Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

147. செல்வத்தை ஈர்க்கும் குணங்கள்

# செல்வத்தை ஈர்க்கும் குணங்கள்

Qualities that attract wealth

ஆனந்த சக்தி சக்தி இந்த மனநிலையையும் ஏற்படுத்தும்.

செல்வத்தை உருவாக்குவது மட்டுமில்லை, அதைப் பாதுகாத்து வைப்பதும் அவசியம் .

பொதுவாகவே செல்வம் இல்லாதபொழுது வறுமை என்கின்ற பிரச்சினையையும், அது வந்த பின்பு காப்பாற்ற வேண்டுமே என்ற பயத்தையும் கொடுத்துக்கொண்டே இருக்கும்.

செல்வத்தைச் சரியாக கையாளத் தெரியவில்லை என்றால், பக்குவம் இல்லையென்றால் வருவதற்கு முன் ஆசையையும், வந்த பின்பு அச்சத்தையும் கொடுக்கும்.

செல்வத்தை உருவாக்குவது மட்டுமல்ல அதைப் பாதுகாத்து வைப்பதும் அவசியம்.

வருவதற்கு முன்பு ஆசை, ''வேண்டுமே வேண்டுமே,' என்றும், வந்துவிட்டதென்றால், ''ஐயோ காப்பாற்ற வேண்டுமே,' என்ற அச்சமும் ஏற்படும்.

செல்வத்தை ஈர்ப்பதற்கு மட்டுமல்ல அதைக் காப்பதற்கும், அனுபவிப்பதற்கும் ஆனந்தம் தேவை. ஆனந்தமயமான மன அமைப்பு தேவை.

செல்வத்தை ஈர்க்கும் இரகசியத்தை ஐந்து குத்திரங்களாக வழங்குகிறோம். நம்முடைய எண்ணங்களுக்கு மிகப் பெரிய சக்தியுண்டு. அதற்கு நம்மையும், நம்மை சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் மாற்றும் சக்கியண்டு.

தன்மை (உங்களையும்), முன்னிலை (உங்கள் முன் இருப்பதையும்), படாக்கையையும் (உங்களை சுற்றியிருக்கும் உலகத்தையும்) என மூன்று நிலைகளையும் மாற்றும் ஆற்றல் உடையது. உங்களின் எண்ணங்கள்.

ழுதலாவது : நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் எல்லாவற்றையுமே பாதிக்கிறது.

இரண்டாவது : நம்முடைய எண்ணங்களும், நம்பிக்கைகளும் நேர்மையானதாக இருந்தால், தன்மை, முன்னிலை, படர்க்கை மூன்றுமே இனிமையானதாகவும், செல்வத்தை ஈர்க்கவும், காக்கவும் செய்கின்ற சக்தியோடு மலர்கின்றன.

மூன்றாவது: நம்முடைய நம்பிக்கைகளும் எண்ண அமைப்பும், எதிர்மறையானதாக இருக்குமானால் தன்மை, முன்னிலை, படர்க்கை என்கின்ற மூன்று நிலைகளிலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி இயற்கைச் சீற்றங்களுக்கும் அவையே காரணமாகி விடுகின்றன.

நான்காவது : நம்முடைய எண்ண ஓட்டத்திற்குத் தகுந்தாற்போன்ற வேதனை

தரக்கூடிய அல்லது அல்லது அனந்தத்தைத் தரக்கூடிய நபர்களையும், நிகழ்ச்சிகளையும் நாம் ஈர்க்கிறோம்.

ஐந்தாவது: தியானம் நம்முடைய எண்ண ஒட்டத்தையும், மன ஒட்டத்தையும் மாற்றி ஆனந்தத்தை உருவாக்கி, ஆனந்தமான சூழ்நிலைகளை நம்முடைய வாழ்க்கையில் ஈர்த்துக் கொண்டே இருக்கும்.

ஜீவன் முக்தராக வாழ்வதும், அதற்காக உழைப்பதுமே உங்களின் உழைப்பால் மட்டுமே நீங்கள் தொடுவதைக் தாண்டிய செல்வ நிலைக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

செல்வத்தை ஈர்க்கும் இரகசியத்தையும் ஐந்து குத்திரங்களான வழங்குகிறோம் நம்மடைய எண்ணங்களுக்கு மிகப் பெரிய சக்தியுண்டு அதற்கு நம்மையும் நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் மாற்றும் சக்தியுண்டு.