ஆழ்ந்து கேளுங்கள்.
ஆழ்ந்து கேளுங்கள்.
வெளி உலகத்திலே வெற்றிக்காக நீங்கள் உருவாக்கிக் கொள்ளுகின்ற சாத்திய மனஅமைப்புதான் திறமை.
உள்ளுலகத்திலே நீங்கள் உருவாக்கும் சாத்திய மன அமைப்புதான் தவம்.
திறனும், தவமும் உள்-வெளி பேதமன்றி வேறொன்று அடிப்படை பேதம் இல்லாதவை. திறன் வெளிஉலகத்தில் உங்களுக்கிருக்கின்ற திறமை. தவம் உள்ளுலகத்தில் உங்களுக்கிருக்கின்ற திறமை. இரண்டுமே குணம் தானே தவிர இயற்கை கிடையாது. தவம் இயற்கை கிடையாது. உருவாக்கப்பட்ட குணம்.
இருப்பிலே இருக்கின்ற இசத்தியத்தை உங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தவும், உருவாக்கிக்கொண்ட தேவையுமில்லை.
உழைத்தால் மட்டும், திறமிருந்தால் மட்டும் ஒரு பொருளை அடைய முடியும் என்பது சமூகம் நமக்கு சொல்லிக் கொடுக்கும் விதி. இதே விதியை உள்ளுலகத்திலும் உபயோகப்படுத்துகின்ற வழியே யோகப்பாதை, யோக சம்பிரதாயம், யோக மார்க்கம். அதனால்தான் யோக மார்க்கத்தை சாதாரண நடுத்தர மக்கள் எளிமையாகப் புரிந்து, அதை சாத்தியம் என்று நம்புகிறார்கள். அது சாத்தியமில்லை என்று நானும் சொல்லவில்லை. ஆனால் அது மட்டும்தான் சத்தியம் என்று நான் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றேன்.
திறனும், தகுதியும் தவமும் பெருக்கி, உருவாக்கி அதன் மூலமாய் மட்டுமே ஒரு பதவியை, ஒரு நிலையை அடைய முடியும் என்பது வெளி உலகத்தின் விதி.
உள்ளுலகத்தில் மேனெஜ்மென்ட்) தவம். வெளியுலகத்தில் நுண்மேலாண்மை செய்தல் (மைக்ரோ மேனெஜ்மென்ட்) திறன். திறன். தவமும் குணமேயன்றி இருப்பு அல்ல.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் நடுத்தர மக்களாக வாழ்வது தவறல்ல, நடுத்தர மனதுடன் வாழ்வது தவறு. நடுத்தர வாழ்வு தவறல்ல. நடுத்தர மனது தவறு. ஒரு திறனால் மட்டுமே ஒரு நிலையை, பதவியை எட்ட முடியும் என்று சொல்வது வெளியுலகத்தின் வழக்கு. வெளியுலகத்தின் விதி. ஏனென்றால் வெளியுலகத்திலே இருக்கின்றவை, அளவில் குறைந்து இருக்கின்றவை என்று எல்லோரும் நம்புகிறார்கள். பணமாகட்டும், பொருளாகட்டும், பதவியாகட்டும், புகழாகட்டும், உயர்வாகட்டும் இருப்பது குறைவு என்று அவர்கள் நம்புவதனால் ஒருவர் எடுத்துக் கொண்டால் மற்றொருவருக்கு இருக்காது என்று நம்புவதனால், திறன் படைத்தவர்க்கே உண்டு மற்றவர்க்கில்லை என்பது வெளியுலகத்தின் விதி.
ஆனால், உள்ளுலக சக்தியோ அளவு இல்லாதது. அளப்பரிய இயலாதது. முடிவு இல்லாதது. உள்ளுலகத்தில் இதே தா்க்கம் உதவாது. இதே எண்ணத்திறன் உதவாது. இதே எண்ண ஓட்டம் உதவாது. இதே மனவோட்டம் உதவாது. இதே உணர்ச்சி ஒட்டம் உதவாது. உள்ளுலகில் இவ்விதி செல்லாது. உள்ளுலகிலேயும் இவ்விதியே செல்லுமென்ற யோகமார்க்கம் ஒரு மார்க்கமேயன்றி திருமார்க்கம் அன்று.
வெளி சமூகத்தின் உயர் அந்தஸ்திலோயிருப்பாரேயானால், நீங்கள், 'நீங்கள்தான் அவர்' என்று சொன்னீர்களானால், அவர் உங்களைப் பார்த்துப் பொறாமைப்படுவார், கோபப்படுவார், எரிச்சல்படுவார், உங்களைப் போட்டியோடும் பொறாமையோடும் பார்ப்பார். எதிரியாகக்கூட நினைப்பார். உங்களை இல்லாது செய்வதற்கான எல்லா முயற்சியும் எடுப்பார். ஆழ்ந்து கேளுங்கள். வெளியுலகத்தில் உயர் நிலையிலிருப்பவருடைய 'இருப்பை' நீங்கள்தான் என்று உரிமை கொண்டாடினீர்களானால், அவர் உங்களுக்கு எதிரியாவார். ஏனென்றால் அவருக்கு பயம். இருப்பது குறைவு. இன்னொருவர் எடுத்துக் கொண்டால் தனக்கிருக்காது எனும் கவலையும், பயமும் பாதுகாப்பின்மையும் இருக்கும்.
ஆனால், இருக்கும் இருப்பிற்கு எல்லையேயில்லை என்றும் எத்துணைபேர் எடுத்தாலும் என்னுடையது குறையாது என்றும் இருப்பின் இருப்பை இனிமையாய் உணர்ந்து, இருப்பின் இருப்பிலே நிலைகொண்டிருக்கும் ஈசன், ஸதாசிவன் யாராவது ஒருவர் நானே சிவம் என்று உரைத்தால் பொறாமைப்படுவதும் இல்லை. போட்டிப்படுவதும் இல்லை, எதிர்படுவதும் இல்லை, எதிரிப்படுவதும் இல்லை; 'ஆஹா நான் வெளிப்பட இன்னொரு இருப்பு கிடைத்துள்ளது' என அவன் இனிமையே படுகின்றான்.
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் கடவுள் ஒருவர் அல்ல. ஒருமைத்தன்மை. கடவுள் ஒருவர் என்றால், 'ஐயோ வேறு எவனாவது என் பதவியைப் பிடித்துக் கொண்டால் நான் எங்கே போவேன்' என்று அவரும் மிகுந்த பாதுகாப்பற்றத்தன்மை மற்றும் பொறாமையின் வடிவமாக இருந்தாக வேண்டும். அதனால்தான், கோட்பாடுகளும், தத்துவங்களும் பொறாமையினால் தன்னைத்தானே எரித்துக் கொள்கின்றன. பொறாமை எனும் புகைச்சல், தீவிரவாதம் எனும் நெருப்பாய் மாறியே தீரும்.
உலகம் கேட்டாக வேண்டிய ஒரு முக்கியமான மஹாதேவ இரகசியம் - கடவுள் ஒருவரல்ல. ஒருமைத்தன்மை.
