Chnidi NdachtiChapter 15 of 20
Chapter 15

சுந்தரர் வாழ்க்கையே சுந்தரம்

1 sections

சுந்தரர் வாழ்க்கையே சுந்தரம்

உண்மையில் பார்த்தால் இந்தக் கேள்வியை நீங்கள் ரொம்ப வேகமாக கேட்டுவிட்டீர்கள். இன்னும் முழுக்கதையையும் நீங்கள் முழுமையாகக் கேட்டு முடிக்கவில்லை. இன்னும் இறுதிக் காட்சி முடியவில்லை. இறங்கி வந்ததில் இருந்து திரும்பிப் போகிற வரைக்கும் ஒரு விறுவிறு நாவல் மாதிரிதான் சுந்தரா கதை மட்டும் போகிறது, அவர் வாழ்க்கையே சுந்தரம்.

தனிமனித ஒழுக்கம், சமூகத்தைச் சமச்சீர் நிலையில் வைக்கின்ற ஒழுக்கம், சமூகத்தின் கோட்பாடுகள் எதையுமே மதிக்காமல், இது எதையுமே வாழாமல், என்னவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் செய்கிறார். அது அத்துணைக்கும் பெருமானே தூது செல்கிறார். அப்பொழுது நானும் அதுபோல் செய்தால் எனக்கும் பெருமான் தூது செல்வாரா ?

ஆழ்ந்து கேளுங்கள், இந்தப் பிரச்சினையை சிறிது ஆழ்ந்து சிந்தித்தால் மட்டும்தான் இதற்கு தீர்வு கிடைக்கும், புரியும்.

உடல்-மனம்-உணர்ச்சி-உணர்வு-ஆன்மா இந்த ஐந்தும் ஒன்று இணைந் தவன்தான் ஒரு மனிதன். சுந்தரமூர்த்தி நாயனார் உடலாலும், மனத் தாலும் செய்ததை மட்டும்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். உடலாலே இரண்டு பெண்களை மணந்துகொண்டார். மனத்தாலே இரண்டு பெண்களிடம் காதலில் விழுந்தார். இதைத்தான் பார்க்கிறீர்கள். உணர்ச்சியாலும், உணரவாலும், உயிராலும்-ஆன்மாவாலும் அவர் எப்படி இருந்தார் என்பதை நீங்கள் பார்க்கவோ நினைக்கவோ மறந்து மறுக்கிறீர்கள். காரணம் என்னவென்றால், நீ ங்கள் உங்களையே வெறும் உடல்-மனமாக மட்டும்தான் பார்க்கிறீர்கள்.

நாத்திக நாராசம் தமிழ்நாட்டில் பரப்பப்பட்ட பொழுது, இந்த உடல் -மனம் தாண்டி உங்களுடைய பரிமாணங்கள் வளர்வதற்கான வாய்ப்பே அழிக்கப்பட்டது. பகுத்து அறிவதற்காக, பகுத்தறிந்தால் தவறில்லை ... பகுத்து எறிவதற்காக பகுத்தறிவைப் பரப்பினார்கள். பகுத்து எறிய பகுத்தறிவை உபயோகித்தார்கள். அதுவும் இந்து மதத்திற்கு எதிராக மட்டும்தான் உபயோகித்தார்கள்.

தமிழ்நாட்டில் நாத்திகம், பகுத்தறிவு இயக்கம் பரவிற்று என்று தயவுசெய்து யாரும் தவறாக நினைக்காதீர்கள். முட்டாள் தனமான, மூடத்தனமான இந்து மத விரோதக் கருத்துக்களை மொத்தமாகத் தொகுத்து, அதற்கு ஏதாவது ஒரு தலைப் பு கொடுக்க வேண்டுமல்லவா ? அதற்காக, அதற்கு 'பகுத்தறிவு இயக்கம்' என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால் கொடுமை என்னவென்றால், சாத்தியங்களை மறுக்கின்ற இந்த முட்டாள்தனமான மூடக்கருத்துகள் பரவியதனாலே, நீங்கள் எல்லாருமே, உங்களை உடல்-மனம் தாண்டி வேறு ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கே வந்துவிட்டீர்கள்.

இது ஒரு பெரிய கொடுமை. உங்களை நீங்கள் உடல்-மனம் என்று நினைப்பதினால், சுந்தரரையும் உடல் மனம் என்கின்ற நிலையிலிருந்து மட்டும்தான் பார்க்கிறீர்கள்.

