Chnidi NdachtiChapter 16 of 20
Chapter 16

ஆழ்ந்து கேளுங்கள்

1 sections

ஆழ்ந்து கேளுங்கள்

சோழ நாட்டிலே, திருப்பெரும் தலம் ஒன்று.. இதில் ஏயர்கோன் கலிக்காமர் என்கின்ற சிவனடியார் வன்தொண்டர் சுந்தரா், தன்னுடைய சுய நலத்திற்காகப் பெருமானை ஏவல் கொண்டார் என்கின்ற செய்தி கேட்டதும், கடும்கோபமடைந்தார்.

எல்லாத் தொண்டா்களுக்கும் கோபம் வரவில்லையென்றால் அவர்கள் சிவத் தொண்டா்கள் என்று சொல்ல முடியாது. அனால் பெருமானோ, ''இது எனக்கும் அவருக்கும் உள்ள தனி-உறவு, அதற்கெல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள், அதற்கெல்லாம் நீங்கள் கோபப்படாதீர்கள்,''என்கிறார்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த மொத்த சூழ்நிலையையும் ஆராய வேண்டும். ஏயர்கோன் பெருமானோ, அந்தக் கோபத்தைத் தணித்து இருவரும் இனிமையாக நட்பு பாராட்ட வேண்டும் என்று விரும்புகின்றார். உண்மையிலேயே சுந்தரர் செய்தது இன்னொரு சிவபக்தருக்கு நிச்சயமாக ஜீரணித்துக்கொள்ளக்கூடிய விஷயமல்ல. ஆனால் அந்த அவப்பெயர்கூட சுந்தரருக்கு வரக்கூடாது என்று நினைக்கின்றார்.

காரணம் என்னவென்று ஆழ்ந்து பாருங்கள், அந்த அளவிற்கு.. பெருமான் சுந்தரா் மீது நட்பு பாராட்ட, சிரத்தை வைக்க, அன்பு செய்ய காரணம் என்ன? அப்படி என்ன செய்து விட்டார் சுந்தரா? பெருமான் இப்படி ஓடி ஒடி கேட்டதையெல்லாம் செய்தது மட்டுமல்லாது, கேட்டது கெட்டதாக இருந்தாலும் அதன் காரணத்திற்காக இவர் பெயர்கூட கெட்டுவிடக்கூடாது என்று நினைக்கின்ற அளவிற்கு, ஓடி ஓடி சுந்தரரை காக்க வேண்டிய அவசியம் என்ன பெருமானுக்கு ? இந்த இருவருடைய உறவின் நட்பையும் பாருங்கள், மொத்தக் கதையையும் படித்தால்தான் அது புரியும்.

ஒரு காலத்திலே தேவர்களும், அசுரர்களும் கடலைக்கடைந்து அமிர்தம் எடுப்பதற்காகக் கடலைக் கடைகிறார்கள். அப்பொழுது, கடைவதற்காக உபயோகப்படுத்திய பாம்பு வாசுகி விஷத்தைக் கக்குகிறது. அந்த விஷத்தைப் பார்த்ததும் அசுரா்கள், தேவர்கள் எல்லோரும் விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். பிரச்சினை என்று வந்தவுடன் ஓடிப்போகின்ற கும்பல். பிரம்மா விஷ்ணு எல்லாரும்கூட ஓடிப்போய்விட்டார்கள்.

இந்த விஷத்திலிருந்து பூமியைக் காக்கவேண்டிய பொறுப்புடைய எம்பெருமான் அமாந்திருக்கின்றார். யாருமே இல்லை அருகில். அந்த தைரியத்தோடு, நெஞ்சுரத்தோடு எம்பெருமான் இருக்க, ஒரு தீங்கும் வராது என்ற சிரத்தையோடு உடன் நின்றவர் ஆலால சுந்தரர்.

உண்மையிலேயே அழிந்துபோய்விடுமோ என்கின்ற பயத்தையும் உருவாக்கி, அந்தச் சூழ்நிலையைக் காட்டினால்தான், யார் ஆலால சுந்தரர் என்று நமக்கே தெரியவரும். ஒரு காலத்தில் என் தியான முகாம்களில் கலந்து கொள்வது என்பது நாகரிகம். இன்னொரு காலத்தில் என்னை எதிர்ப்பது நாகரிகம். நாக ரிகத்திற்காக வருவது, நாகரிகத்திற்காகப் போவது அதற்குப்பெயர்தான் அழகுப்போட்டிகளில் நடந்து காட்டப்படும் பூனைநடை -என்று சொல்வது. நாகரிகத்திற்காக வந்தது நாகரிகத்திற்காகப் போய்விட்டது.

