Chnidi NdachtiChapter 18 of 20
Chapter 18

5 ஞானம்

1 sections

5 ஞானம்

மஹாதேவ இரகசியம் -

பஞ்சு நூல் ஆவதுபோல் இருப்பே உரைப்பாய் இருந்து என்னுள் ஈசனே உரைப்பாய் மஹாதேவ இரகசியம் உலகிற்கு

சிதம்பர நாதனின் தூக்கிய திருவடியும், கோவிந்தராஜனின் நீட்டிய திருவடியும்

ஆழ்ந்து கேளுங்கள். அம்பலவாணண் சிதம்பர நாதனின் இரகசியத்தை. சிதம்பரத்தில் அம்பலவாணன், சிதம்பர நாதன் திருநடமிடும் திருக்கோலத்தைக் கண்டீர்களானால், அவன் தூக்கிய திருவடியும், கோவிந்தராஜன் யோக நித்திரையில் நீட்டி இருக்கும் திருவடியும் இரண்டும் ஒரு திசையையே காட்டும். அந்தத் திசையில் இருப்பதுதான் சிதம்பர இரகசியம்.

அந்த இரண்டுத் திருவடியைப் பற்றினாலும் நீ அந்த இடத்தைத்தான் அடைவாய் என்பதைக் காட்டுவதற்காக, சமாதியில் ஆனந்தத் தாண்டவமிடும் அம்பலவாணணின் தூக்கியத் திருவடியும், சமாதியில யோக நித்திரையில் இருக்கும் கோவிந்தராஜனின் நீட்டியத் திருவடியும் இரண்டுமே ஒரு முனையை, ஒரு இடத்தைக் காட்டியவாறு இருக்கும். அந்த இடம் சிதம்பர இரகசியம்.

இராஜ இரகசியம் - இராஜ குஹ்யம் என்று டூரீ கிருஷ்ணன் பகவத் கீதையிலே 9ம் அத்யாயத்திலே சில இரகசியங்களை உலகத்திற்கு அளிக்கின்றார்

தேவ இரகசியம் என்று சில இரகசியங்களை யமதாமராஜன் கடோபநிஷத்தில் உலகத்திற்கு அளிக்கின்றார்.

இன்று நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப்போவது மஹாதேவ இரகசியம்.

இராஜ இரகசியத்தையும் தாண்டி, தேவ இரகசியத்தையும் தாண்டி மஹாதேவ இரகசியம் இது.

ஆழ்ந்து கேளுங்கள். வாழ்க்கையின் அடிப்படையான உண்மைகள் எப்பொழுதுமே இரகசியங்களாக இருப்பதனால்தான், அடித்தளமே இல்லாமல் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஞானி ஆழ்ந்து பார்த்தால் உயிரே உருகும்

ஒரு வெளிநாட்டு அன்பர் இரமண மகரிஷியுடைய பரமபக்தர். ஒரு நாள் ஏதோவொரு மனக்கலக்கத்திலே இரமண மகரிஷியிடம் சென்று முறையிடுகின்றார். பகவான் ஆழ்ந்த கண்ணாலேயே, அழகொழுகும், ஆனந்தமொழுகும், அமிர்தமொழுகும் தன் திருக்கண்களாலேயே அவரை ஒருமுறை ஆழ்ந்துப் பார்த்து அந்த உடலையே உருக்குகின்றார். ஞானிகளோட பார்வை மட்டும்தான் உடலையே உருக்கும்.

அம்மா ஆழ்ந்து பார்த்தால் உணர்ச்சி உருகும். அப்பா ஆழ்ந்து பார்த்தால் தைரியம் உருகும். குரு ஆழ்ந்து பார்த்தால் உணர்வு உருகும். இரமண மகரிஷி மாதிரி ஒரு ஞானி ஆழ்ந்து பார்த்தால் உயிரே உருகும்.