மதத்தின் பெயரால் மதம் பிடித்தலைந்து, தவத்தின் பெயரால் அவமே
செய்து, அமைதியின் பெயராலே அண்டத்தை அழித்து, சத்தியம் புரியாமல் சாக்கடை விழுந்து, மாக்களாய் வாழும் மக்களே கேளுங்கள் -கடவுள் ஒருவன் அல்ல. ஒருமைத்தன்மை.
கடவுள் ஒருவன்தான் என்று சொல்ல முயன்றால் இயற்கையிலேயே நமக்கிருக்கும் எல்லாவற்றையும் அவர் மீது ஏற்றி, அவருக்கும் இதெல்லாம் இருப்பதாய்க் கருதி, இது சார்ந்த கருத்துக்களை, எண்ண ஓட்டங்களை அவருடைய உபதேசமாகத்தான் இருக்க வேண்டுமென்று நமக்கு நாமே கற்பனை செய்து கொண்டு, மனிதர்களையும் உலகத்தையும் அழித்தும், பழித்தும், கொடுமைகள் பல செய்து, வழி தெரியா வஞ்சகத்தில் விழுந்து மாக்களாய் வாழும் மக்களே கேளுங்கள். கடவுள் ஒருவனல்ல. ஒருமைத்தன்மை.
சத்தியத்தின் சாரத்தைக் கேளுங்கள்; வேதாந்த, சித்தாந்த, ஆகமாந்த இரகசியத்தைக் கேளுங்கள். கடவுள் ஒருவனல்ல. ஒருமைத்தன்மை.
அதனால்தான் நானேசிவம் என்று நீங்கள் சொல்லும்பொழுது, பெருமான் உங்கள் தகுதியைக் கேட்பதில்லை, திறனையும் கேட்பதில்லை, தவத்தையும் கேட்பதில்லை, தூய்மையையும் பார்ப்பதில்லை, ஆணா நான் இருந்து கொண்டாடி இரசிக்க, நடமிட இன்னொரு சிதம்பரம் கிடைத்ததென்று இருப்பில் புகுந்து வெளிப்படுகின்றான்.
எவன் தவத்தால் அவன் நிலைக்குச் சமமாக முடியும். தவத்தால் அவன் நிலைக்கு ஆவேன் என்பதுதான் அவம். தவம் தன் நிலையிலிருந்து உயர்த்தும். ஆனால் அவன் நிலைக்கு ஆக்காது. அவன் நிலைக்கு ஆக்கத் தவமே முடியுமென்றால் ஏன் சிவம் ? தன்பாலிருந்து மேம்பட தவம் உதவும். சிவன்பாலிருந்து ஜீவன் முக்தனாக தவமாகாது.
அனாக்கணக்கில் பிச்சையெடுத்து அண்ட கோடிகள் ஆக்குவது சாத்தியமா ? அனாக்கணக்கில் பிச்சையெடுத்து அண்டக் கோடி சேர்ப்பது, பினாக்கணக்கில் வீழ்ந்தாலும் எனாக் கணக்கும் ஆகாது. எத்துணை முறை நீங்கள் பிணமாக விழுந்து விழுந்து விழுந்து
அனாக்கணக்கில் பிச்சையெடுத்தாலும் இறந்து இறந்து பினாக்கண்க்கில் விழுந்து, ஜன்ம ஜன்மங்களாக அனாக்கணக்கில் பிச்சையெடுத்தாலும் அண்ட கோடிக்கணக்கில் ஆகுவது சாத்தியமா ?
ஒவ்வொரு பைசாவாகப் பிச்சையெடுத்து, ஆயிரம் கோடி சேர்ப்பது, ஆயிரம் ஜென்மமெடுத்தாலும் சாத்தியமில்லை. அது போல எத்துணைத் தவம் செய்தாலும் தன் நிலையிலிருந்து உயரலாமே தவிர, அவன் நிலையைத் தன் நிலையாய் ஆக்குவது ஆகவே ஆகாது.
உங்கள் காலில் கட்டியிருக்கின்ற சலங்கையை நீங்களே பிடித்திழுத்துக் கொண்டு, அரையடி வேணா உயரமா குதிக்கலாம். ஆயிரம் அடி பறக்க முடியுமா ? தவம் தனக்குள் அமைதியைத் தரலாம். தவம் தனக்குள் சில சித்திகளைத் தரலாம். ஆனால் தவம் நம்மை சிவம் ஆக்காது. தவமே சிவமாக்குமென்று சொல்பவா்கள் அவமே சொல்கிறார்கள். அவமே செய்கிறார்கள். தவம் ஆக்காதென்றால் எது நமைச் சிவம் ஆக்கும் ?
ஆழ்ந்து குளுங்கள், இருப்பான சிவத்திற்கும், உரைப்பான ஜீவனுக்கும் இருக்கும் தொப்புள் கொடி உறவு ஒன்றே ஒன்று. அது சங்கல்ப சக்தி. இருப்பான சிவத்திற்கும், எண்ணமாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கிற நான் என்கின்ற உங்கள் தனித்தன்மையான ஜீவனிற்கும் இடையிலே இருக்கின்ற தொப்புள் கொடி உறவு சங்கல்ப சக்தி.
ஒரு சங்கல்பத்தை உருவாக்கி அதை நிஜமாக்கும் சக்திதான் உங்களுக்கும் சிவத்திற்கும் இடையிலே இருக்கின்ற தொப்புள் கொடி உறவு. அந்தத் தொப்புள் கொடியைப் பற்றித் தொடர்ந்து சென்றீர்களானால் ஜீவன் சிவனாகும்.
நான் நான் நான் என்று ஜீவனாக நீங்கள் எதை உணருகிறீர்களோ அதற்கும், சிவத்திற்கும் இருக்கின்ற இணைப்புப் பாலம், தொப்புள் கொடி உறவு சங்கல்ப சக்தி. 'நானே சிவம்' என்று உங்கள் சங்கல்ப சக்தி முழுவதையும் ஒன்று திரட்டி உரைக்க உரைக்க, அது இருப்போடு உங்களை இணைக்கும்.
சிவம் இருப்பு, ஜீவன் உரைப்பு. நான் நான் என நீங்கள் எதை உணருகிறீர்களோ அது உரைப்பு. அந்த நான் நான் என்று உரைக்கின்ற ஒன்றிற்கு எது மூலமாக இருக்கின்றதோ அது இருப்பு. இருப்பையும், உரைப்பையும் இணைக்கின்ற தொப்புள்கொடி சங்கல்ப சக்தி.
பஞ்சு சிவம். நூல் ஜீவன். நூலின் மூலத்தைத் தேடிச் செல்ல பஞ்சின் நிலையை பஞ்சமிலாது அனுபவிக்கலாம். அச்சம் இல்லாது, தடைகளையெல்லாம் துச்சம் என்று கருதி, இருப்பின் மிச்சமே வாழ்க்கையின் உச்சம் என்று நினைந்து, மற்றதையெல்லாம் துச்சம் எனத் துறந்து, சிவோஹம் எனும் சத்தியத்தின் இருப்பை சாத்தியம் ஆக்கிக் கொள்வதே வாழ்க்கையின் உச்சம். அதை மறப்பதே வாழ்வின் நீச்சம்.
