத்தைப் பங்கிடும்போதே உடைந்து தூள் தூளானது.

அந்த விளைவு என்னுடைய வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு வீழ்ந்தது. இதுதான் உலகம் என்ற என்னுடைய பீஷ்மா், இவ்வளவு தான் உலகமா! என்ற வெளிப்பாடாக மலாந்தது. புத்திசாலித்தனமாக உதித்தது.

பார்வையாளனாக இருந்து பார்த்தால் போதும்

Being a seer and witnesser is enough

ருன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இதைப் புரிந்து கொண்டீர்களானால் போதும், கட்டுறு மனப்பாங்கு எப்படி உங்களுக்குள்ளே இருக்கிறது. அதை எப்படி நீங்களே உலுக்கலாமென்று தெரிந்து கொள்வீர்கள்.

திரௌபதியின் சேலையைத் துகிலுரியும்போது, அதை பீஷ்மா பார்த்துக் கொண்டு சும்மா உட்கார்ந்து இருக்கிற வரைக்கும், அர்ஜுனனின் மனத்தில் பீஷ்மா ஹீரோவாக இருந்திருப்பார்.

அந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் பீஷ்மர் மட்டும் இல்லை, துரோணர் மட்டும் இல்லை, எல்லோருமே ஜீரோதான். யாருமே ஹீரோ இல்லை என்று அர்ஜுனனுக்கு உறைத்திருக்கும்.

அர்ஜுனனுக்கு அன்று உறைத்த மாதிரியே, எனக்கும் அப்போது உறைத்தது.

அடப்பாவிகளா! எடுக்கிறீர்களே! இதைத் தாண்டி அப்போது எனக்கு இருந்த ஒரே கஷ்டம் இதுதான் ... "இதற்கு மேல் மிட்டாய் வாங்க வருமானம் நமக்கு இல்லாமல் போய்விட்டதே!' என்ற சின்ன ஆதங்கம் மட்டும்தான்.

பார்வையாளனாக இருந்து பார்க்கும் போது பல விஷயங்கள் தெளிவாகப் புரியும் இந்த சமூகத்தினுடைய போலித்தனம் ஏமாற்றுத்தனம் தெளிவாக தெரியும்

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னடா இந்தப் பாட்டி பணம் இருந்தும் சாப்பிடாமல், நகையிருந்தும் உபயோகம் செய்யாமல், இப்படி விட்டுவிட்டுப் போய்விட்டதே! சொத்தை எடுத்துக் கொண்ட பைத்தியக்காரர்களும் அதேபோன்ற செயலில் மாட்டிக் கொள்வதாகத்தான் தெரிகிறது.

இவர்களுக்கு ஒன்றும் பணம் இல்லாமல் இல்லை.

ஆனாலும், இதைப் போய்ப் பங்கிடுகிறார்களே! இப்போது இப்படியெல்லாம் முதலில் யோசிக்க முடியுமா? இதில் எங்கோ இடிக்கிறதே!

அப்படியானால் இவர்கள் காண்பிக்கிற துக்கம், பொய்!

அதாவது, முதன்முறையாக இந்தச் சமூகத்தை பார்வையாளனாக இருந்து பார்த்தேன்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், பார்வையாளனாக இருந்து பார்க்கும்போது, பல விஷயங்கள் தெளிவாகப் புரியும்.

அப்படிப் பார்த்ததனால் இந்தச் போலித்தனங்கள்,

ஏமாற்றுத்தனங்கள் எனக்குத் தெரிந்தது.

அவர்களுடைய போலித்தன்மை, எனக்கு முதல் தடவையாக அப்போதுதான் உறைத்தது.

யாராவது பொது மக்கள் வரும்போது உட்கார்ந்து அழுகிறார்கள், ஆனால், வந்தவர்கள் வெளியில் சென்ற உடனே, கண்ணைத் துடைத்துக் கொண்டு, வீட்டு அறைக்குள் வந்து, நகையைப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். என்ன நாடகம் இது ? என்று பார்த்தேன்.

பாட்டி உயிரோடு இருந்தபோதுகூட இவர்களுடைய விருப்பம், பாட்டியை விட நகையின் மேல்தான் அதிகம் இருந்தது. ஆனால், அந்தப் பாட்டியோ மகா கெட்டிக்காரி.

எப்போப்பட்ட விஷயமாக இருந்தாலும், அந்தப் பெட்டியை மட்டும் திறக்காது! அதன் மேலேயே படுத்துக் கிடக்கும். அது அப்பேர்ப்பட்ட கிழவி.

