திருநாவுக்கரசரின் வாழ்வும் வாக்கும்
திருநாவுக்கரசரின் வாழ்வும் வாக்கும்
உணர்வும் மொழியும் கலந்து உள்ளத்துள் உயிராய் விளங்கி, ஆதி சிவனே உன்னருள் வெளிப்பட்டு, தன்னருள் இன்னருள் எங்கும் நிரைந்திருக்க, மனமெனும் கருத் தங்க மறுத்திடும் கருத்தெலாம், உன் குணம் எனும் அருளாலே வென்று வெளிவந்திட திருநாவுக்கரசன் தன் திருவாழ்க்கை சொல்லிட நாவில் வந்து நடம்புரி நான்மாடக்கூடல் நம் சுந்தரேசனே!
நாவுக்கு அரசன் என்று சான்றோராலும், அப்பரே என்று ஞானசம்பந்த பெருந்தகையாலும் அழைக்கப்பட்டவர். நம்முடைய குரு கு முதல்வருக்கு அப்பன், குரு முதல்வர் ஞான சம்பந்த பெருமான் அப்பனே என்று தன் சொந்த தந்தையைக்கூட அழைக்கவில்லை. அம்மையே அப்பா என்று சீர்காழி சோலியப்பரை மட்டும்தான் அழைத்தார். இரண்டாவதாக அவர் அப்பரே என்று அழைத்தது திருநாவுக்கரசு பெருமானைத்தான்.
திருநாவுக்கரசு சொல்வதற்கு சைவத்தை அறிமுகப்படுத்தினால்தான் அறிமுகப்படுத்தமுடியும்.
உலகத்திலே இரண்டே இரண்டு மதங்கள்தான் உண்டு. ஒன்று, இறைவனை ஒரு சக்தியாக, பேராற்றலாக, பலகுணங்களின் தொகுப்பாக பார்க்கிற மதம். இன்னொன்று, அவரைப் பலகுணங்கள் மட்டுமல்லாது, சுதந்திரமாக முடிவெடுக்கின்ற, சுதந்திரமாக இயங்குகின்ற சுதந்திரமாக செயல்படுகின்ற, சுதந்திரத் தன்மையுடைய ஒரு நபராக பார்க்கின்ற மதம்.
இந்த இரண்டு மதங்கள்தான், வேறு மதங்கள் கிடையாது. உண்மையில் இறைவன் இந்த இரண்டு கருத்துக்களுக்கும் அப்பாற்பட்டவர். இரண்டு கருத்துக்க(ளும் தவறு என்றும் நான் சொல்லவில்லை, சரி என்றும் சொல்லவில்லை. இந்த இரண்டு கருத்துக்களுமே இறுதியை அடைகின்ற வழி.
'அவர்' என்று கூட சொல்லமுடியாத அவர். 'அவா' என்றும் 'அவள்' என்றும் 'அது'வென்றும் சுட்டவும் எட்டவும் எட்டவும் இயலாத பொருள். கிட்டியோர்க்கு எட்டியது என்றாலும், அவர்கள் சுட்டியோர்க்கெல்லாம் எட்டிடாதது; கிட்டியோர்கள் சுட்டிக் காட்டினாலும், யாருக்கு காட்டப்பட்டதோ அவர்கள் எட்டிப்பிடித்து விடுவதில்லை.
ஒரு விஷயத்தை ஆழ்ந்து பார்த்தோமானால், இரண்டுமே, கருத்துதான். இரண்டுமே பாதைதான். ஏனென்றால், இறுதியில் இந்த இரண்டின் மூலமாகவும் அடையப்படும் அனுபூதி, இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டது. இரண்டுமே பாதையென்றாலும் ஒன்று மாட்டு வண்டிபோல-கட்டைவண்டி பாதை, இன்னொன்று ஜெட் - நேராக தூக்கிக்கொண்டு போகிற ஆகாய பாதை.