அனிச்சமாக நமக்குள் நிகழும் செயல்களெல்லாம் துக்கம் என்பதை உணர்ந்து, அவைகளை துச்சமாக்கி, உங்கள் சங்கல்பம் முழுவதையும் ஒன்று திரட்டி, நானே சிவம் எனும்பொழுது, சிவம் தனக்கு எவ்வாறு வேண்டுமோ அவ்வாறே தன் வாழ்க்கையை மலரச்செய்கிறது. அனிச்சம் என்றால் தன்னுடைய சங்கல்பம் இல்லாமலேயே தானாகவே, தன் போக்கிலேயே நடந்து கொண்டிருக்கின்ற செயல்கள் என்று பொருள்.
நான் சிவன் எனும் சங்கல்பத்தின் சக்தியிலிருந்து, இந்த சத்தியத்தின் உறுதியிலிருந்து என் வாழ்க்கையை என் விருப்பப்படி வெளிப்படுத்துவேன் என்கின்ற தெளிந்த சக்தியோடு, தெளிந்த சங்கல்பத்தோடு உங்கள் வாழ்க்கையை இயக்கத் துவங்குங்கள்.
பெருமான் உங்கள் தகுதியையும் தவத்தையும் பார்ப்பதில்லை. ஏனென்றால் உங்கள் தகுதியும், தவமும் அவருக்கு உபயோகமில்லை. உங்கள் வாழ்க்கையின் உச்சமாக, தகுதியாக, மிகுதியாக நீங்கள் கருதும் எல்லாம், பணம், புகழ், அழகு, இளமை, வாழ்க்கை, உத்வேகமும், உந்து வேகமும், வீடும், பணமும், இரத்தினமும், பொருளும், இல்லாளும், இருப்பாளும், மனைவியும், துணைவியும், இணைவியும், பரிச்சாரமும், உபச்சாரமும், எதெல்லாம்
உங்கள் வாழ்க்கையின் சாரம் என்றும், சக்தியென்றும், பலம் என்றும், எச்சம் என்றும், மிகுதியென்றும் நினைக்கின்றீர்களோ அவை எல்லாமே அவருக்குத் துச்சம்.
ஆடு சிங்கத்திற்குப் புல் கொண்டுபோனதுபோலே, நீங்கள் கொண்டு செல்வதெல்லாம் அவர் புசிக்க அல்ல. நீங்கள் கொண்டுசெல்லும் தன்மையை மட்டுமே அவர் ருசிக்கிறார். ஒரு நாளும் நீங்கள் கொண்டு செல்வதை அவர் புசிப்பதில்லை. நீங்கள் கொண்டுசெல்லும் உணர்வையே ருசிக்கின்றார். கொண்டு செல்லும் அழகையே இரசிக்கின்றார். பசிக்காதவன் புசிப்பதேது.
கண்ணால் இரசிக்கவும், வாயால் புசிக்கவும், மனதால் ருசிக்கவும், காதால் இனிக்கவும் ஒன்றும் இலா கடந்த நிலையிருக்கும் பெருமானுக்கு உங்கள் திறனோ, தவமோ, தகுதியோ எவ்விதத்திலும் உபயோகமில்லாததால் அவைகளை உங்களிடமிருந்து அம்பலவாணன் தேடுவதும் இல்லை. அவைகள் இல்லாததனால் ஒருவரை அவன் மறுதலிப்பதுமில்லை. மறுதலிப்பதும் இல்லா பரம்பொருள். தகுதிகளைப்பற்றித் ஒருபோதும் தான் கவலையே படுவதில்லை எனும் சத்தியத்தைத்தான் கரிக்குருவிக்கு உபதேசம் கொடுத்தபொழுது எம்பெருமான் சொல்லுகின்றார்.
கரிக்குருவிக்கு உபதேசம் தந்து பன்றிக்குட்டிகளுக்கு பால் முலை தந்து, ஞானசம்பந்தருக்காவது அன்னைதான் முலைப்பால் கொடுத்தாள். பன்றிக்குட்டிகளுக்கு பெருமானே முலைப்பால் கொடுத்திருக்கின்றான். சோழ நாட்டிலே ஞானிகளுக்கு மட்டும்தான் அதுவும் அன்னைதான் முலைப்பால் கொடுப்பாள். எங்கள் பாண்டி நாட்டிலே பன்றிக்குட்டிகளுக்கு கூட பரமன் வந்து முலைப்பால் கொடுப்பான். எங்கள் ஊர்ச்சிறுவனுக்கு முலைப்பால் தந்து, ஞான சம்பந்தனாக்கினான் என்று ஏமாந்து நிற்கும் சோழர்களே, எங்கள் பாண்டி நாட்டில் பன்றிக்குட்டிக்குக் கூட பரமன் முலைப்பால் கொடுத்து இருக்கின்றான். தகுதியைப் பார்க்காதவன், தயாபரன்.
தவம் கேட்காதவன். தகுதிப்பார்க்காதவன். திறன் வைத்து ஒன்றிற்கு
தீர்வு கொடுக்காதவன், ஹரன். 'நீயே நான்' என்று சொன்னவுடன் நமக்கே அரணாய் இருக்கும் ஹரன். 'என்னைக் கொடுத்தேன்' என்று சொன்ன வினாடியே தன்னைக் கொடுத்திடும் தம்பிரான்
உங்களுக்குள் இருக்கும் சங்கல்ப சக்தியை ஒன்று திரட்டி 'நானே சிவம்' என்று உங்கள் சித்தத்திற்குள் தெளிவான சங்கல்பத்தை உருவாக்குங்கள். இந்த சங்கல்பத்தைச் சார்ந்து, இந்த சங்கல்பத்தை அடித்தளமாய் வைத்து உங்கள் மெய் நினைவும், உயிர் நினைவும் இயங்குவதற்கு அனுமதியுங்கள். உங்கள் தசை நினைவும், மெய் நினைவும், உயிர் நினைவும் நானே சிவன் என்கின்ற சங்கல்பத்தைச் சார்ந்தே இயங்கச் செய்யங்கள்.
ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள். என்னுடைய வாழ்க்கையிலேயே மிகப்பெரிய பலமாக, ஆதரவாக இருந்த பல குருமார்களிலே ஒருவர் நாரயணசுவாமி. அவர் ஒரு வயதான முதியவர். அவர் செய்து வந்த ஒரே வேலை, அதிகாலை சென்று சுற்றியிருக்கும் நந்தவனங்களிலெல்லாம் மலர்களைப் பறித்து, மாலை கொண்டு திருவண்ணாமலை தெற்கு கோபுர வீதியிலிருக்கும் விநாயகருக்குப் பூஜை செய்துவிட்டு வாசலில் அமர்ந்து கொள்வார். யாராவது உணவு கொடுத்தால் உண்பார், இல்லையேல் இல்லை. மிகச்சாதாரணமாக வாழ்ந்த மிகப்பெரிய யோகி. சக்திகளை வெளிப்படுத்திய ஸ்தாசி வத்தன்மையில் இருப்போடு இருந்த ஒரு ஞானி. ஒரு நாள் அவருடன் பேசிட்டிருக்கும்பொழுது, அருமையான ஒரு சத்தியத்தை எனக்குள் அனுபவப் பாடமாக்கினார்.