இதெல்லாம் ஒரு பார்வையாளனாக இருந்து பார்த்தபோதுதான் புரிந்தது.

அந்தக் கிழவியின் சாமாத்தியம் வீணாகப் போய்விட்டது. நகைப் பெட்டியை அடைகாத்த கோழி போல பாதுகாத்தே வைத்திருந்த பாட்டி செத்துப் போய்விட்டது!

ஆனால், இந்தப் பைத்தியக்கார மனிதர்களுக்கு, அதைப் பங்கு போடு வதினால் என்ன வரப்போகிறது ? இவர்களுடைய சாமாத்தியமும், என்ன ஆகப்போகிறது? இந்தச் சாமர்த்தியமும் ஒரு நாள் வீணாகத்தான் போகப் போகிறது.

இவர்களும், அதையேதான் செய்யப்போகிறார்கள் என்று புரிந்ததும்... அந்த நகையை அவா்கள் பங்கிடுவதைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டேன். என்னால் கட்டுப்படுத்த முடியாததால் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்.

சிரிப்பதைப் பார்த்து திடீரென்று அங்கிருந்த உறவினர் ஒருவர் கோபத்தோடு பேசி னார்... ''ஏய்! வாயை மூடு, சிரிக்காதே! அழு!'' என்றார்.

நான் முயற்சித்துப் பார்த்தேன் எனக்கு அழுகை வரவில்லை.

அப்போது எனக்குள் ஒரே ஒரு சின்ன கல்டம்தான் இருந்தது, ''மிட்டாய் போய்விட்டதே!'' என்று.

அதுவும் கொஞ்சநேரம் கழித்துப் போய்விட்டது. ஒருவரின் மரணம், "மிட்டாய் போய்விட்டதே!'' என்ற துக்கத்தை மட்டும்தான் ஏற்படுத்தியது.

அப்போது, 'இவர்களுக்குத்தான் அது கூட இல்லையே ... கிழவி போய்விட்டது. அடித்தது லாட்டரி என்பது போலத்தான், இவா்களின் செயல் இருக்கிறது' என்று எனக்குத் தோன்றியது!

இப்படி யோசித்து கொண்டிருந்த போது ... மேலும் மேலும், இவா்கள் குனிந்து, குனிந்து அழுவதைப் பார்த்து இரண்டாவது முறையாக அடக்க முடியாத சிரிப்பு எனக்கு வந்து விட்டது.

வாழ்க்கையின் லட்சியம்

இரண்டாம் தரம் அருகேயிருந்தவர் பளார்! பளார்! என்று கன்னத்தில் ரெண்டு வைத்தார். "அமுடா, எல்லோரும் அழுதுகொண்டு இருக்கிறார்கள்! அழுடா, '' என்று சொன்னார்.

அப்போகே எனக்கு ஸ்கிரத் தன்மையும், தைரியமும் அதிகம்.

என்னை கையைப் பிடித்துக் கொண்டேன்.

அவர்களுடைய விரும்பம். பாட்டியை விட நகையின் மேல்கான் அதிகம் இருந்தது. அந்தப் பாட்டியோ மகா கெட்டிக்காரி.

கையை பிடித்துக் கொண்டே, ''இதற்குமேல்

ஒரு அடி அடித்தீர்கள் என்றால், வருகிறவர்கள் எல்லோரிடமும் நீங்கள் இங்கே செய்தது எல்லாவற்றையும் சொல்லிடுவேன். உள்ளே, நீங்க, அவர், அந்தம்மா எல்லாம் நகைக்கு எப்படிச் சண்டை போட்டுக்கொண்டீர்கள்! இதை எல்லோரிடமும் சொல்லிவிடுவேன், ' என்று மிரட்டினேன்.

அங்கே இருந்த எல்லாப் பெண்களும் சேர்ந்தே நகைகளைப் பாகம் போட்டார்கள், மூன்று வடம் செயின் ஒன்று இருந்தது. அதை ஒவ்வொரு வடமாக துண்டித்து, அதன் முகப்பை தனியாகத் துண்டித்து பாகம் போட்டார்கள்.

இன்னமும் தெளிவாக இதெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. வைர முகப்பு, பவழ மாலைகள், அதையெல்லாம் துண்டித்து, துண்டித்து பாகம் பிரித்தார்கள்.

உனக்கு இது, எனக்கு அது என்று பெரிய பேரமே, அந்த இடத்தில் நடந்தது.

