காமிக ஆகமம் - வாழ்வை வழிநடத்தும் விஞ்ஞானம்
காமிக ஆகமம் - வாழ்வை வழிநடத்தும் விஞ்ஞானம்
மொழி இல்லாத காலத்தில், மேலை நாட்டவர்கள், பல்வேறு கண்டங்களில் இருந்த மக்கள் ஹீன சப்தங்களால் உணர்சிகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி கொண்டிருந்த காலத்தில், முறையான செம்மொழியான தமிழீ என்னும் அருமையான மொழியில், வாழ்வியல் சத்தியங்களை ஆகமங்களாக நாம் வாழ்ந்து கொண்டு இருந்த வாழ்வியல் நெறி ஆதிசைவம்.
பல போ் கருதுவதுபோல, ஆகமங்கள் சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்டது என்பது பொய். அது மிகப்பெரிய தவறான கருத்து. உண்மையில், சம்ஸ்க்ருத வல்லுனர்களால் ஆகமத்தின் 50 சதவிகித பகுதியைக்கூட மொழிபெயர்க்க இயலவில்லை என்பதுதான், நான் நேரடியாகப் பல சம்ஸ்க்ருத அறிஞர்களோடு தொடர்புகொண்டு வேலைசெய்து பார்த்ததன் இறுதி உண்மையாக அறிந்த ச த்தியம்.
உண்மையில், ஆகமங்கள் சம்ஸ்க்ருதத்திற்கும் மூல மொழியான தமிழீ என்னும் மொழியில்தான், கிரந்த எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, தமிழீ என்னும் மொழியின் இலக்கணம் சார்ந்து அருளப்பட்டது. எம்பெருமானே மொழியின் இலக்கணமும் தந்து, எம்பெருமானே வாழ்வியல் நெறியும் தந்து, எம்பெருமானே ஜீவன் முக்த விஞ்ஞானம் மாத்திரம் அல்லாது, உணவு சமைக்கும் அடிப்படை விதிகளையும், உடை நெய்தல் முறை மாத்திரம் அல்லாது, உடையுடுத்தும் முறைகளையும் - 35 விதம் ஆண்களுக்கு, 35 விதம் பெண்களுக்கென மொத்தம் 70 விதமான உடையுடுத்தும் முறைகளையும் தந்த ருளியிருக்கிறார்.
ஆதிசைவா்கள் தங்களுடைய தொழில் திறமை சார்ந்து - யார் இந்த வாழ்வியல் முறையான ஆதிசைவத்தை உலகிற்கு உபதேசித்து உரைக்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள், யார் ஆட்சி செய்து நாட்டின் முறைமையையும் தகைமையையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள், யார் வியாபாரம் செய்ய வேண்டிய கடமையில் இருக்கிறார்கள் என்று - ஒவ்வொருவரும் தங்கள் தங்களுடைய விருப்பம் மற்றும் வேலைகள் சார்ந்து தங்களைத்தாங்களே பல்வேறு குழுக்களாக மிகத் தெளிவாக பிரித்துக்கொண்டார்கள்.
இந்தப் பிரிவு முறை, ஒரு நகரம் அமைக்கப்படும்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்குமான இருப்பிடம் இருக்க வேண்டிய இடவரிசை முறை, உணவுமுறை, உடைமுறை மற்றும் அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்கின்ற வாழ்வியல் முறை என அனைத்தையும், எண்ணிக்கூட பார்க்க முடியாத அளவிற்கு மிகத் தெளிவாக வரையறுத்திருந்தனர்!
வீட்டில் வளர்ப்புப் பிராணிகளைப் பராமரிக்க வேண்டுமென்றால்கூட, எந்த இடத்தில் கோசாலை இருக்க வேண்டும், எந்த இடத்தில் குதிரைலாயம் இருக்க வேண்டும், எந்த இடத்தில் காவலுக்கான நாய்ப் பட்டிகள் இருக்க வேண்டும் என்கின்ற அளவிற்கு மிக நட்பமாக வகைப்படுத்தினர்.
திருநீறு பஸ்மத்தை உருவாக்க வேண்டும் என்றால், எந்த நிறமான பசுவின் சாணத்தை, எந்தவிதத்தில் எடுத்தும், எப்படித் திருநீற்றை உருவாக்க வேண்டும் என்பதைத் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர்.
எம்பெருமான் ஏறத்தாழ சில கோடி ஸ்லோகங்கள் மூலமாக மிக மிக நுட்ப மாகவும் நுணுக்கமாகவும் ஆக்கியருளியிருக்கிறார், ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள், சில கோடி... ஏனென்றால் காமிக ஆகமத்தை எம்பெருமான் விவரிக்கும்பொழுது, சொல்லுகின்றார். இப்பொழுது நம்முடைய கைக்குக் கிடைத்திருப்பவை 20 லக்ஷம் மாத்திரமே.
காமிக ஆகமம், காரண ஆகமம் முதலாகிய 28 ஆகமங்களும், அதன் உப ஆகமங்களாக 108 ஆகமங்களும், அதுதவிர இவற்றின் பாகமாக 64 தந்திரங்களையும் பெருமானே நேரடியாக அருளி உள்ளார். வேதம், அதன் சாரமான உபநிடதம், அதை வாழும் முறையான ஆகமம் - இந்த மூன்றையும் சார்ந்த வாழ்வியல் முறையைத்தான் ஆதிசைவம் என்று சொல்லுகின்றோம். வேதங்களைப் பொதுநூலாக வைத்து, ஆகமங்களைச் சிறப்புநூலாய்க்கொண்டு வாழுகின்ற வாழ்க்கைமுறை, ஜீவன் முக்த வாழ்வியல் விஞ்ஞானம்தான் ஆதிசைவம்.