அந்த உயிரையே உருக்குகின்ற பார்வையினாலே, ஆழ்ந்து ஒரு முறை பார்க்கின்றார் ஏதோ இவருக்குள் நடக்குது, உடனே அவர் தனது அறைக்கு ஓடிப்போய், தனது அறையிலிருந்த குளிக்க உபயோகிக்கும் சிறு தொட்டிக்குள் தண்ணீரை நிரப்பி அமர்ந்துகொண்டார்.

அவருக்கு ஒன்றும் புரியவில்லை. தூக்கம் வரவில்லை. என்ன செய் வதென்றும் தெரியவில்லை. அப்போது பளிச்-னு சுகமும், துக்கமும்

இல்லாத நான் என்கின்ற உணர்வு அவருக்குள் விளங்கியது. அஹம் ஸ்புரணமாக, ஆத்ம ஸ்புரணமாக, உயிருக்குள் எல்லாம் இருந்து இயக்கிக் கொண்டிருக்கின்ற எம்பெருமான் இருப்பும்-உரைப்புமாய், பஞ்சும்-நூலுமாய், காற்றும்-சொல்லுமாய்க் கனன்றுகொண்டிருக்கும் அந்த நான் எனும் அஹம் ஸ்புரணம் ஆத்ம ஸ்புரணமாக மலர்ந்தது. திரும்ப ஓடிவருகிறார், '' பகவானே, இவ்வளவு தானா ? இது தானா ?'' பகவான், ஆம்,'' என்கிறார்.

''இவ்வளவு எளிமையாக இருக்கிறதே? இதற்கா மக்கள் இந்தப் பாடுபடுகிறார்கள் ?

திருவாய் மலர்ந்து பெருமான் பகவான் அருளுகின்றார்: அடிப்படையான விஷயங்கள் இரகசியமாக இருப்பதனால்தான், அடித்தளமில்லாமல் மனிதர்கள் அல்லாடுகின்றார்கள்!''

சிவத்துவமஸி, நீங்களே சிவமாக இருக்கிறீர்கள்

இப்ப நான் அடிப்படையான ஒரு சத்தியம். கொடுமை என்னவென்றால், அடிப்படையான விஷயங்கள் இரகசியமாக இருப்பதனால், அடித்தளமில்லாமல் மனித இனம் அல்லாடுவது மட்டுமன்றி, அடிப்படையான விஷயங்கள் எளிமையாக இருக்கவே முடியாது என்கின்ற ஒரு மூடநம்பிக்கையோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆழ்ந்து கேளுங்கள் அடிப்படையான இந்த சில சத்தியங்களை. வேதாந்த, சித்தாந்த, ஆகமாந்தத்தின் சாரம், சுத்தாத்வைதத்தின் சாரம் இந்த மஹாதேவ இரகசியம். அந்த இரகசியத்தை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அந்த வார்த்தை சிவத்துவமஸி, நீங்களே சிவமாக இருக்கிறீர்கள்.

மஹாதேவ இரகசியத்தை நீங்கள் உள்வாங்கும் முன் புரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படையான சத்யங்கள். நீங்களெல்லோரும் உங்களுடைய இருக்கிறீர்கள்.

அகம் அஹம் என்று ஸ்புரித்தாலும் அது சிவம் எனும் ஆதியின் மீதுதான்

தாண்டவமிடுகின்றது. உங்களுக்குள் நான் நான் என எப்போதும் உயிர்த்திருக்கும் உயிர்ப்பு, சிவம் எனும் இருப்பாகவே இருக்கின்றது. சிவம் எனும் இருப்பே உங்களுக்குள் நான் எனும் உயிர்ப்பாக இருக்கின்றது. சாதாரண வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் சிவமே நீங்கள்.

சிவத்துவமஸி. நானே சிவமா? இது அபத்தமாகத் தெரியவில்லையா? நான் சிவன்னு சொன்னா சிவனுக்கு என் மேல் கோபம் வராதா ? சிவன் என்ன நினைப்பாரு ? "உனக்கென்ன அந்தளவு தவமிருக்கின்றதா, தகுதியிருக்கின்றதா, சிவமயமாக மாறிவிட்டாயா, தூய்மையிருக்கின்றதா என்று கேட்கமாட்டாரா ?