வருபவர்களிடமெல்லாம், ''நீங்கள் செய்ததையெல்லாம் சொல்லி விடுவேன்,' என்று என் தற்காப்புகாகத்தான் அவரை மிரட்டினேன்.

Section 2

உடனே மற்றொரு சொந்தக்காரர் அங்கே வந்துவிட்டார். "உனக்குத்தான் தெரியும் இல்லையா, இவன் வாய் பெரிய வாயென்று. ஏண்டா, சும்மா இருந்து தொலையேண்டா, ஏண்டா இவனை அடிக்கிறாய் ? வருபவர்களிடம் எல்லாம் போய் சொல்லிவிட்டான் என்றால், அசிங்கமடா," என்று சொல்லி விட்டு, அந்த இரண்டு சொந்தக்காரர்களும் சேர்ந்து ஒரு அறையில் என்னை விட்டுப் பூட்டி வைத்து விட்டார்கள்இ அதுவும் பாட்டி ஏற்கனவே இருந்த அதே அறையில்!

வருபவரிடம் நான் எதுவும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காகவும், வெளியில் இருந்தால் நான் பெரிய தொந்தரவு என்பதற்காகவும் என்னைப் பூட்டி வைத்து விட்டார்கள்.

எல்லா ஜனங்களும் வந்துவிட்டுப் போகும் வரைக்கும் இவனை ''உள்ளே விட்டுப் பூட்டுடா,'' என்று உள்ளே விட்டுப் பூட்டிவிட்டார்கள்.

உண்மையில் புத்தருக்கு ஒரு போதி மரம் தந்த மாற்றம் போல

அந்த அமையில் எனக்குள்ளும் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது.

அப்போதுதான் மொத்தச் சமுதாயத்தின் மேலும், எனக்கு இருந்த மதிப்பு அப்படியே இடிந்து விழுந்தது.

கிராபிக்ஸில் காண்பிக்க வேண்டுமென்றால், அந்தக் காட்டவேண்டும்.

ஆழ்ந்து பார்த்ததால் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு ஒழிந்தது. இது எல்லாமே ஒரு போலித்தனம்தான் என்று புரிந்தது. இது சத்தியம் கிடையாது. நிரந்தரம் கிடையாது. வாழ்க்கைக்கு ஒரு உபயோகம் அவ்வளவுதான் என்பது புறியும்

சமூகம் என்கிற பெரியசுவர் ஒன்று அப்படியே இடிந்து கீழே விழுந்தது. அதில் உறவினர்கள், நண்பர்கள் அப்பா, அண்ணன், தம்பி, மாமா, பாட்டி, அம்மா இந்த எல்லா உறவுகளும் தனித்தனியாய் நொறுங்கி விழுந்தன. எல்லார் மேலேயும் இருந்த மரியாதை எனும் கோட்டைச் சுவா், மனக்கோட்டைச் சுவா் சுத்தமாக இடிந்து நொறுங்கி விழுந்தது.

வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு அன்றோடு ஒழிந்தது. வாழ்வு என்ற எல்லாமே ஒரு போலித்தனம்தான் என்று தெளிவாகப் புரிந்தது.

இந்த வாழ்க்கை சத்தியம் கிடையாது. இந்த மனிதர்கள் நிரந்தரம் கிடையாது. வாழ்க்கைக்கு உள்ள உபயோகமே, இவ்வளவுதான் என்பது மிக ஆழமான கோணத்தில் புரிந்தது.

உறவுகள் என்பது நிரந்தரம் கிடையாது. உறவுகளின் உபயோகமும் இவ்வளவதான். தேவைப்படும்போது, உபயோகப்படுவதாலேதான் உறவுகளே உயிரோடிருக்கின்றனவே தவிர, அவை நிரந்தரம் கிடையாது. அவை உணர்வு சம்பந்தப்பட்டவை கிடையாது. அவை சாஸ்வதம் அல்ல என்று தெளிவாகப் புரிந்தது.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், என்னுடைய 10வது நாள் சண்டை, அன்றைக்குத்தான் முடிந்தது. 10-வது நாள் சண்டை அன்றைக்குத்தான், என்னுள் சிகண்டியை முன் நிறுத்தினேன். என் பீஷ்மரை வென்றேன்.

அதற்கப்புறம் சமூதாயம் என்ற ஆட்டிலிருந்து வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு எனும் விலங்கிலிருந்து பூரணமாக விடுவிக்கப்பட்டுவிட்டேன்.