ஆகம அங்கங்கள்
ஆகம அங்கங்கள்
ஆகமம் - சரியை, க்ரியை, யோகம் மற்றும் ஞானம் என 4 முக்கிய பகுதிகளாக இருந்து, ஆதிசைவத்தின் வாழ்வியல் முறைகளை நமக்குக் காட்டுகிறது.
- சரியை - ஆதிசைவத்தின் வாழ்வியல்முறை.
- க்ரியை - ஆதிசைவத்தின் வழிபாட்டு இயல் முறை
- யோகம் - ஆதிசைவ நிலையை உடலையும் மனத்தையும் வைத்து அடைகின்ற முறை.
- ஞானம் - ஆதிசைவ நிலையில், சிவோஹோம் எனும் ஜீவன்முக்த நிலையில் நிலைபெற்று இருப்பதற்கான சிவபோத, சிகபோத, சிவஞான ரகசிய சாக்கியங்கள்.
சரியை - வாழ்வியல் முறை.
துயிலெழுதல், துயிலெழுந்ததிலிருந்து செய்ய வேண்டிய செயல்கள், நாள் முழுக்க உங்கள் உடலும் மனமும் செய்ய வேண்டிய செயல்கள், செய்யக்கூடாத செயல்கள் என்பதில் துவங்கி, உங்கள் உணவுமுறை, உடைமுறை, உறக்கமுறை, உறைவிடமுறை என்னும் எல்லா முறைமைகளையும், வாழ்வியல் சத்தியங்களையும் நெறியையும், சரியை அக, சரியாக வாழவேண்டிய முறையைச் சொல்வது சரியை.
க்ரியை - பக்தி
பக்தியால் பொங்கிப் பழுத்து, இறைவனோடு இரண்டற கலந்து இருக்கும் இனிமையான நெறிமுறை க்ரியை. மலர் கொய்வதில் துவங்கி, சந்தனம் அரைப்பது, மாலை சாற்றுவது, ஆத்மார்த்தமாய் இறைவனை வழிபடுவது, பரார்த்தமாக ஆலய வழிபாட்டில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவைவரை, எல்லாவற்றையும் முறையாக, தானே தன்னை வழிபடும் விதியை தவறில்லாது ஜீவன்களுக்கெல்லாம் சொன்ன விதம் க்ரியை.