37. விமர்சனம் செய்வது முட்டாள்களின் வேலை
# விமர்சனம் செய்வது முட்டாள்களின் வேலை
Criticising isThe job of fools
நாம் எல்லோருமே நமக்குள்ளே இருக்கிற தாழ்வு மனப்பான்மையை மறைப்பதற்கு முயற்சி செய்கிறோம். அதனால்தான் எங்குச் சென்றாலும், நம்முடைய அடையாளத்தை, அந்தஸ்தை நிரூபிக்கும் முயற்சிகளையே செய்கிறோம்.
இயல்பிலேயே நீங்கள் அருமையானவா்கள். பெருமை பேசி உயிர் வாழும் அளவிற்கு இறங்க வேண்டிய அவசியமென்ன ? சிந்தியுங்கள்.
எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள்! ஒரு மனிதர் வந்து, ''என்னை இந்தக் கிராமமே முட்டாள், முட்டாள் என்று சொல்கிறது. நீங்கள் எப்படியாவது இதிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்,'' என்று சொன்னார்.
ஞானி கேட்டார் : ''கிராமமே முட்டாள் என்று சொல்லட்டும், அதற்கென்னப்பா ? அப்படித்தான் சொல்வார்கள். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாதே."
ஜீவன் முக்தி
இவர் சொன்னார் : ''இல்லை இல்லை சாமி, எல்லோரும் சொல்லிச் சொல்லி, இப்போது நானுமே அதை நம்ப ஆரம்பித்து விட்டேன். எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள்.''
அதற்கு ஞானி மிக அழகாகச் சொன்னார் : 'ஒரே வாரத்தில் இந்தக் கிராமமே உன்னை புத்திசாலி என்று சொல்ல ஆரம்பித்துவிடும். நான் சொல்வது ஒன்றை மட்டும் செய்." என்றார்.
இந்த மனிதருக்கு ஒரே ஆச்சரியம்! 'ஒரேவாரத்தில் மாற்றிவிடுவீர்களா? அப்படி என்றால், நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன். தயவுசெய்து சொல்லுங்கள்."
அதற்கு ஞானி சொன்னார் : "எதைப் பார்த்தாலும் விமா்சனம் செய்."
எதையுமே ஏற்றுக் கொள்ளாதே. யாராவது ஒருவா் வந்து, ''என்ன அழகான ரோஜா?'' என்று சொன்னால், ''ஹா! இதில் என்ன இருக்கிறது? இது என்ன பெரிய அழகு ? இதில் எத்தனை முள் பார்த்தாயா?'' என்று சொல்.
வேறு ஒருவர், ''என்னப்பா ரோஜா இது? இவ்வளவு முள்ளாய் இருக்கே?''என்று சொன்னால், ''முள்ளை ஏன் பார்க்கிறாய்? இவ்வளவு ஆழகான பூ இருக்கே! அதைப் பார்,'' என்று சொல்.
இன்றும் வேறு ஒருவர், ''என்ன அழகான நிலா!' என்று சொன்னால், ''ச்சே! என்ன பெரிய நிலா ?. நடுவில் பார். கறுப்பு கறுப்பாக இருக்கிறது. களங்கமாக இருக்கிறது.
ஒளி மாதிரி, சூரியன் மாதிரியாகவா இருக்கிறது? நடுவில் ஏகப்பட்ட களங்கம்
இருக்கிறது,''என்று சொல். யாராவது ஒருவர், ''அழகான வெள்ளை வேட்டி!' என்று சொன்னால், ''வெள்ளை ஒரு பெரிய நிறமா? சிகப்பு எவ்வளவு அழகாய் இருக்கும். இதென்ன கட்டுகிற துணி,''என்று எதையாவது ஒன்றைப் பிடித்துத் தொடர்ந்து விமர்சனம் செய்யத் துவங்கு.
விமர்சிக்கும் நபர்களைப் பார்த்தாலே எட்டுகாத தூரத்திற்கு ஒடிவி(நெ்கள். அங்குதான் நரகமிருக்கிறது.
எதையாவது ஒன்றைப் பற்றிக் குற்றம் கண்டுபிடிக்கத் துவங்கு. "யார் என்ன சொன்னாலும், ஒரு வாரத்திற்கு,
விமா்சனம் மட்டும் செய்,' என்று சொல்லிவிட்டு, அந்த ருரனி அவருடைய யாத்திரையைத் தொடர்ந்தார். பிறகு யாத்திரையை முடித்து ஒரு வாரம் கழித்து, அதே ஊருக்கு திரும்பி வந்தார்.