அதுபோலத்தான், விஷம் திரண்டாலும் பெருமான் இருக்க ஒரு அழிவு வருமா? என்ற தைரியத்தோடு நின்றது மட்டுமல்லாமல், பெருமான் கடைக்கண் உத்தரவைப் புரிந்துகொண்டு, மொத்த விஷத்தையும் ஒன்றாய் உருட்டி, கன் கையில் காங்கித் திரட்டிக் கொண்டுவந்து பெருமானிடம் ஒப்படைத்தவர் ஆலால சுந்தரர்.

அதன் அருகில் சென்றால் இறந்துவிடுவோமோ என்று விஷ்ணுவும்-பிரம்மாவும் கூட ஓடிப்போய்விட்டார்கள். ஆனால் தைரியமாகச் சென்று கைகளில் தாங்கி, சோதனையின்போது உடன் இருந்தது மட்டுமல்லாமல், அதைச் சாதனை ஆக்குவதற்கு துணை நின்றதனால், ஆலால சுந்தரனுக்கு ஒரு துக்கமும் வராமல், ஒரு தீங்கும் வராமல் எம்பெருமான் காக்கின்றான். அதுதான் நட்பின் இரகசியம்.

'நீ செய்த அந்த ஒரு செயல்போதுமப்பா, நீ என்ன வேண்டினாலும் அதைச் செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று, என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்' என்று எம்பெருமானே உருகி, எம்பெருமானே முடிவுசெய்த, எம்பெருமானே நினைந்து, எம்பெருமானே அன்பு செய்த சுந்தரமூர்த்திப் பெருமான்.

ஏயர்கோன் கலிக்காமர்மீது சுந்தரருக்கு உண்மையில் எந்தக் கோபமும் வருத்தமும் இல்லை. அனால் ஏயர்கோன் கலிக்காமருக்கு சுந்தரர்மீது வருத்தம், அந்த வருத்தம் காரணத்தோடு விளைந்த வருத்தம். பெருமான் எப்படியாவது இந்த ஊடலை, பிணக்கைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கின்றார். இந்த வருத்தம் தீர வேண்டும், பூரணத்துவம் வரவேண்டும் என்று நினைக்கின்றார்.

உடனே ஏயர்கோன் கலிக்காமருக்குத் தீராத சூலை நோய் கொடுத்தார். கொடுத்தார். கொடு த்தது மட்டுமல்லாது, அவர் கனவிலே போய், ''நம் வன்தொண்டன் சுந்தரன்தான் இதைத் தீர்த்து வைக்கின்ற ஒரே வழிதெரிந்தவன், அவன் தொட்டால், அது மாத்திரம்தான் இதற்குத் தீர்வு, '' என்று சொல்கிறார்.

சுந்தரர் கனவில் வந்து, ''அப்பா, போய் அவன் சூலை நோயைத் தீர்த்து வைத்து வா,'' என்று சொல்கிறார். இப்படியாவது இருவரையும் சேர்த்துவிடலாம் என்று.

ஆனால் சில சில இருக்கிறார்கள்.

Part 3

ஏயர்கோன் கலிக்காமர் சொல்கிறார், ''எம்பெருமானே! வழிவழியாய் உனக்கு அடிமையாய் இருக்கும் எனக்கு வந்த ஒரு வியாதியை, புதியவனாகிய சுந்தரன் வந்து தீர்ப்பதா? அவன் வந்து தொட்டு நான் நோய் தீர்ந்து வாழ வேண்டிய அவசியமே இல்லை," என்று உடைவாளை எடுத்து வயிற்றைக் கிழித்து இறந்துவிடுகின்றார்.

''உனக்கு ஒரு தீங்கு செய்து, உனக்கு ஒரு மாறு செய்த ஒருவன் தொட்டுத்தான் என் வயிறு சரியாக வேண்டும் என்றால், அந்த வியாதி தீர்ந்து அப்படி இந்த உடலில் வாழ்ந்து ஒரு தேவை எனக்கில்லை," என்று வயிற்றைக் கிழித்து இறந்துவிடுகின்றார் ஏயர்கோன் கலிக்காமன்.