பெருமானை ஒரு பேராற்றலாக எண்ணி, சிந்தித்து, தியானித்து அணுகுகின்ற முறை படாத பாடுபட்டு, நீங்கள் எத்தனை முறை அதைச் சிந்திக்கிறீர்களோ, அத்தனை முறை மெது மெதுவாக அந்த குணங்கள் உங்களுக்குள் ஊறி, அநுபூதிக்கு அது உங்களைக் கொண்டு செல்லும். இது பிரம்மக்கீட ஞானம் என்று சொல்வோம்.
இறைவனை ஒரு பேராற்றலாகக் கருதுகின்ற மதங்களின் வழி, நீ ண்ட நெடிய வழி. தவம் எனும் பெயரால் தன்னைத்தானே பொரும் துயா்களுக்குள் ஆழ்த்திக்கொள்பவர்கள், சில நேரங்களில் சாமான்ய மனிதர்கள் செய்ய முடியாததை அவர்களால் செய்ய முடிகிறது என்ற 'அகம்' (அகங்காரம்) வந்து, வழி மாறி, தடம் மாறும் வாய்ப்புக்கள் அதிகம்.
ஆதிசைவத் தமிழுக்கே உரிய தெளிவின்படி, வழி என்பது வேறு, தடம் என்பது வேறு. வழி என்பது ஏற்கெனவே யாரோ ஒருவரால் நிர்மாணிக்கப்பட்டது. தடம் என்பது நீங்களே கண்டுபிடித்துக்கொண்டே செல்வது, வழி வேறு,தடம் வேறு.
அதனால், நிரந்தரமானதும் நிம்மதியானதும் சீக்கிரமானதும் கடைபிடித்தாலும் பெரும்பலன் தருவதும் ஆன வழி இறைவனைப் பேராற்றல் சக்தியாக மட்டுமல்லாது, பேராற்றல் சக்திகொண்ட நபராக தியானிப்பதே.
இதுதான், ஜைனத்திற்கும் பௌத்தத்திற்கும் வைதீக சம்பிரதாயமான ஆதிசைவத்திற்கும் இருக்கின்ற ஒரே மிகப்பெரிய வித்தியாசம்.
பௌத்தத்தின் சில சம்பிரதாயங்கள், இறைவனைப் போராற்றல் கொண்ட தனிநபராக, புத்தராக வழிபடத் துவங்கிவிட்டாார்கள்.
ஆனால் வாழ்ந்த பௌத்தமும் ஜைனமும் அந்த அளவிற்கு உயர்ந்து இருக்கவில்லை. காலப்போக்கினால்தான் அவர்கள் ஆதிசைவத்தின் நன்மைகளைப் புரிந்துகொண்டு, இதனுடைய சாரத்தையும் உள் வாங்கிக்கொண்டார்கள்.
இறைவனைப் போரற்றலாகக் காண்கின்ற, நிர்வாண நிலையாக வா்ணிக்கின்ற, சொல்லுகின்ற ஜஜன மதம், தீர்த்தங்கரர்களை ஒரு குருவாக மட்டுமே கருதுகிறது.
ஆதிசைவம், பரம்பொருளை பேராற்றல் கொண்ட சக்தியாக மட்டும் அல்லாது, நபராக ரசித்தும் ருசித்தும் தீண்டியும் அணைத்தும் செல்லும் ஒரு மிகப்பெரிய மார்க்கம்.
இதுதான், மற்ற சம்பிரதாயங்களுக்கும் ஆதிசைவத்திற்கும் இடையில் இருக்கின்ற மிகப்பெரிய வித்தியாசம்.
சிந்தையெல்லாம் வாழ்க்கையின் சாரமென கொண்டு, மதத்தை மனத்தின் பாகமாக்காமல், அதை வாழ்க்கையின் சாரமாக்கி வைத்து, இறுதி உண்மையை, அறுதி உண்மையை, ஒரு பேராற்றல் கொண்ட சக்தியாக மட்டுமல்லாது, நபராக வழிபடும் மிகப்பெரிய மார்க்கம், ஆதிசைவம்.
