மதம் உருவாவதற்கு முன்பே மலர்ந்த மலர்
மதம் உருவாவதற்கு முன்பே மலர்ந்த மலர்
ஒரு காலத்தில் தோன்றி, ஒரு காலத்தில் இல்லாமல் போவது கிடையாது ஆதிசைவம். ஒரிடத்தில் இருந்து, ஓர் இடத்தில் கடைபிடிக்கப்படாமல் போவது கிடையாது ஆதிசைவம்.
புவிராப்பு விசை எப்படி புவி முழுக்க இருக்கின்றதோ, அதேபோல, பிரபஞ்சம் சில குணங்களால், சத்தியங்களால் முழுமையாக நிறைந்து, அந்தச் சத்தியங்களைச் சார்ந்து இயங்குகிறது. அந்தச் சத்தியங்கள்தான் ஆதிசைவம்.
புவிஈர்ப்பு விசை ஒர் இடத்தில் இருக்கிறது, இன்னொரு இடத்தில் இல்லை என்று சொல்ல முடியுமா? முடியாது. எப்படிப் புவி முழுவதும் புவிஈர்ப்பு விசை நிறைந்திருக்கின்றதோ, அதுபோல பிரபஞ்சம் முழுவதும் சில விதிகள், சத்தியங்கள், சாத்தியங்கள், கருத்துக்கள், உண்மைகள் நிறைந்து இந்தப் புவியே இயங்குகிறது. இந்தப் பிரபஞ்சமே இயங்குகிறது. அந்தச் சத்தியங்களை, அந்தப் பிரபஞ்சமே குறை இலாது, முறைதவறாது வெளிப்படுத்திய வாழ்வியல்முறைதான் ஆதிசைவம்.
பிரபஞ்சப் போரருள், பிரபஞ்சப் பரம்பொருள் வடிவம், வடிவமின்மை என்னும் நிலைகளைக் கடந்து தன்னுடைய சாந்நித்ய இருப்பின் மாத்திரத்தாலேயே வெளிப்படுத்திய சத்தியங்களைத்தான் என்று சொல்கிறோம். வேதங்களின் சாரம் உபநிடதங்கள்.
பிரபஞ்சப் பேரருள், அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரம்பொருள் தன்னுடைய நித்யானந்த நிலையில் இருந்தவாறே, தானே தன் மயமாய் தனக்குள்ளேயே ரசித்துக்கொண்டிருக்கும், தனக்குள்ளேயே அதை வாழ்ந்து கொண்டிருக்கும், தனக்குள்ளேயே தன்னையே ருசித்துக்கொண்டிருக்கும் அந்தத் தன்மயானந்த நிலையில் இருந்தவாறே வெளிப்படுத்திய, உணர்த்திய பிரபஞ்சத்தின் ச த்தியங்கள்தான் வேதங்கள். அதன் சாரம் உபநிடதங்கள்.
தன் இருப்பினாலேயே, தன்னுடைய இருப்பின் சாந்நித்யத்தினாலேயே, சாந்நித்ய பலத்தினாலேயே வெளிப்படுத்திய சத்தியங்கள் வேதங்களும் உபநிஷதங்களும்.
அதே பிரபஞ்சப் போரருள், அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரம்பொருள் தன்னுடைய நித்யானந்த நிலையிலேயே, தான் இருப்பது மட்டுமல்லாது, உயிர்கள் எல்லாம் உய்வடைய, உத்தம நிலை அடைய, தன் நிலைதனை உயிர்கள் எல்லாம் உணர்ந்திட சதாசிவனாய் திருமேனி கொண்டு உலகத்திற்கு வெளிப்படுத்தியவையே ஆகமங்கள்.
ஒவ்வொருவரும் பிரபஞ்சப் பேரருள் நிலையிலிருந்து சுத்த சிவாத்வைத ச த்தியத்தை வாழ்ந்திட, சுத்த சிவாத்வைத சத்தியத்தில் நிலைபெற்று பொங்கி மலர்ந்திட, திருமேனி தாங்கி சதாசிவனாய் பெருமானே உலகிற்காக வெளிப்படுத்திய சக்தியங்கள்கான் ஆகமங்கள்.
வேதங்களைச் சார்ந்து, உபநிடதங்களைச் சார்ந்து பெருமானே வெளிப்படுத்திய ஆகமங்களைச் விஞ்ஞானமாக, வாழ்வியல் நெறியாக மலர்ந்ததுதான் ஆதிசைவம்.
ஆகிசைவம் ஆகி மதம் மட்டும் அல்லாது, மதம் என்கின்ற கருத்து உருவாவதற்கு முன்பாகவே மலர்ந்த ஒரு ஆன்மீக வாழ்வியல் நெறி. வேறு வேறு நாடுகளில், இடங்களில் இருக்கின்ற மக்கள் கல்லாலே ஆயுதங்கள் செய்து, ஒருவரை ஒருவார் தாக்கிக்கொண்டு, காட்டு மிராண்டிகளாக வாழ்ந்திருந்த காலத்தில், நாங்கள் 'கல் ஆலயம்' செய்து, ஜீவன்முக்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த வாழ்வியல் நெறி ஆதிசைவம்.