இந்த சத்தியத்தை ஆழ்ந்து கேட்டுக் கொள்ளுங்கள். நாமே சிவம் என்கின்ற சத்தியத்தை சார்ந்து நம்முடைய தசை நினைவும், மெய் நினைவும், உயிர் நினைவும் இயங்கத் துவங்குமானால் அதைச் சார்ந்து வெளிப்படுகின்ற எல்லாம் ஆமானுஷ்யமான சக்திகளாகவே இருக்கும்.
ஒரு நாள் அவருடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். வயிற்று வலி என்று சொன்னார். கடுக்காய்ப்பொடி கொண்டு வரட்டுமா இல்லை, திரிபலாசூர்ணம் கொண்டு வரட்டுமா, மணத்தக்காளி அரைச்சுக் கொண்டு வரட்டுமா ? எனக் கேட்டேன்.
அவர் சொன்னார்: 'இல்லையப்பா, நான் ஸதாசிவம் என்கின்ற உண்மை சத்தியமானால், இந்த வயிற்று வலி தானாய்த் தீர்ந்துபோய் நான் ஆரோக்யத்துடன் இருப்பேன். ஏனென்றால் சதாசிவன் சதா ஆரோக்யத்தில் இருப்பவர், இந்த சத்தியத்தின் சங்கல்பத்தைச் சார்ந்து, இந்த உடல் ஆரோக்யம் அடையட்டும். இல்லையேல் இந்த உடல் வேண்டாம்.''
அரை மணி நேரத்தில் சரியாகிவிட்டார். இருப்பாரோ, போவாரோ என்று நினைக்கின்ற விதத்திலே துடித்துக் கொண்டிருந்த உடம்பு அரை மணிநேரத்தில் அமைதியாக அடங்கி, முகம் மலர்ந்து சாதாரணமாகிவிட்டார்.
'நீங்கள் மருந்தெடுக்காதீர்கள்' என்று நான் சொல்லவில்லை. ஆனால் மருந்துக்கு முன் இந்த 'ஞான விருந்தை' எடுத்தீர்களானால், மருந்தின் அளவு குறையும். இந்த ஞான விருந்தை எடுத்துக் கொண்டு மருந்தெடுங்கள். மருந்தின் அளவு குறையும். செயல்படும் வேகம் அதிகரிக்கும். சில காலங்களுக்குப் பின்பு மருந்தில்லா வாழ்க்கையும் அமையும்.
திருவண்ணாமலை அந்தளவுக்கு குளிர் இருக்கின்ற பிரதேசம் கிடையாது. அக்னிப் பிரதேசம். அதனால் இங்குள்ள மக்கள் போர்வை, கம்பளம் போன்றவற்றை வைத்துக் கொள்கின்ற வழக்கமில்லை. சாதாரண ஒரு நடுத்தர வீட்டிற்குச் சென்றால் கம்பளமோ, போர்வையோ இருக்காது. விசிறி மட்டும்தான் இருக்கும். வட நாட்டுக்குப் போனால் கம்பளிச் சாமியார்கள் இருப்பார்கள், காளி கம்பளிவாலா என்பார்கள். திருவண்ணாமலை வந்தால் விசிறிச்சாமியாரைத்தான் பார்க்கலாம்.
ஒரு முறை மார்கழி மாதத்தில், நான் விடியற்காலை 3.30 மணிக்கு கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்தேன். வழியில் அவரைப் பார்த்தேன், குளிரால் அவருடைய உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. ''சாமி, ஒரு போர்வையைக் கொண்டு வந்துப் போர்த்தட்டுமா?' என்றேன். ஸதாசிவன் உடம்பென்றால் சீதோஷ்ணம் சமமாகட்டும் என்றார். நடுக்கம் நின்றுவிட்டது. உடம்பு சாதாரண நிலைக்குத் திரும்பியது.
நடுக்கத்திற்கு கூட உடுப்பைத் தேடாமல், இருப்பைத் தேடுகின்ற ஞானிகள். குளிரால் வரும் உடல் நடுக்காயினும், பயத்தால் வரும் உணர்வு நடுக்காயினும். அஞ்ஞான மாயையால் வரும் உயிர் நடுக்கமாயினும் சிவம் நானெனும் இருப்பே தீர்வு.
'நீங்கள் யார்' என்று உங்களை நீங்கள் கருதுகிறீர்களோ, அந்த இருப்பே உங்கள் செயல்பாடு. உங்கள் செயல்பாட்டிலே வருகின்ற வெற்றியோ தோல்வியோ, வியாபாரம், உறவுகள், சமூக அந்தஸ்து, போர் புகழ் இதெல்லாம் செயல்பாடுகள் சார்ந்து வருகின்ற வெற்றி அல்லது தோல்வி. செயல்பாடைச் சார்ந்து வருகின்ற வெற்றியோ தோல்வியோ உங்கள் இருப்பையே பாதிப்பதாக நீங்கள் வைத்திருக்கும் கற்பனைக்குத்தான் 'மாயை' என்று பெயர்.
உங்களுடைய தோல்வியோ உங்கள் இருப்பை பாதிக்குமானால் செயல்பாட்டில் வெற்றி சாத்தியமே இல்லை. அது உங்கள் இருப்பை பாதிக்காமல் நிலைநிறுத்தி கொள்ள துவங்கினீர்களானால் இருப்பில் அல்ல செயல்பாட்டிலும் வெற்றி நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
அதாவது வெளியிலே செயல்பாட்டினால் வருவதும் போவதும் உயர்வதும் தாழ்வதும், உங்கள் இருப்பு நிலையை, உங்களை பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்தைப் பாதிக்காத வண்ணம் வாழ்தல் ஆன்மீக வாழ்க்கை. அதுவே ஜீவன் முக்த வாழ்க்கை.
செயல்பாட்டின் உயர்வும் தாழ்வும், விருப்பும் உங்களுடைய இருப்பு நிலையை பாதிக்காமல், மனஉளைச்சல், மனஅழுத்தம், மனக்கொந்தளிப்பு, மனமாற்றம் போன்றவைகளை உங்களுக்குள் நிகழ்த்தாமல், உங்களால் உங்களைக் காத்துக் கொள்ள முடியுமானால், நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளத் துவங்குவீர்களேயானால், உங்களுடைய செயல்பாட்டில் மேம்பாடையும், செயல்பாட்டில் நுண் மேலாண்மையையும் செயல்பாட்டில் வெற்றியும் வாழ்க்கையின் வழியாக மாறி விடும்.
'யோக: சொல்லுகின்றான். யோகம் என்பது செயல்பாட்டில் நுண் மேலாண்மை. வாழ்க்கையில் அடிமட்டத்தில் செயல்பாட்டின் வெற்றி மூலம் கொஞ்சம் பணம், போர், புகழ், வீடு, கார் - இவற்றையெல்லாம் சம்பாதிப்பதின் மூலம் நடுத்தர வர்க்கத்துக்கு வந்து விட முடியும். ஆனால் நடுத்தர வர்க்கத்திலிருந்து மேம்படுவதற்கு செயலின் வெற்றி உதவாது. இருப்பின் வெற்றியே உதவும்.
