6. மணிகர்ணிகா காட்
# மணிகர்ணிகா காட்
வாரணாசியின் மிகப்பழமை வாய்ந்த எரியூட்டும் படித்துறைகளுள் ஒன்றான 'மணிகர்ணிகா காட்' மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சமஸ்கிருத மொழியில் 'மணிகர்ண' என்றால் காதணி என்று பொருள். ஒவ்வொரு நாளும் பல உடல்கள் இங்கு எரியூட்டப்படுகின்றன. 'சதிதேவியின் காதணி விழுந்த இடமான காசியில் இறந்தாலோ அல்லது மணிகர்ணிகா படித்துறையில் எரியூட்டப்பட்டாலோ முக்தி நிச்சயம்!'. இதை பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் உறுதிசெய்கிறார்.