தூரத்தில் இருந்து பார்க்கும்போதே, ஒரு பெரிய வேப்பமரம் தெரிந்தது. அந்த மரத்திற்குக் கீழே ஊர் பஞ்சாயத்துக் கூடுகிற இடத்தில், முன்பு முட்டாளாகக் கருதப்பட்ட அந்த மனிதா், ஊர் சபையில் ஆசனத்தில் உட்கார்ந்திருந்தார்.
சுற்றிலும் அந்த ஊர்ப்பெரியவர்கள், அமைதியாக அமா்ந்து கொண்டிருந்தார்கள்.
அதுவரை அவரை, ''முட்டாள்!' என்று சொல்லிக் கொண்டிருந்த அந்த ஊா்ப் பெரியவா்கள் எல்லாம் இவர் சொல்வதை மிகவும் பவ்யமாக, மரியாதையோடு

அமர்ந்து கேட்டுக்கொண்டு இருந்தார்கள். இந்த ஞானி வேக வேகமாக அந்தக் கூட்டத்திற்குள் வந்தார். வந்தவுடனே, அந்தப் மழைய முன்னாள் முட்டாளைப் பார்த்து, மிகவும் ஆச்சரியப் பட்டார். "நான் உங்களோடு பேசலாமா?"என்று, ஊர் பெரியவர்களின் நடுவேயிருந்த முன்னாள் முட்டாளைக் கேட்டார்.
உடனே அவர், ''கொஞ்சநேரம் காத்திருங்கள். பிறகு வேண்டுமானால் பார்க்கலாம். நான் முதலில் இவர்களை எல்லாம் பார்த்துவிட்டு, கடைசியாக உங்களைப் பார்க்கி றன்,' என்று சொன்னார். 'உங்களின் உலகையே உங்களால் மாற்ற முடியும்' என்ற பொன்மொழியை நிரூபித்து வாழ்ந்து காண்பித்துக் கொண்டிருந்தார் அந்த முட்டாள்.
பார்க்க வேண்டியவாகளை எல்லாம் பார்த்து முடித்தார். ஊர்ப் பெரியவாகளுக்கும் போய்விட்டார்கள். போனவுடனே, இந்த முன்னாள் முட்டாள் நேராய் வந்து, இந்த ஞானியிலைடைய காலில் விமுந்தார்.
ஞானி கேட்டார் : "என்னப்பா நடந்தது? எனக்கே ஒன்றும் புரியவில்லை. எப்படி இப்படி எல்லாம் தலைகீழானது ?'' என்று கேட்டார்.
இதற்கு அவர் சொன்னார் : "நீங்கள் சொன்னதுதான் அவ்வளவு துல்லியமாக நடந்தது. நான் ஒன்றுமே செய்யவில்லை. நீங்கள் சொன்னதிலிருந்து யாரைப் பார்த்தாலும் எதைப்பார்த்தாலும் விமர்சனம் செய்து கொண்டிருந்தேன். அவ்வளவுதான். மக்கள் என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்பவர்கள் இருக்கும் இடமே சொர்க்கபுரி.
தானாகவே என்னைப் புத்திசாலி என்று ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். இவ்வளவுதான் எனக்குத் தெரியும்.''
இதுதான் அந்தஸ்தால் வருவது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இரண்டு மனநிலைதான் உலகத்திலே உண்டு. உலகத்தில் இரண்டு விதமான தலைமைப் பண்புடைய மனிதர்கள்தான் இருக்கிறார்கள்.
முதல்வகை மனிதர்கள், நடக்கிற அனைத்தையும் விமர்சித்துக்கொண்டே இருப்பவர்கள். வெளி உலகமாகட்டும் அல்லது உள் உலகமாகட்டும், தமக்கு என்ன நடந்தாலும் விமர்சிப்பது. என்ன நடந்தாலும் குறைபட்டுக் கொள்வது. இது ஒருவகை.
மற்றொறு வகையினர், என்ன நடந்தாலும் ஆனந்தப்படுவார்கள். என்ன நடந்தாலும் ஏற்றுக் கொள்வார்கள். இந்த இரண்டே வகை மனிதர்கள்தான் உலகத்தில் இருக்கிறார்கள்.
ஒன்று,
என்ன நடந்தாலும்
விமா்சிப்பது.
மற்றொன்று
என்ன நடந்தாலும் வரவேற்பது.