ஒரு நடுத்தர வர்க்கத்திற்கு வந்து விட்டீர்களேயானால், அதற்குப் பிறகு வாழ்வில் மேம்பட ஒரே வழி, இருப்பை மேம்படுத்துவது. செயல்பாட்டின் மேம்பாடும் செயல்பாட்டின் வெற்றி தோல்வியும், இருப்பை பாதிக்கின்ற வகையில் இருக்கின்றவரை நீங்கள் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்களாக வாழ்ந்து சாவீர்கள். ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள், வாழ்க்கையை நடுத்தர வாக்கத்தில் தொடங்குவது தவறில்லை, நடுத்தர வர்க்கமாய் சாவது பெரும் தவறு.
எந்த துறையாக இருந்தாலும் - அரசியலாகட்டும், சமூகமாகட்டும், ஆன்மீகமாகட்டும், தலைமைத்தன்மை, செயலால் வரும் இன்பு துன்புக்கு அப்பாற்பட்டு, செயலால் வரும் இன்பாலும் துன்பாலும், சித்தம் கலங்காது இருப்பவர்க்கே தலைமை சாத்தியம்.
செயலால் வரும் உயர்வும் தாழ்வும், உங்களைப் பாதிக்கத் துவங்கினால், தொடர்ந்த மன உளைச்சல், துக்கத் தாக்குதல், பயத் தாக்குதல் போன்றவைகளினால் வாழுகின்ற சக்தியும் விருப்பமும் குன்றி, நடுத்தர வாழ்க்கையாகவே நம் வாழ்க்கை கழிந்துவிடும்.
எப்பொழுது செயலின் உயர்வும் தாழ்வும், செய்கையின் நன்றும் தீதும் உங்கள் இருப்பு நிலையை அசைக்க முடியாத வண்ணம் இருக்கத் துவங்குகிறீர்களோ, அப்பொழுதே வாழ்வை வாழ்வதற்கான சக்தியும் விருப்பமும் நமக்கும் தெளிவாக இருக்கும்.
மிக ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டிய அடிப்படைசத்தியம். மஹாதேவ ரகசியத்தின் முதற் பகுதி. இருப்பு வேறு. செயலால் வரும் நன்றும் தீதும் வேறு. இதை தெளிவாக புரிந்து கொண்டீர்களானால்தான், இருப்பில் இறைவனை நிறுத்தி, செயலில் வெற்றியாய் வெளிப்படுத்த முடியும். இல்லையேல் செயலின் நன்றும் தீதும், உயர்வும் தாழ்வும் இறைவனை காரணம் என்று சொல்லி, அவருக்கு இழுக்கு சாற்றி, அவருக்கும் உங்களுக்கும் இடையே இடையே இடைவெளியை ஏற்படுத்துவார்கள். இறைவன் மீது இழுக்கு சாற்றல் இடைவெளியாக்கும்.
மனிதனுடைய மிகப்பெரிய பிரச்னை இறைவனை இழுப்பதற்கும் பழிப்பதற்கும் பொருளாக உபயோகப்படுத்த துவங்குவது. நாம் நினைத்தது நினைத்தபடி நடக்கவில்லையென்றால் இறைவனைப் பழித்து விடுவது. பரீட்சையில் வெற்றிபெற்றால், தேங்காய் உடைப்பது, கு தோல்வி அடைந்தால் பிள்ளையாரையே உடைப்பது.
நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்ற இறைவன் காத்திருக்கிறான், ஆனால், நீங்களே தலை கால் புரியாமல் குழம்பிப் போய் தரித்திரத்தனமாக இருக்கும்போது, நீங்கள் நினைத்ததை அவர் நிறைவேற்ற முயற்சி செய்தால், என்ன ஆகும் ? வாழ்க்கை நரகமாய் மாறும்.
இருப்பு செயல்பாட்டால் பாதிக்கப்படுவதில்லை என்கின்ற அடிப்படையாக உங்களுக்குள் வரும்பொழுது, அதன் அறிவியல் தெரிந்து நினைப்பவருக்கு, இருப்பில் இறைவனை கண்டு, இருப்பில் இறைவனை நிறுத்தி சங்கல்பம் செய்து, அதன் மூலம், இறை சக்தியை, சதாசிவன் சக்தியைச் செயலிலும் வெளிப்படுத்துவது சாத்தியமாகும், சத்தியமாகும்.
வேதாந்த சித்தாந்த ஆகமாந்த சாரமான சிவத்துவமசி என்னும் சத்தியத்தை சங்கல்பமாய் உங்களுக்குள் சங்கல்பிக்கும்பொழுது,
வெளியில் உங்கள் வாழ்க்கையில், உங்கள் உள்ளில், இறை நிலையில் என்ன நிகழ்கிறது என்பவைகளை ஆழ்ந்து பார்ப்போம். அதை நாம் எப்படி முழுமை இன்றி புரிந்துகொள்கிறோம் என்பதையும் ஆழ்ந்து பார்ப்போம்.
இந்த சிவத்துவமசி என்ற மகாதேவ ரகசியத்தில் மொத்தம் மூனே மூனு பேர்தான் சம்பந்தம் பட்டிருக்கிறார்கள். ஒன்று, சதாசிவன், இன்னொன்று அவருடைய வடிவமாக இருந்து இந்தச் சத்தியத்தை உங்களுக்கு அனுபூதியாக மாற்றுகிற குரு. மூன்றாவது நீங்கள். இந்த மூன்று பேர்தான் இதில் சம்பந்தம் பட்டிருக்கிறீர்கள்.
உண்மையிலேயே, உள் உணர்வில் என்ன இருக்கிறது, ஆனால் அதனை நீங்கள் எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டாலே இந்த மகாதேவ ரகசியம் விளங்கும். ஒரு வீட்டை வாங்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த வீட்டைப் பார்த்தவுடன் உங்களுக்கு ரொம்ப பிடித்துவிடுகிறது. ஆனால் உங்களுக்கு பயம். உங்கள் விருப்பத்தை வெளிப்படையாகச் சொல்லிவிட்டால், 1 கோடி பெறும் வீட்டின் விலையை 5 கோடி என்று வீட்டின் சொந்தக்காரர் உயர்த்திவிடுவாரே!
ஆனால் அந்த வீட்டுக்குச் சொந்தக்காரரோ, 'எப்படியாவது 50 லக்ஷத்துக்காவது யார் தலையிலாவது கட்டிட்டு, நாம் வெளியேறினால் போதுமப்பா' என்று தவித்துக்கொண்டு இருக்கிறார். வீட்டுக்குச் சொந்தக்காரரின் மனதிலே என்ன இருக்கிறது, வாங்க வேண்டுமென விரும்புகிறவரின் மனதிலே என்ன இருக்கிறது என்ற ரெண்டு ரகசியங்களையும் சரியாகப் புரிந்துகொண்டு, செயலை நடத்தி வைப்பவர்தான் புரோக்கர்.
வாங்க வேண்டுமென விரும்புகிறவரிடம், ''அப்பா, உனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்பது எனக்குப் புரியுது. கவலையேப்படாதே. இதை விற்றுவிட்டு, வெளியேறினால் போதும் என்று நினைக்கிறார். நீ வீணாக, 5 கோடி என்றெல்லாம் எண்ணி கவலைபடாதே, அவர் 50 லக்ஷம்தான் மனதிலே வெச்சிருக்காரு...' என்கின்ற ரகசியத்தைச் சொல்லி, அதேபோல், வீட்டின் சொந்தக்காரரிடம் போய், "ஐயா, அவனுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. வாங்குவானோ வாங்கமாட்டானோ என்று பயப்படாதீர்கள். நீங்க மனதில் நினைத்துக்கொண்டிருப்பது 50 லக்ஷம்தான், நான் 60 லக்ஷமே சொல்லி வாங்கித் தருகிறேன்,'' என்று அவருக்கும் தைரியம் கொடுத்து, இருவருக்கும் ஒருவரைப் பற்றி ஒருவர் ரகசியங்களை சொல்லி, வேலையைச் சுமூகமா முடிப்பவர்தான் நல்ல தரகர்.