இந்த இரண்டையுமே தன்னுடைய வாழ்க்கையில் வாழ்ந்து பார்த்தவர் திருநாவுக்கரசு பெருமான். அதனால்தான் அவருக்கிருக்கின்ற ஆழம், அவருக்கிருக்கின்ற அனுபவம், அவருடைய தெளிவு ஒப்பீடே செய்ய முடியாதது. பக்தியில் கூட ஆழ்ந்த, பழுத்த, ஸ்திரமான பக்தி அவரு டையது.
கற்றூணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சி வாயமே ... ' குறையொன்றும் செய்யாதும் சிறைபட்ட போதிலும், முறை தவறா
ஞானப்பெருஞ்சக்தி. மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேணியும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தன் இணையடி நீழலே.
என்று பரம்பொருளை பேராற்றலாக மட்டுமல்லாது பேராற்றல் சக்தி கொண்ட நபராக வழிபடுகின்ற மனதால் மட்டுமே இயலும்.
ஒரு விநாடிகூட சிந்தை நடுங்காது, மாற்றான் சிறைப்பட்டும் மனங்கலங்காது, என்ன கற்பணை பாருங்கள்!
மாசில் வீணையும் - அந்த வார்த்தைக்கு அர்த்தமென்ன வென்றால், வீணை தூசுபட்டிருந்தால் அதிலிருந்து எழும் நாதத்தில் தெளிவு இருக்காது. தூசு கம்பி மேலே படியாமல் இருக்கின்ற வீணைதான் சுத்த ஸ்ருதியை உருவாக்கமுடியும். ஆழமான 'கேட்டல்' இருந்தால்தான், இது மாசு பட்டு துடைத்த வீணையா? மாசே படாத வீணையா? என்கின்ற தெளிவிருக்கும்.
அடுத்த சொல், மாலை மதியமும் - இரவு அல்ல, மாலை. மாலை நேரத்திலே வருகின்ற சந்திரனின் அழகுகு.
வீசு தென்றலும் - தெற்கிலிருந்து வருகின்ற காற்று உடலுக்குச் சுகத்தை அளிக்கும்.
வீங்கிள வேணியும் - இளவேனிற்காலம்
மூசு வண்டறை பொய்கையும் - தாமரையில் இருக்கும் தேனைக் குடித்துவிட்டு, ஆயிரக்கணக்கான வண்டுகள் அந்த சுகமும் ஆனந்துமும் தாளாது, போதையில், அந்த மயக்கத்தில் அறையும் 'ம்ம்ம்…' என்ற சப்தம் ஒலித்துக்கொண்டிருகின்ற பொய்கை.
இத்தனையையும் சிறையில் அமாந்து, சதாரண சிறையல்ல, சு ண்ணாம்புக்காலவாய்... குறையொன்றும் கொதிக்கின்ற அறையில் சுட்டெரித்தார்கள் பாதகர்கள். அதிலும் தன்னிலை தவறாது, சிந்தை சிவமயத்திலே இருந்ததால், 'மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே'
என்று பாடுகிறார்.
மன அழுத்தம் வந்தால் கற்பனை வராது. சிறையில் அமர்ந்திருக்கும் போது, இந்த கற்பனை வருகிறது என்றாலே சுகந்தமாக, ஓய்வாக, ஆனந்தமாக, மன அழுத்தமே இல்லாமல் இருந்திருக்கிறார் என்று அதிகாரபூர்வமாகச் சொல்லமுடியும்.
அவருடைய சைவத்தையும் புரிந்துகொள்ளலாம். இன்றைய அதிசைவ சத்ச ங்கத்தின் சாரமாய் உங்களுக்கு சொல்ல விரும்புவது, இறைவனை வெறும் பேராற்றலாக மட்டும் வழிபட்டால், மிகுந்த சிரமங்களுக்கு உட்பட்டு சாதனைகள் செய்து வேதனையெல்லாம் கடந்து, அதனை அடையவேண்டும். ஆனால் ஆதிசைவமோ இறைவனை பேராற்றல் பெருஞ்சக்தி கொண்ட நபராகக் காட்டுவதனால், அவரை அநுபூதியாக அடைந்து விடுவது சுலபம்.