'நீங்கள்' என்கின்ற உங்களுடைய உடல் வெறும் 5 சதவிகிதம்தான். உங்கள் மனம் வெறும் 5 சதவிகிதம்தான், உங்களுடைய உணர்ச்சிகளும், உணர்வும், உயிரும்தான் மீதி 90 சதவிகிதம். உடல் 5 சதவிகிதம், மனம் 5 சதவிகிதம் - இந்த 10 சதவிகிதம் செய்த செயலைப் பார்த்தீர்களே தவிர, மீதமுள்ள 90 சதவிகிதம் இந்த 10 சகவிகிதத்தின் செயல்களின்பொழுது எந்த நிலையில் இருந்தது என்று பார்க்கவில்லை.

உங்களுடைய வாழ்க்கையின் நோக்கம்மீது குரு கொள்ளும் நம்பிக்கையே சக்கி

சுந்தரர் மிக அழகாகச் சொல்கிறார் தடுக்கி விழுந்தாலும் உன் நாமமே என் தருக்கில் செறுக்கும். தடுக்கி விமுந்தாலும் உன் நாமமே என் நாவில், நெஞ்சி ல் சுரக்கும். அவருடைய இந்த உணர்வுநிலை, அவருடைய இந்த உணர்ச்சி நிலை, அவருடைய உயிர் எதிலே நிலைகொண்டிருந்தது என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெளிவிக்கிறது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அரசிளங்குமரனாக, எதிர்கால அரசனாக, அந்த நாட்டு அரசனாலே வளர்க்கப்பட்டும், பெருமான் ஆட்கொண்டவுடன் அரசைத் துறந்து ஊர் ஊராய் சைவம் பரப்பச் சென்று விடுகின்றார். அப்படியென்றால் என்ன அர்த்தம், அவா உயிர் 'பொருள், உலகம், சுகம்' - இதன் மீது நிலைகொள்ளவில்லை. அதுவே வேண்டுமானாலும் பெருமானிடம்தான் கேட்டுப்பெறுவேன், வேறு ஒருவரிடம் கேட்கவும், வேறு ஒருவரிடம் வணங்கலும் ஆகாது.

அஞ்சுவதும், அடிபணிவதும் அப்பன் ஒருவனுக்கே! அவனேதான் மன்னவனும், அவனேதான் என்னவனும். கடவுளும் அவன்தான், தலைவனும் அவன்தான், இறைவனும் அவன்தான். வேறு ஒருவருக்கு ஊழியம் செய்ய மாட்டேன். வேறு ஒருவருக்கு என் வாழ்க்கையும், தலையும் வணங்காது.

சைவத்தினுடைய சாரம், சைவத்தின் ஒரு அடிப்படையான விளக்கம்: பரம்பொருளான சதாசிவனை, பக்தியால் பரவுவதும், நம் பக்தியை அவர் ஏற்றுக்கொண்டு நம்மை வாழ்விக்கின்றார், நாம் அவாமீது வைத்த நம்பிக்கைபோல் அவரும் நம்மீது அதே நம்பிக்கையை வைத்திருக்கின்றார் என்கின்ற சிரத்தை, என்று புரிந்துகொண்ட சரணாகதி. அவ்வளவுதான், மொத்த சைவமுமே இவ்வளவுதான், வேறு ஒன்றும் இல்லை.

வாழ்க்கையையே எனக்கு விவுப்படைத்த ஒரு சன்யாசி தெருவில் நடந்துபோகும்பொழுது தெரியாமல் என்னுடைய படத்தை மிதித்துவிட்டுப் போவதைப் பார்த்த ஒருவா என்னிடம் வந்து, ''சாமி, உங்கள் படத்தை அவர் மிதித்துவிட்டுப் போனார்,'' என்று சொன்னாலெ, நான் சொல்வது இதைத் தான்: அப்பா, தெரியாமல் நடந்திருக்கும். விடப்பா!

தவறே செய்தாலும் அவன் தெரிந்து செய்திருக்கமாட்டான் என்கின்ற ஒரு மனப்போக்கு எப்பொழுது எனக்குள் வருமென்றால், அவனுடைய வாழ்க்கையின் நோக்கம் அந்த அளவிற்கு ஆழமாக என்னுடைய நம்பிக்கையைப் பெற்றிருக்கும்பொழுதான் வர முடியும்.

ஜீவன் சிவனுக்குப் பொய்த்தாலும், 'இல்லை, அவன் வாழ்க்கையின் நோக்கமும், அந்த நோக்கம் அவனுக்குள் பொதிந்திருக்கும் ஆழமும், அந்த ஆழத்தின் தாக்கமும் கண்டவன் நான், அதனால் நான் அவனுக்குப் பொய்க்க மாட்டேன்' என்று சிவனேக்கின்ற அளவிற்கு ஜீவனின் பக்தியின் சக்தியை வெளிப்படுத்தியது சுந்தாமூர்த்தி சுவாமிகளின் வாழ்க்கை மாத்திரம்கான்.