'சிவமே நான்' என்று சொன்னால், சிவன் கண்ணைக் குத்திட மாட்டாரா? அவருக்குக் கோபம் வந்துவிடாதா? என் தகுதி என்னென்னு கேட்க மாட்டாரா? 2 நாளைக்கு முன்னாடி கூட, கறி தின்றுவிட்டு, குடித்துவிட்டு படுத்திருந்த நான், என்னையே சிவம் சொன்னால் ஒத்துக்கொள்வாரா ? என உங்களுக்குள் தேவையேயில்லாத சந்தேகங்கள், மனக் கலக்கங்கள்.
ஆனால் சிவனோ, ''நீ என்ன செய்கிறாய் என்பது எனக்கு ஒரு பொருட்டு அல்ல, உன்னுடைய உயிரில் நான் வெளிப்பட வேண்டுமென நினைக்கிறேன். உன் உயிரை மட்டும் நான் இருப்பதற்கு அளிக்க மாட்டாயா ? உன் செயலையா நான் கேட்கிறேன்? உன் சிந்தனையைத்தான் நான் கேட்கிறேன். உன் சித்தத்தை அல்லவா நான் கேட்கிறேன், '' என அவரொரு கருத்தில் இருக்கிறார்.
இவர்கள் இருவருடைய கருத்து ரகசியத்தையும் தெரிஞ்சவர் குரு.
சீடனிடம், "அப்பா, கவலைப்படாதே. 'சிவனே நான்' என்று சொன்னால், அவா கோபப்பட மாட்டார். அவர் அந்த மாதிரி மனநிலையில் இல்லை. உன்னுடைய உயிரான சித்தத்திற்குள், பொன்னம்பலத்தான் சித்தத்தில் பொன்னம்பலமாய் வைத்து சிதம்பரம் தாண்டவம் செய்திடவே எத்தனித்து காத்திருக்கிறான் எம்பெருமான் ஈசன்.
அவன் தராதரம் கேளான் தகுதியும் கேளான். பலனும் கேளான். பலவும் கேளான். ஏதும் கேளான் என்பதைக் காட்டவே, சுடலையிலும் தாண்டவம் செய்கிறான். சுந்தரத் திருமகன் சுடலையில் கூட தாண்டவம் செய்கின்றான் என்றால் அதை விடவா உன் மனம் அழுக்காய் மாறியிருக்க முடியும் ? என்று மகாதேவன் உள்ளத்தில் இருப்பதை சீடனுக்குச் சொல்லி, என்னவெல்லாம் சீடனுக்குள் சந்தேகங்கள் இருக்கின்றதோ தவறான கருத்துக்கள் இருக்கின்றதோ
அதையெல்லாம் அழித்து தெளிவாக்கி, சிவத்துவமசி என்னும் அனுபூதியை சீடனுக்குள் மலரச் செய்பவர்தான் குரு.
உங்கள் உள்ளத்தில் இருக்கும் கிடைக்கையைத் தகாத்து, உள்ளத்தில் இருக்கும் சந்தேகங்கள் அழித்து, உள்ளத்தில் இருக்கும் துக்கங்கள் எரித்து, உள்ளத்தில் இருக்கும் தூய்மையை, தெளிவை மலரச் செய்து உங்களுக்குள் சிவத்துவமசி என்னும் அனுபூதியை மலர்வதற்காக எம்பெருமான் இருப்பு நிலையில் இருக்கும் ரகசியங்களை உங்களுக்குச் சொல்வதுதான் இந்த மஹாதேவ ரகசியத்தின் காரணம்.
பொறாமை கொள்ளான், பொல்லாப்பு இல்லான். நல்லாப்பு செய்து நமனையும் அழித்து, இருப்பும் இன்மையும் கடந்த உங்கள் சித்தம் ஒன்றையே தன் சி தம்பரமாய் மாற்றி திருநடம் செய்திட காத்திருக்கும் கபாலீசன், இறைவன் விட்ட தூதுவன்தான் குரு. இறை விடு தூதுவே குரு. சிவன் சீவனுக்கு விடும் தூது குரு.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், மஹாதேவ ரகசியத்தை உங்கள் எல்லோருக்கும் சொல்ல பெருமான் விட்ட தூதுவன் நான்.
கபாலத்தில் நீங்கள் எழுதிக் கொண்டதை மாற்றி வைக்கும் கபாலீஸ்வர். நீங்களாய் தாறுமாறாய், நிலைதடுமாறி எழுதிக்கொண்ட மூட எழுத்தெல்லாம் அழித்திடும். இறைவன் உள்ள கிடக்கையை, சிவனின் உள்ள கிடக்கையை சீவனுக்கு சொல்லவே வந்த தூதுவன்.
ஒவ்வொரு முறை நீங்கள், 'நானே சிவம்' என்கின்ற சத்ய சங்கல்பத்தை உங்களுக்குள் கொண்டாடுகிறார். ஒவ்வொரு முறை அந்தச் சத்ய சங்கல்பத்தை உங்களுக்குள் உருவாக்கும்பொழுதும், பெருமான் நீங்கள் உருவாக்கும் சத்ய சங்கல்பத்தை ஏற்றுக்கொள்வது மட்டும் அல்ல, ஆனந்த தாண்டவம் செய்கின்றார்.
சிதம்பரநாதனாய் உங்கள் சித் அம்பலத்தில் ஆனந்த தாண்டவம் செய்ய காத்திருக்கிறார். அவருக்கு வேண்டியது உங்கள் திறமை அல்ல. எதையெல்லாம் நீங்கள் அவைகளெல்லாம் அவருக்கு எந்த விதத்திலும் உபயோகம் இல்லை.
''சரி, ஜீவனுக்கு சிவன் அனுப்பிய தூதன் குரு, அதற்கு நாங்கள் எவ்வளவு தர குப்பணம் தர வேண்டும் ?'' என்று மக்கள் கேட்கிறார்கள். ஏனென்றால், 'நாம் தரகுப்பணம் வாங்காமல், வேலைசெய்து பழக்கம் இல்லை என்பதாலே, இந்தத் தரகரும் தரகுப்பணம் வாங்காமல் வேலைசெய்ய மாட்டார்' என நினைக்கின்ற மன அமைப்பு மக்களிடம் பதிந்துள்ளது.
தரகுப்பணம் வாங்கி தனக்கென சேர்த்து வைத்துக்கொள்ளும் வெளி உலக வியாபாரம், ஒரு பாரம். ஆனால் குருவால் உள்ளுக்குள் நிகழ்த்தப்படும் விஷயங்கள் பரிமாற்றம், பாரம் அல்ல.