ஆம்ந்துகதையைக் கேட்டோமானால், பக்தி வேண்டும் , முக்தி வேண்டும், என்று பெருமானக் கேட்பதும், அவர் கொடுக்கும் அருளையும், ஆசியையும் சக்தியையும் அவா் புகழைப் பரப்புவதற்கு மாத்திரம் உபயோகிப்பதும் எல்லா அன்பர்கள், தொண்டர்கள் அடியார்கள் வாழ்விலும் நடக்கின்ற ஒன்று. பக்தி வேண்டும் என்று திருநாவுக்கரசப் பெருமான், பொருமானைப் பார்த்துப் பிரார்த்தித்தின்றார், சைவத்தைப் பரப்புகின்றார். பரப்பும்பொழுது வருகின்ற இடர்பாடுகளிலே அரசன் இவரை கல்லில் பூட்டி கடலில் பாய்ச்சுகின்றான். கல் தெப்பமாய் மிதந்து கரையேறுகின்றார்.
இந்த அத்புதத்தை, அதிசயத்தை சைவத்தைப் பரப்புவதற்கு உபயோகிக்கின்றார். இதுபோன்று பெருமானிடம் படிக்காசு பெற்று அன்னதான் செய்து சைவத்தைப் பரப்புகிறார், பாடல் பாடி திருக்கதவு திறந்து சைவத்தைப் பரப்புகிறார். இது எல்லாவற்றையுமே ஜீவன் சிவனுக்கு உண்மையுடையதாக இருக்கின்றது, சிவன் ஜீவனுக்கு உண்மையுடையதாக இருக்கின்றார். இது எல்லா யோகிகள், சித்தர்கள், புருஷர்கள், ஞானிகள், அவதாரபுருஷர்கள் இவா்களின் வாழ்க்கையில் எல்லாம் பார்க்கலாம்.
ஆனால் சுந்தரமூர்த்திப் பெருமான் பொன் கொடுக்கவில்லை என்று ஏசுகின்றார். பெருமான திட்ராரு.. "என்னயா சாமி நீ.. கேட்டா குடுக்கமாட்டேங்கிற '. திட்டிட்டு அப்புறமா தூதுதுடு பன்றாரு. பெருமான இரண்டையும் பொறுத்துக்கொண்டு அவர் கேட்டபடி பொன்னையும் அளிக்கின்றார்
இந்த ஆதிசைவத்தின் சாரத்தை உங்களின் அனுபவமாக மாற்றிக் கொள்வதற்காக உங்களுக்குத் தேவையான சத்தியங்களை, இந்த வாழ்வியல் விஞ்ஞானத்தை உங்கள் முன் திறந்து வைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. சீரிய பக்தியுடனும் இந்த ஆதிசைவத்தின் சாரத்தை உள்வாங்கி, உங்களுக்குள் இருக்கும் 'கடவுள் துகள்' விழிப்படைந்து, கடவுள் நிலை அடைந்து, சிவோஹம் எனும் அனுபூதியில் நிலைபெற்று, சிவஞானத்தில் நிலைத்து இருந்து, சிவபோதத்தில் வாழ்வீர்களாக, நித்ய ஆனந்தத்தில் நிலைபெறுவீர்களாக.
ஆழ்ந்து இதை வாழ்ந்து பாருங்கள். ஆதிசைவம், வாழ்ந்து பார்த்து அனுபவிக்க வேண்டிய சத்தியம். வெறும் எண்ணத்தாலோ வார்த்தையாலோ புரிந்துகொள்ள முடியாத, வாழ்ந்து பார்த்தே உணர்ந்து கொள்ளப்பட வேண்டிய வாழ்வியல் நெறி, வாழ்வியல் சத்தியம். வாருங்கள் சைவத்தை வாழுங்கள். மேன்மை கொள்வீர்கள்.