ஜீவன் முக்தி
என்ன நடந்தாலும் விமாசிப்பது என்ற மனம் உடையவா்களைத்தான், அந்தஸ்தால் தலைவனாக மாறினாலும், உணர்வாலே அடிமைகளாக வாழ்பவர்கள் என்று குறிப்பிடுகிறோம். அவர்கள் நரகத்தில்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தனியாக நரகம் இருக்கும் இடத்தைத் தேடிப் போக வேண்டியதில்லை. அவர்கள் இருக்கிற இடமே நரகமாகத்தான் இருக்கும்.
என்ன நடந்தாலும் ஆனந்தப்படுபவர்கள், என்ன நடந்தாலும் ஏற்றுக் கொள்பவர்களைப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் சொர்க்கத்திற்குத் தனியாகப் போக வேண்டியதில்லை. காரணம், அவர்கள் இருக்கிற இடமே சொர்க்கமாக, ஆனந்த புரியாக இருக்கும். என்ன நடந்தாலும் வரவேற்பவர்கள், அவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம்தான்.
என்ன நடந்தாலும் விமர்சித்துக் கொண்டிருப்பவர்கள், அவா்கள் எந்த வாழ்க்கையை வாழ்பவா்களானாலும் சரி, அது வெளி உலகமாகட்டும், உள்ளுலகமாகட்டும், அதில் என்ன நடந்தாலும், ''ச்சே, இப்படி நடந்திருக்கலா மில்லை, இந்த ஒரு விஷயம் மட்டும் சரியாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்,' என்று விமாசிப்பார்கள். சலித்துக் கொள்வார்கள்.
அப்படி விமர்சிப்பதனால், வெளி உலகத்தில் வேண்டுமானால் ஒருசில விஷயங்களைச் சாதித்த திருபதி இருக்கலாம்.
ஆனால், வாழும் வாழ்க்கை நரகமாகவும், துக்கமயமாகவும் இருந்துகொண்டே இருக்கும். சிலநேரத்தில் நாம் துக்கத்தில்தான் இருக்கிறோம் என்பதையே மறந்துவிடுவோம்.
துக்கத்திற்குள்ளேயேதான் முழ்கி இருக்கிறோம் என்பது மறந்த நிலையில், எந்த நிலையில் இருக்கிறோம் என்ற உணர்வும் உறைந்த நிலையில் வாழ்கிறார்கள்.
அந்தஸ்து எனும் தினவெடுத்து, நாம் துக்கத்தில்தான் இருக்கிறோம் என்று உணரமுடியாத அளவிற்கு, இவர்களின் உணர்வு அலுத்துப் போய்விடுகிறது. இவர்களை, இவர்களே காப்பாற்ற முடியுமா? என்பதே பெரிய கேள்விக் குறிதான். இப்படிப்பட்ட தலைவர்கள் மட்டும் அல்ல, மற்ற மனிதர்களும்கூட, இந்த மாதிரி துக்கத்தில்தான் இருக்கிறோம் என்பதையே மறந்து வாழ்கிறார்கள். இவர்களின் மனமே உணர்வற்றதாகிவிட்டது. இதுதான் ஒருவருக்கு நடக்கக்கூடாத கொடுமை.
மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய கொடுமைகளில் ஒன்று, இந்த உணர்வற்ற மனத்தை உருவாக்கியது.
என்ன நடந்தாலும் விமர்சிக்கிற மன அமைப்பு உடையவர்கள், எங்குமே உலகத்தில் நிம்மதியாய் வாம முடியாது.
விமர்சனம் செய்கிற மன அமைப்புதான் முட்டாள்தனம். அவர்கள் இருக்கிற இடமே நரகம்.
அது அவர்களுக்கும், அவா்களைச் சுற்றி இருப்பவா்களுக்கும் என இரண்டு பேருக்குமே நரகம்தான்.
ನ್ನಾಗಿಸ டுக்கு
விமாசிக்கும் ஒருவர் போதும். ஒரு நகரத்தை நரகமாக்கிவிட முடியும். அதனால்தான் சொல்கிறோம். விமர்சிப்பவர்களைக் கண்டால், எட்டுக்காததூரத்திற்கு ஒடி விடுங்கள்.
அவர்களே அவா்களுக்குத் துக்கத்தை உருவாக்கப் போதுமானவர்கள். உங்களிடம் இந்தக் குணம், துளிகூட இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அது போதும். மற்றவர்களால் உங்களைப் பாதிப்புக்குள்ளாக்க முடியாது.
முக்தி யுக்தி - 7