பக்தியின் ஆழத்தைப் பாருங்கள். 'நீயே சொன்னாலும் உனக்கு ஒரு தீங்கு செய்தவர்களைச் சும்மா விடமாட்டோம், நீயே மறுத்தாலும் உனக்கு ஒரு தீங்கு செய்தவரை மன்னிக்க மாட்டோம். '

பெருமானையே நடுநடுங்கச் செய்யும் பெரும் பக்தி.

இதைக் கேள்விப்பட்டதும் சுந்தரமூர்த்தி நாயனார், ஐயோ! என்று அலறி அடித்துச் செல்கின்றார். சென்ற இடத்திலே ஏயர்கோன் கலிக்காமரின் உடல் வீழ்ந்துகிடப்பதை, குருவாளால் வயிற்றைக் கிழித்துக்கொண்டு அவர் விழுந்துகிடப்பதைப் பார்க்கிறார்.

'ஐயோ! சிவ பக்தன் மனம் வருந்துகின்ற நிலைக்கு நாம் காரணமாகி விட்டோமே! நம் சுயநலத்திற்காக பெருமானை ஏவல் கொண்டது சரியா? அதைக் கண்டு வருந்தி இவருடைய வருத்தம் நியாயமானதுதானே!' என்று சுந்தரர் உருகுகின்றார். அந்த உருகுதலில் பூரணத்துவம் நடந்துவிடுகின்றது. நடந்தது மட்டுமல்லாமல், 'இவர் உயிர்விடக் காரணமாக இருந்ததனால் இதே உடைவாளால் நானும் உயிர் விடுகிறேன்' என்று அதே உடைவாளை உருவி தன் வயிற்றைக் கிழித்துக்கொள்ள சுந்தரர் முயற்சிக்கின்றார்.

பெருமான் தோன்றி, ஏயர்கோன் கலிக்காமருக்கு உயிர்கொடுத்து, சுந்தரரைத் தடுத்தாட்கொண்டு அருள்கொடுத்து, இருவருக்கும் இருவருடைய பக்தியின் சிறப்பையும், இருவருடைய பக்தியின் வேறுபட்ட பரிமாணத்தையும் புரியவைத்து, இருவருக்குள்ளும் இனிமைத்தன்மையை மரைகின்றார்.

கொடுத்த வரத்திற்காக தடுத்தாட்கொள்ள வந்து, பித்தா! என்று அவதூறு செய்யப்பட்டு, ஓலை கிழித்தெறியப்பட்டு, அப்பொழுதும் மனம் சளைக்காது, மூல ஒலை வெண்ணைநல்லூரில் உள்ளது என்று சொல்லி, அங்கு அழைத்துக் சென்று, உண்மையைச் சொல்லி தடுத்தாட்கொண்டு, பரவை நாட்சியாருக்குத் தூதுசென்று, இரண்டாவது ஒர் பெண் வேண்டும் என்று கேட்க, சங்கிலி நாச்சி க்குத் தூது சென்று, அவள் இட்ட நிபந்தனையை விளக்கி, நிபந்தனையை பூர்த்தி செய்வதற்கு ஞானத் தெளிவும் கொடுத்து, நிபந்தனையிலிருந்து எப்படியாவது வெளியேற முயற்சித்த சுந்தரன் சங்கிலி நாச்சியாரை ஏமாற்றாத வண்ணம் ச ங்கிலி நாச்சியையும் காத்து, இதையும் மீறி சுந்தரன் கொடுத்த சத்தியத்தை மீறி இரு கண்களையும் இழந்தாலும் அதையும் பொறுத்து, இரண்டு கண்களையும் மீண்டும் கொடுத்து, மீண்டும் பரவை நாச்சியாருக்கு தூது சென்று, அதை நாச்சியார் கேளாத போது இரண்டாவது முறையும் தூது சென்று, இத்துணையும் என்னை செய்தலால் மற்றவர் உன்னைத் தவறாக நினைக்க கூடாது என்று, அந்தப் பிரச்சனையும் தீர்த்து வைத்து, என்ன கேட்டாலும் செய்வேன் மற்றும் அல்லாது செய்வது நான் என்பதினால் கெட்ட பெயர் உனக்கு வந்திடக் கூடாது என்று, அதற்கும் நானே பொறுப்பு என்று, இத்தனையையும் செய்த பெருமானின் கருணையை எண்ணி வியப்பதா? இத்தனையையும் பெருமானைச் செய்ய வைத்த சுந்தரரின் பக்தியின் சக்தி எண்ணி வியப்பதா ? இது சுந்தரரின் பக்தியின் சக்தியா ? பெருமானின் கருணையா ?

