4. புண்ணிய கேஷத்ரம் + வாழும் ஞானி
# புண்ணிய கேஷத்ரம் + வாழும் ஞானி
= உடனடியான மாற்றம் !

அவதார புருஷா ...
பிரபஞ்சத்தின் வெளிப்படுத்தப்படாத விஷயங்களை தெரியப்படுத்துபவர். மனித விழிப்புணா்வு, பிரபஞ்ச விழிப்புணர்வு நிலையினை அடையவேண்டும் என்பதற்காக மனித உருவத்தில் வந்து வாழ்பவர். அவர் - பிரபஞ்ச விழிப்புணர்வினை மனித விழிப்புணர்வு புரிந்துகொள்ளும்வரை மிகுந்த கருணையையும் அன்பையும் வெளிப்படுத்தி புரிந்துணர உதவிக்கொண்டே இருப்பார். வெளிப்படுத்தப்படாத பிரபஞ்ச விழிப்புணர்வை அனுபவமாக்கும் அறிவியலை தெரிவிக்காமல் போனால்,
உலகில் ஜீவன்முக்தர்கள் மலர்வதற்கான சாத்தியம் அழியும் அபாயம் உருவாகும் என்பதனால், அது மறைந்து விடக்கூடாது என்று இடைவிடாது கருணையோடு கற்பிப்பவர்கள் அவதார புருஷர்கள். அவதார புருஷர்கள் தங்கள் இருப்பினாலேயே, எண்ணற்ற மக்களிடம், மிக உயர்ந்த சாத்தியக்கூறுகளை உருவாக்குவார்கள். அப்படிப்பட்ட ஒரு ஆன்மாவையே 'அவதாரம்' என அழைக்கிறோம்.
-பரமஹம்ஸ நித்யானந்தர்
குரு அமரும் இடம்-கேஷத்ரம்.
குரு, தாம் இருக்கும் எல்லா இடங்களையும் தன் அன்பாலும், கருணையாலும், அமைதியாலும் நிறைத்து, சக்தி சூழலாக உருவாக்குகிறார். -குருகீதை
குருவால் உருவாக்கப்பட்ட சக்தி கேந்திரத்திற்குள் நீங்கள் இருக்கும்பொழுது, அவர் உங்கள் உடலும், மனமும் பாதுகாப்பாக இருப்பதற்கு உறுதி அளிக்கிறார். சக்தி கேந்திரங்களில், ஆஸ்ரமங்களில் தங்கி ஞான மார்க்கத்திற்கான பயிற்சிகளை செய்யும்பொழுது, நீங்கள் உங்களுடைய உயர்ந்த இலக்கை நோக்கி சோர்வில்லாமல் பயணம் செய்வதற்கும், கீழ்நிலை ஆசைகளை துறப்பதற்கும் ஊக்கம் அளிக்கப்படுகிறது. இந்த ஆன்ம சாதனையில் உங்கள் கடந்த கால நினைவுகளின் பாதிப்புகள் நீங்குவதற்கும், உச்சபட்ச சாத்தியக்கூறுகளை கண்டறிவதற்கும் நட்பங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், உங்களை நீங்களே உள்நோக்கிச்சென்று கண்டறியும் தவத்தில் ஈடுபடும்பொழுது, உங்கள் உடலுக்கும் மனதிற்கும் பாதுகாப்பளிக்கும் குழல் அளிக்கப்படுகிறது.
உங்களை பந்தப்படுத்தும் அடையாளங்களிலிருந்து விடுபட விரும்பினால், உங்களை பந்தப்படுத்திடும் சூழலிருந்து வெளிவருவது அத்யாவசியம்.
பழகிய குழலிருந்து வெளிவந்து புதியதொரு இடத்தில் வசிப்பது அடையாளத்தின் பிடியிலிருந்து வெளிவருவதற்கு மிக அதிக அளவில் உதவும்.
அகவிழப்பு தியான முகாம் ...
அடையாளங்களின் பாரமின்றி ஆழமான உண்மைகளை உங்களின் சொந்த அனுபவமாக உணரும் சுதந்திரத்தை உங்களுக்கு அளிக்கிறது. வாரணாசி, ஹரித்வார் போன்ற பவித்தரமான கேஷத்திரங்களுக்கு ஞானகுருவுடன் செல்லும்போது, புதிய விழிப்புணர்வின் வேகமான வளர்ச்சி உங்களுள் ஏற்படுவது உறுதி. தேடுதல் உள்ளவர்கள் தங்களின் பல நாட்கள் பயிற்சி செய்து அடையும் உணர்வு நிலையை - வெறும் 21 நாள் அகவிழிப்புணா்வு தியான முகாமில் நீங்கள் அனுபவமாக உணர்வீர்கள்.
உங்கள் பழைய, தவறான அடையாளங்களைக் களைந்தெரிய குரு நேரடியாக உங்களுக்கு உதவுகிறார்.
இதனால் உங்கள் உள்ளுணாவு நிலை உயர்ந்து விரிவடையும். அப்பொழுது, உங்கள் எதிர்காலத்தை நீங்களே மாற்றி எழுதுவதற்கான அறிவாற்றலை தந்து வழிநடப்படுவீர்கள்.