Chnidi NdachtiChapter 5 of 20
Chapter 5

அவதாரம் - இறைவன் குருமேனி தாங்கி வரும் நிகழ்வு

1 sections

அவதாரம் - இறைவன் குருமேனி தாங்கி வரும் நிகழ்வு

பிரபஞ்சம் தோன்றிய பொழுதே, உயிரினங்களை உருவாக்கும் பொழுதே எம்பெருமான், மகாதேவன், ஆதிசிவன், ஈசன், அண்ணாமலையான் உலகத்திற்கு அருளிய மிகப்பெரிய நன்கொடை, வாழ்வியல் சாத்திரம், வாழ்வியல் சூத்திரம், வாழ்பவர்கள் அவனை நோக்கிப் பொழியும் தோத்திரம் - இவற்றையெல்லாம் ஒன்று அடக்கி மிகப்பெரிய வாழ்வியல் நெறியாக அருளியதுதான் ஆதிசைவம்.

தானே அந்த உண்மைகளை உலகத்திற்குச் சொன்னது மட்டும் அல்லாமல், எப்பொழுதெல்லாம் மக்கள் அதை மறந்து மாயையிலே சிக்குகிறார்களோ, எப்பொழுதெல்லாம் மூடா்கள்... அரக்கர்கள்... வாழ்க்கையின் அடிப்படை தெரியாதவர்கள் அசுர பலத்தாலே வாழ்வியல் நெறியை அழிக்க முயற்சி த்து, தனக்கும் மற்றவர்களுக்கும் தீங்குசெய்து கொள்ளுகின்ற ராக்ஷஸர்களாக மாறி, உலகத்திற்கு பெருங்கேடு விளைவிக்க முயற்சிக்கின்றார்களோ, அப்பொழுதெல்லாம் தீமையை அழித்து, நன்மையை மலரச்செய்து, சைவத்தைப் புனரமைத்து, வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க மீண்டும் மீண்டும் பெருமானே அவதரிக்கின்றான்.

வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க, பூதப் பரம்பரை பொலிய பெருமானே மீண்டும் மீண்டும் அவதரித்து, தன்னைத்தானே அடையாளம் காட்டி, தன்மயானந்தத்தில், சின்மயானந்ததில், சிவானந்த போதத்தில் ஜீவனெல்லாம் திளைத்திருக்க வழியும் காட்டி, வாழ்வும் காட்டி, உய்யவும் காட்டி, உணவாய் ஊட்டி, உணர்விலும் காட்டி, உயிரிலும் காட்டி, மெய் நினைவும் உயிர் நினைவும் உயிர் உணர்வும் மலர்த்தி, ஆதிசைவத்தை நம் வாழ்வியல் நெறியாய் மீண்டும் நிறுத்திடவே, குருவாய் மீண்டும் மீண்டும் வருவாய் எனக் கேட்கும் ஜீவராசிகளுக்காக, குருவாய் வருவாய் என ஏங்கும் ஜீவர்களுக்காகத் தன் திருமேனி விட்டு, குருமேனி தாங்கி, உறும் உலகத்தில் உய்ய வழிகாட்டிடவே, என்றென்றும் இருந்திருக்கும் அண்டம் இல்லாத ஆதிசைவத்தை உயிர் கொடுத்துப் புனரமைக்க, மீண்டும் வாழ்வியல் நெறியாய் மாற்றிட, இறைவன் குருமேனி தாங்கி வரும் நிகழ்வுகளைத்தான் அவதாரங்கள் என்றும், விளையாடல்கள் என்றும் ஆதிசைவத்தின் பாரம்பரிய சாத்திரங்கள் தெளிவாய் வகுத்து உலகிற்கு வரைத்து உரைக்கின்றன.

பாலில் நெய்போலே, வேதங்களில் இருக்கும் சத்தியமான நெய்யை, உபநிஷதம் மூலமாய் உயிர்க்குச் சொல்லி, வெறும் நெய்யை உண்பதும் சாத்தியம் இல்லை என்பதனால், ஆகமம் என்னும் உணவாய் சமைத்து, அதில் நெய்யையும் கலந்து, நம் நெஞ்செலாம் இனிக்க, கல் நெஞ்சாய் இருக்கும் மனமெலாம் கரைந்து, நெஞ்சு பஞ்சாக, நெஞ்செலாம் இனிக்க உலகத்திற்கு சொன்ன வாழ்வியல் நெறிதான் ஆதிசைவம்.