பெருமானின் கருணை, பொங்கும் கங்கை போல் என்றென்றும், எப்போதும் எல்லோர் மீதும் உள்ளது. உண்மையில் இதை ஆழ்ந்து பார்த்தால், இதற்கு முக்கியமான காரணம், பெருமான் கருணை என்பதை விட சுந்தரரின் பக்தியின் சக்தியே என்ற முடிவுக்குத்தான் வர வேண்டும், ஏனென்றால் அந்த முடிவுதான் நமக்குள்ளும் சக்தி தரும் பக்தியை உருவாக்க முடியும்.

பக்தி 3 விதம் உண்டு. தன்னைத்தானே தாழ்த்திக் கொள்வதை 'பக்தி' என்று நினைத்துக் கொண்டிருக்கும் மூட பக்தி. அடுத்து, முக்தி தரும் பக்தி, முக்திக்காகப் பெருமானோடு சம்மந்தம் செய்துகொண்டு பக்தி வைத்துக் கொள்ளுதல். திருநாவுகரசருக்கு இருந்தது முக்தி தரும் பக்தி.

அடுத்தது, சக்தி தரும் பக்தி. சுந்தரமூர்த்தி பெருமானுக்கு இருந்தது சக்தி தரும் பக்தி, என் மீது அவனுக்கு ஏற்பட்டிருக்கும் மனக்கசப்பின் ஆழ்த்தைவிட, என்மீது அவனுக்கு இருக்கும் பக்தியின் இனிமையின் ஆழம் அதிகம் என்று பெருமானே நம்பிக்கை கொண்டிருக்கும் பக்தியின் சக்தி.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா! பெருமானுக்கே அந்த நம்பிக்கை வரவேண்டும் என்றால், தன் உயிரையே உருக்கி ஊற்றினால் அவன் உருவாக வார்க்கெடுத்தால் மட்டும்தான் அது சாத்தியம்.

நீங்கள் பெருமானை நம்பினால் அது பக்தி. பெருமான் உங்களை நம்பினால் அது சக்தி. ஜீவன் சிவனை நம்பினால் அது பக்தி. சிவன் ஜீவனை நம்பினால் அது சக்தி. 'இவனுக்கு இதுகொடுக்க வீணாகவோ, விரயமாகவோ ஆகாது' என்று அவன் நம்பிக்கை வைக்கும்பொழுதுதான். அது உங்களுக்கு ஆகும்.

உண்ணும்பொழுது குழந்தை தவறி, உணவு சரியில்லை என்ற கோபத்தால் ஒருபொருளை நம்மீது விட்டெறிந்தால், அதைக் கொலை வழக்காக பதிவுசெய்ய நாம் நினைக்க மாட்டோம். அதைக் கொலை முயற்சி என்று நினைக்கமாட்டோம். நன்றாகத் தெரியும், செயலைவிட இருப்பின் நோக்கம் நமக்குப் புரியும்பொழுது, செயலை ஒரு பொருட்டாக பொருட்படுத்துவதில்லை. அவ்வாறு சிவன் ஜீவனை நம்பும் சக்தி தரும் பக்தியை வாழ்வதுதான் ஆதி சைவம்.

சூது வந்த போது பொது பெருமானை அழைத்து வெற்றி கண்டவர் ஞானசம்மந்தா். சூது வாது இரண்டும் செய்வதற்காக பெருமானை அழைத்து என்ன வேண்டுமோ அதைத் தன் போக்கிலேயே சாதித்துக் கொண்ட ஒரே பக்தர் தம்பிரான் தோழர் சுந்திரமூர்த்தி பெருமான் நாயனார்.

சுந்தரரின் மொத்தக் கதையையும் படித்தீர்களானால், இவர் ஒருமுறைகூட 'பெருமான் விதி'க்கு வணங்கவில்லை. தன்னுடைய மதிக்கு மட்டும்தான் பெருமானை வளைத்தாா். 'அப்பா பார்த்துக்கொள்', ம்ம்ம் இதை செய்' என்று தனக்கு என்ன தேவையோ அதற்குப் பெருமானை வளைக்கின்ற பக்தியின் சக்தி. இதுதான் வேண்டும்.