நீங்கள், 'பெருமான் என்று வருவார்?' என்று எப்படிக் காத்திருக்கிறீர்களோ அதுபோல, 'நீங்கள் என்று அழைப்பீர்களோ என்று?'எம்பெருமானும் காத்திருக்கின்றார்.
காத்திருப்பு இரண்டையும் ஒன்றாக்கி, காற்றலை தவிர்த்து இருத்தலை ஒன்றாகும் வேலையை செய்பவர்தான் குரு.
இரண்டுபுறமும் காத்திருத்தல் நிகழ்கின்றது. ஒருபுறம் அறியாமையினால், மறுபுறம் அழையாமையினால். சிவம், அழையாததால் காத்திருக்கின்றது. ஜீவன், அறியாததால் காத்திருக்கின்றது. ஜீவன் காத்திருக்கும் காரணம் அறியாமை. சிவம் காத்திருக்கும் காரணம் அமையாமை.
அறியாமையினால் நிகழும் நிலைமையைத் தவிர்த்து அழைக்கச்செய்து, காத்திருத்தலை முற்றுபெறச் செய்து, காற்றலை கற்றலாய் மாற்றி, இருப்பை ஒன்றாகும் செயலே குருவின் செயல்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், கடவுள்கூட தலையிடமுடியாத ஒரு இடம் எது என்றால், உங்களுடைய வாழ்க்கையின் தனிமனிதச் சுதந்திரம்.
ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழில்களில் முதல் நான்கு நிலையான ஆக்குதல், காப்பாற்றுதல், அழித்தல், மறைத்தல்
இந்த நான்கையும் செய்யும்பொழுது, உங்களுக்கு அந்தத் தனிமனிதச் சுதந்திரம் இல்லை. 'நான் - நான்' என்கிற அந்தத் தனி விழிப்பு, தனி இருப்பு உங்களுக்குள் இல்லை. அந்த நான்கையும், இறைவன் நேரடியாக வடிவம் கடந்த தன்னுடைய சதாசிவ நிலையில் இருந்தே செய்துவிடுகின்றார்.
இந்த மறைத்தல், மாயையில் போட்டு உங்களை அழுத்தியவுடனேயே, 'நான்' என்கிற அந்தத் தனிமனித சுதந்திரம் வந்துவிடும். அதற்குப்பிறகு பெருமானேகூட அதில் தலையிட முடியாது.
தோலுக்கு மிஞ்சினால் உங்கள் மகனேகூட தோழன்தான். அதுக்குமேல தலையிட முடியாது. அதுபோல மாயையில் பட்டு 'நான், நான' என்கிற அந்தத் தனி அகங்காரம் வந்துவிட்டால், இறைவன்கூட தலையிட முடியாது. அதனாலதான் இந்த ஐந்தாவது செயலான ஞானம் அளித்தல் செயலை அவர், அவர் விருப்பப்படி செய்துவிட முடியாது. நீங்களும் அதற்கு இயைந்தாக வேண்டும்.
உங்களுடைய இயைபு வேண்டும், இசைவு வேண்டும். அந்த உங்களுடைய இயையையும், இசைவையும் இருப்புநிலையான, பரம்பொருள் சதாசிவ நிலையிலிருந்து, குருமேனி தாங்கி மனிதவடிவிலே ஞானமளிக்கின்ற ஒரு செயலைச் செய்யத்தான் வருகின்றார்.
காரணம் என்னவென்றால் இந்த ஐந்தாவது செயலான ஞானமளித்தலைச் செய்வதற்கு உங்களுடைய தனிமனித சுந்திரத்தோடு நீங்கள் அதை 'வேண்டும்' என்று கேட்டாக வேண்டும்.
நீங்கள் மறுத்தால் பெருமானேகூட உள்ளே வர முடியாது. அதுமாதிரியான சுதந்திரத்தை கொடுத்துவிடுகின்றார். இருப்பதிலேயே மிகப்பெரிய கொடுமை என்னவென்றால்.. பெருமானை மறுக்கும் சுதந்திரம்.
ஈசனை, அருவுரு ராசனை, குருவுருநாதனை மறுக்கும் சுதந்திரம்தான் வாழ்க்கையில் கொடிது. கொடிது, கொடிது பெருமானை மறுக்கும் சுதந்திரம். அந்த ஒரு செயலை செய்துவிட்டால், மறுத்தல் - மறுதலித்தலைச் செய்துவிட்டால், யாராலும் எவராலும் எதுவும் செய்ய முடியாது.
பிரம்மாவின் கோபத்திற்கு ஆளானால், விஷ்ணு காப்பார். விஷ்ணுவின் கோபத்திற்கு ஆளானால் சிவன் காப்பார், சிவனின் கோபத்திற்கு ஆளானால்
குருகாப்பார், குருவை மறுதலித்துவிட்டால், அவரை மறுக்கும் கதந்திரத்தை நீங்கள் உபயோகப்படுத்திவிட்டால் அவரும்கூட ஒன்றும் செய்ய முடியாது.
இந்த மறுக்கும் சுதந்திரம்தான் மிகப்பெரிய மாயை. அதில்தான் அந்த மறைத்தல் என்கின்ற லீலையைப் பெருமான் புரிகின்றார். 'அந்த மறைத்தல் என்கின்ற மறுக்கும் சுதந்திரத்திற்குள் நான் விழக்கூடாது' என்கின்ற வரத்தை சுந்தர மூர்த்திப் பெருமானாரைப்போல் பெற்றிடுங்கள்.
காத்திருத்தலை விட்டு, கற்றிருத்தலை துவங்குங்கள். காத்திருத்தல் காலத்தை வீணாக்கும். கற்றிருத்தல் வாழ்க்கையை மலர வைக்கும். கற்று இருத்தல் அறிவு. அதனால் வருவது ஞானச்செறிவு. நிகழ்வது இறைவனின் ஆனந்த வெளிப்பாடு.
நிலத்திற்குத்தான் ஒருவர் பிடித்துக்கொண்டால், இன்னொருவர் இருக்கின்றாரே என்கின்ற பயம். நெருப்பிற்கு அந்த பயம் இல்லை. எத்துணை பேர் உள்வந்தாலும் அவர்களையெல்லாம் தனதாக்கி, தானே தன் மயமாக்கிக் கொள்ளும் ஒருமை தன்மையின் வெளிப்பாடு நெருப்பு.
ஒரு நிலத்தை, 'இது எனது' என்று ஒருவர் சொன்னால், மற்றவருக்கு அது கிடைக்காது. பொறாமையும், புரட்டும், வோட்டியும், வந்தே தீரும். ஆனால் நெருப்பைப் பொறுத்தவரையில், 'நான் நெருப்பு' என்று எத்துணை பேர் சொன்னாலும், நெருப்புக்குப் போட்டியும் இல்லை. பொறாமையும் இல்லை. எல்லோரையும் தன்மயம் ஆக்கிக்கொண்டு, மீண்டும் மீண்டும் பொங்கி ஒளிரும் சக்தி உடையது நெருப்பு.
இறைவன் நெருப்பைப் போன்றவன். அதனால்தான் ஒருவர் 'நானே நீ' என்று சொன்னால், 'வாவென்று வாரி அழைத்து', சொன்னவண்ணம் செய்யும் பெருமான் செய்து காட்டி விடுவார்.