'எனக்கு அவரைத் தெரியும், நான் விழுந்து விழுந்து கும்பிடுகிறேன். ஆனால் என்னை அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லையே' என்று நினைக்கின்றீர்கள். உங்களுக்கே அவரைத் தெரியும்பொழுது, அவருக்கு உங்க ளைத் தெரியாதா ? மொத்த சைவமும் இவ்வளவுதாங்க ஐயா.

நினைத்தவுடன் அடிவயிறே இனிக்கின்ற நம்பிக்கை -

இறை நம்பிக்கை

நினைத்தவுடன் அடிவயிறே இனிக்கின்ற நம்பிக்கை... நினைத்தவுடன் அடிவயிறு கலங்குகின்ற துன்பத்தை எல்லாரும் பார்த்திருப்பீர்கள் வாழ்க்கையில்.

ஒரு புது வார்த்தையைச் சொல்கின்றேன், 'நினைத்தவுடன் அடிவயிறே ஆனந்தம் கொள்ளுகின்ற நம்பிக்கை'

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நினைத்தவுடனேயே அடிவயிறே கலங்குகின்ற துக்கம் ஏன் வருகிறதென்றால், ஏற்கெனவே வந்த துக்கங்களெல்லாம் நினைவில் பொங்கி, அலைமோதி, 'ஐயோ! அந்த மாதிரியே ஆயிடுமோ, இல்லை அதைவிட மோசமாக ஆகிவிடுமோ ? என்று கலங்குவதுதான் அடிவயிறு பொங்குகின்ற துக்கம்.

பெருமானையும், அவர்தம் அடியாரின் வாழ்வில் அவர் ஆடிய விளையாடல்களையும் நினைத்தவுடனேயே, 'என் வாழ்விலும் அந்தமாதிரி ஆகுமோ, அதைவிட வேறமாதிரி ஆகுமோ!' என்று மனதெல்லாம் ஆனந்தத்தால் பொங்குகிற மாதிரியான சத்தியங்கள்தான் சைவம்.

திருவண்ணாமலை

அடிவயிறு பொங்குகின்ற துக்கம் வரவேண்டும் என்றால், உங்கள் வாழ்க்கையையே நினைத்துக்கொண்டிருப்பது.

அதாவது, விளையாடல்களெல்லாம் குப்பையாக இருக்க வேண்டும். அடிவயிறு பொங்குகின்ற ஆனந்தம் வரவேண்டுமென்றால், உங்கள் வாழ்க்கையில் பெருமான் ஏற்கெனவே செய்த விளையாடல்களெல்லாம் நினைவிற்கு வரவேண்டும்.

எதை அதிகமாக உங்கள் உயிர்-நினைவில் சேமித்து வைத்துள்ளீர்களோ, அதுதான் திரும்பத் திரும்ப மேலே வரும். என்ன சாப்பிட்டீர்களோ, அது தான் ஏப்பமாக வரும். 24 மணிநேரமும், தொலைக்காட்சி தொடர் கதை களைப் பார்த்துக்கொண்டிருந்தீர்களானால் - - அதாவது, மருமக(ளுக்குத் தெரியாமலேயே, மருமகளிடமிருந்து மகனைப் பிரிப்பது எப்படி? சட்டத்தின் பிடியில் மாட்டாமல் மாமியாரைச் சாகடிப்பது எப்படி? தானாகவே மருமகளை ஓடச்செய்வது எப்படி? - என்று இருக்கின்ற எல்லாவிதமான கடுமையான குற்றச் செயல்களையும் எப்படிச் செய்வது என்று வருடக்கணக்காக எடுக்கப் படுகின்ற பாடம்தான் இந்த தொலைக்காட்சி தொடர்கள் - இவையே உங்கள் உயிர்-நினைவில் பகியும்.

அந்நிலையில், ஒரே ஒருநாள் புருஷன் 5 நிமிடம் தாமதமாக வந்தால்கூட மனசுக்குள் என்ன ஆகிறது, 50 காரணங்கள் வந்துவிட்டுப் போகிறது. கேவறொரு போய்விட்டார்களா? அவரே இதுக்குமேல வீட்டுக்கு வரவேண்டாம் என்று முடிவுசெய்து விட்டாரா? அலுவலகத்தில் வேலை போய்விட்டதா? துக்கத்தில் தற்கொலை செய்துகொண்டாரா? நான் வேறு இன்று காலை அவரிடம் கடு மையாகப் பேசியிருக்கக்கூடாது. நான் கொஞ்சம் ஒழுங்காகப் பேசி அனுப்பி இருந்திருக்க வேண்டும் என்று.