இந்த மகாதேவ ரகசியத்தை ஆழ்ந்து சிந்தியுங்கள். உங்கள் இனம், குணம், மனம், நன்று, தீது, வரவு, செலவு, சரி, தவறு, இவை எல்லாவற்றையும் கடந்து, உங்கள் இருப்பிலே நீங்கள் சிவமாகவே ? ?
உங்கள் செயலும் அதன் விளைவும் உங்கள் இருப்புதன்மையான சிவமை ? ?தொடுவதும் இல்லை, சுடுவதும் இல்லை, பாதிப்பதும் இல்லை, பாதிக்கவும் இயலாது. கரும்பால் நாவினிக்கும். இச்சத்தியத்தை மனதால் விரும்ப மனிமே இனிக்கும். நாவினிக்க கரும்பு சுவைப்பது போலே, மனம் இனிக்க இந்த சாத்தியமான சிவத்துவமசியை தொடர்ந்து சிந்தியுங்கள். இதை அனுபூதியாய் அடைய விரும்போருக்கு அருமையான ஒரு வாய்ப்பு.
அனுபூதி வேண்டும் என்று ஆவல் உடையவர்கள். வாருங்கள். பெங்களுரு ஆதீனத்திற்கு. வரலாமா அனுமதிப்பீர்களா? என்று நீங்கள் காத்திருப்பது எனக்குத் தெரியும். வருவீர்களா வரமாட்டீர்களா என்று நான் காத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள் காத்திருக்கின்றேன். வழிகாட்டி. நீங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து நித்யானந்தத்தில் மலர்ந்து நித்தியானந்தம் ஆகிட ஆசீர்வதிக்கிறேன். நன்றி. ஆனந்தமாக இருங்கள்.
சைவ நீதி ஆதிசைவம் சார்ந்து உங்கள் எல்லோருக்கும் இருக்கும் கேள்விகள் சந்தேகங்கள் இவைகள் அனைத்தையும் நித்யானந்த தியானபீடம் பெங்களுரு ஆதீனத்திற்கு அனுப்பலாம். உங்கள் சந்தேகங்களை கேள்விகளை அனுப்பலாம். அது மட்டும் அல்லாது மிக முக்கியமான இந்த ஆதிசைவத்தை உங்கள் வாழ்வியல் நெறியாக அனுபவமாக மாற்றி கொள்வதற்கு எம்பெருமான் அருளி இருக்கும் மிக முக்கியமான சமய தீகைஷ், விசேஷ தீகைஷ் என்கின்ற இரண்டும் வருகின்ற 21,22,23,24 ஆகிய நான்கு தேதிகளில் பெங்களுளு ஆதினத்தில் நித்யானந்த நகரத்தில் நடைபெறும். அன்பர்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு சமய தீகைஷயும், விசேஷ தீகைஷயும் பெற்று ஆதிசைவத்தை அனுபவமாக மாற்றிக் கொண்டு எம்பெருமானோடு இரண்டற கலந்து இறைநிலை உணர்ந்து சிவஞானத்தை அனுபூதி ஆக்கிக்கொண்டு, சிவபோதத்தில் நிலைத்து வாழுமாறு சிவபோதத்தில் நிலைபெற்று இருக்குமாறு உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கின்றோம்.
6. வாழ்வியல்நெறி
ஆகிசைவத்தின் சாரம்: மனிதன் மட்டுமல்லாது எல்லா உயிரினங்களிலும் தன்னுடைய மூல நிலையான இறைத்தன்மையை, கடவுள் தன்மையை எல்லா ஜீவனும் உணர்ந்து, அதில் லயித்து இருப்பதற்கான வாழ்வியல் முறை ஆதி சைவம்.
ஆதிசைவம் எனும் இந்த வாழ்வியல் முறை பரம்பொருள் அகண்ட பரிபூரண சச்சிதானந்த சின்மயானந்த, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொரூபி சதாசிவனே செய்து வைத்து உலகிற்கு வழங்கிய ஆய்வியல் வாழ்வியல்.
இயைபு, இயல்பு, இருப்பு எனும் மூன்று நிலைகளிலும் வாழ்வதனால் சிவத்துவத்தை நமக்கு, நம் எல்லோருக்குள்ளும் அநுபூதியாக மாற்றும் சக்தி வாய்ந்த இந்த வாழ்வியல் முறையை பரம்பொருளாம், பரமசிவனே அருளி இருக்கிறார்.
இயைபு என்றால் வாழும்பொழுதே ஒன்றை மேன்மைப்படுத்திக் கொள்வது, இயல்பு என்றால் ஒன்றை நம் வாழ்க்கையின் இயல்பாக மாற்றிக் கொள்வது, இருப்பு என்றால் ஒன்றை நாமாகவே மாற்றிக் கொள்வது.
எந்த நிலையில் இருக்கும் ஜீவனுக்கும் உதவுவது, ஆதிசைவமே
ஆதிசைவம் எனும் இந்த வாழ்வியல் முறையை நோக்கி எறியப்படும் கேள்விகளை ஆழ்ந்து பார்ப்போம். ஆதிசைவம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய கேள்வி, நானே என்னுடைய வாழ்க்கையில் இந்தக் கேள்வியை மூடர்களிடமிருந்து எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது ஒரு மிகப்பெரிய மூடத்தனம் சார்ந்த பிரச்சனை.
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்! தூங்குபவனை எழுப்பிவிடலாம். தூங்குவது போல் நடிப்பவனை எழுப்புவது சாத்தியமே இல்லை. உண்மையை உள்வாங்க வேண்டுமென்று, பகுத்தறிவோர்க்கு பதில் மூலம் சத்தியத்தை சாத்தியமாக்கலாம். ஆனால் எறிவதற்காகவே பகுத்து அறிவோர்களுக்கு பதில் வழங்குவது சாத்தியமே இல்லை.
இவர்களுடைய கேள்வி, இவர்களுடைய வாதம், இவர்களுடைய பிரதிவாதம் எல்லாமே பித்தலாட்டம். இந்தப் பித்தலாட்டக்காரர்கள் எறிந்த சில கேள்விகள். இது கேள்விகள் கூட இல்லை. பகுத்தெறிவதற்காகவே பகுத்தறியும் மூடத்தனத்தின் எச்சங்களும் மிச்சங்களுமே! அவர்களுடைய கொள்கைகளாகவும் கோட்பாடுகளாகவும், பாரம்பரியம் என்கிற பெயராலேயே அவைகளுக்கு பட்டாபிஷேகமும் செய்யப்பட்டு எறியப்பட்ட சில கேள்விகள்.
இவர்களுடைய பகுத்தெறியும் மூடத்தனத்திற்கு பாரம்பரியம் என்கின்ற பட்டாபிஷேகமும் செய்து வைத்து, இந்தக் கேள்விகள் எறியப்பட்டன.
இதில் முதல் கேள்வி என்னவென்றால், சைவம் என்றால் த்வைத கருத்தை உடையது. அத்வைதிகளுக்கு சைவத்திலும், சைவ மடத்திலும் என்ன வேலை ? ஆகவே அத்வைதிகள் சைவத்திற்குள், சைவமடங்களுக்குள், சைவ சம்பிரதாயத்திற்குள் வரக்கூடாது என்பதுதான்.