சமூகம் சார்ந்த குற்றம், கொலை போன்றவற்றை அலசி ஆராய்வதாகக் கூறிக்கொண்டு ஒலிபரப்பப்படும் 'க்ரைம்-ஷோ'வின் பின்னணி இசையைப் பார்த்தீர்களென்றால்.. அப்பா.. இடி மாதிரி அந்த இசை இடிக்கும்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், தொலைக்காட்சி தொடர்கள் நம்முடைய வாழ்க்கையின் பாகமாக மாறுவதற்கு முன்பாக, இந்த அளவிற்கு மனக்கொந்தளிப்பு, மன உளைச்சல், நினைத்தவுடன் அடிவயிறு கலங்குகின்ற துக்கம் நமக்கு இருந்திருக்கவில்லை. நினைத்துப் பார்ப்பதற்கு தவறான நினைவுகளை அளவுக்கதிகமாக உண்டுவிட்டு, கண்டுவிட்டு, எப்பொழுது ஒரு சிறு காரணம் வரும், துக்கப்படலாம், உயிரே நடுங்கும் அளவிற்கு வேதனைப் படலாம் என்று காத்துக்கொண்டிருக்கின்ற ஜீவன்களைப்போலே மாறிவிட்டோம்.

உங்கள் உடலிற்குள்ளும் மனத்திற்குள்ளும் எப்பொழுது துக்கத்தைப் பரப்பலாம் என்கின்ற உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் நீங்கள் வைத்திருந்தால் அந்த வாழ்க்கைதான் நாத்திக வாழ்க்கை. அப்பொழுது எந்த ஒரு சிறு காரணம் கிடைத்தாலும், அது உங்களை ஒரு துக்க சுனாமி மாதிரி தாக்குகிறது. அதனால்தான் வாழ்க்கை துக்கமாக இருக்கிறது.

ஆனால் அதுவே, கரிக்குருவிக்கு உபதேசித்ததும்,

வந்திக்காக, பிட்டுக்காக மண் சுமந்ததும், நரியெல்லாம் பரியாக்கி தானே குதிரைச் சேவகனாய் வந்ததும், பாலைக் கொடுத்து சம்பந்தனை ஆண்டதும், குலை கொடுத்து அப்பரை ஆண்டதும், குதிரைஓட்டும் கோலை எடுத்து மணிவாசகரை ஆண்டதும், ஒலை கொடுத்து சுந்தரனை ஆண்டதும், இதெல்லாம் நினைவில் இருந்தால், இதெல்லாம் உங்கள் உயிர்-நினைவில் இருந்தால், எந்த ஒரு சூழலிலும் இது வெடித்து, பக்தியை, ஆனந்தத்தை உங்களுக்குள் பொங்க வைக்கத் தயாராக இருக்கும். அதுதான் சைவத்தை வாழ் வது.

துக்கமும், துயரமும், துயரமும், கல்மஷமும், வலியும் கொண்ட தொலைக்காட்சி தொடர்களைத் தொடர்ந்து பார்த்தீர்களென்றால், வாழ்க்கையில் எது தவறாக போகுமோ? எப்படித் துக்கம் வருமோ? என்று துக்கமும், துயரத்தையும், வேதனையையும், வலியையும் எதிர்நோக்கியே காத்திருப்பீர்கள். கடும் பயத்தையும் நரம்புத்தளர்ச்சியையும் உருவாக்கக்கூடிய அண்ணீரகச் சுரப் பியைச் சுரக்கச்செய்ய உங்களுடைய உயிர்-நினைவு காத்துக்கொண்டிருக்கிறது.

ஒரு சிறுவிஷயமாக இருந்தால்கூட்போதும், உயிரே நடுக்குகின்ற மாதிரி உடலும்- மனமும் நடுநடுங்கி, தன் இருப்புநிலையை இழுந்து, இயல்பு நிலையை மறந்து, இயைபாக இருக்கும் நிலையும் ஒழிந்து, மீண்டும் மீண்டும் துக்கச் சுனாமி உங்களுக்குள் அடிப்பதற்கு, துக்கப்பேரலை உங்களுக்குள் அடிப்பதற்கு நீங்களே காரணமாகிறீர்கள். இதுதான் நாத்திகம். எந்த நினைவுகள் அதிகமாக உங்களுடைய உயிர்-நினைவில் இருக்கிறது என்பதுதான் நீங்கள் எந்த வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்பதை முடிவுசெய்கிறது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், செய்கின்ற செயல் சார்ந்து உங்கள் வாழ்க்கை அமைவதில்லை. நீங்கள் செய்கின்ற செயல், உங்கள் வாழ்க்கையின் மிகச் சிறிய பாகம், நீங்கள் இருக்கின்ற உணர்வுதான் உங்கள் வாழ்வின் பெரும்பாகம். பெரும்பாகத்தை தூய்மை செய்யுங்கள், பொருமான் பாகம் கிடைக்கும்.

பெரும்பாகத்தை தூய்மை செய்வதற்கு லீலாத்தியானம் மாதிரி ஒரு அருமையான வழி வேறு எதுவும் இல்லை. நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், இப்பொழுது நீங்கள் சினிமாவில் பார்க்கின்ற, தொலைக்காட்சியில் பார்க்கின்ற செய்திகளைவிட, நம்முடைய அளவு உண்மை உடையவை, அதுமட்டுமல்ல, அதிக அளவு உண்மையும், உண்மையான மனிதர்களாலும் உருவாக்கப்பட்டது. அதனால் இந்தப் புராணங்களும், நம்முடைய இதிகாசங்களும் பொய் என்று உங்களுக்குக் கற்றுக்கொடுத்த பொய்யர்கள்தான் பொய்யா்கள்.

'புராணம் பொய்' என்று அதைப் படிப்பதை நிறுத்தினார்கள், இப்பொழுது இவர்கள் புராணத்தைப் படிக்க வைக்கிறார்கள். இவர்கள் புராணத்தைப் படிக்க வைக்க, இதற்கு முன்பிருந்த புராணத்தை பொய் என்று உங்களை நம்ப வைத்தார்கள்.

எந்த ஒரு சூழல் உங்கள் கவனத்திற்கு முன்பு வந்தாலும், எந்த ஒரு நிகழ்வை நீங்கள் எதிர்கொண்டாலும், அதை எவ்வாறு நீங்கள் உள்வாங்கி உங்களுக்குள் பதிய வைத்துக்கொள்கிறீர்கள் (உணர்வுபடுத்திக்கொள்ளுதல்)என்பது மிக முக்கியம். ஒரு மனித வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சம், எவ்வாறு நீங்கள் வாழ்க்கையை உணர்வுபடுத்திக்கொள்கின்றீர்கள் என்பதுதான்.

சிலபேர் என்னிடம் கேட்பதுண்டு: ''தவறு செய்கிறவர்கள் எல்லாம் நல்லாவே இருக்கிறார்கள். நல்லது செய்கிறவர்கள் எல்லாம் கெட்டுப்போகிறார்களே சாமி!' என்று. உங்கள் உணர்வுப்படுத்துதல்தான் தவறே தவிர, இறைவனின் தர்மம் தவறுவதே இல்லை.

சரி எது ? நல்லது எது ? நிம்மதி எது ? துக்கம் எது ? என்று இந்தக் கருத்துக்களை நீங்கள் உணர்வுப்படுத்திக்கொள்வதில் தவறு இருக்கிறதே தவிர, இறைவனின் தர்மம் தவறுவதே இல்லை.

எதுகாலம் தொங்கிக்கொண்டிருக்கிறதோ, அதுவரை இறைவன் தா்மம் தவறுவதே இல்லை. எந்தச் சக்தியும் தாங்கலும் இல்லாது அந்தரத்தில் பூமி இருப்பதும், சுற்றுவதுமே இறைவனின் தர்மம்தான். அவன் தா்மம் தவறுவதே இல்லை.

உண்மையிலேயே சொல்கிறேன், என்னுடைய வாழ்க்கையில் நான் நினைத்து நினைத்து சந்தோஷப்படுகின்ற, ஆனந்தப்படுகின்ற ஒரு விஷயம், நல்லவேளை தொலைக்காட்சி மனித வாழ்க்கையின் அதீதமான பாகமாக மாறுவதற்கு முன்பாகவே பிறந்து வளர்ந்துவிட்டோம். அதுவும் அதெல்லாம் அண்ட முடியாக கிராமக்கில் பிறந்து வளர்ந்தோம்.

நல்லவேளை, இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது, மாலையானால் எனக்குத் தெரிந்ததெல்லாம், அண்ணாமலையான் ஆலயம்தான். காலை புலாந்தாலும், மாலை மங்கினாலும், வாழ்க்கை அவன் வாழும் சாலைதான். காலை புலா்ந்தாலும், மாலை மங்கினாலும் அவன் ஆலயமே கதி.

வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் இருக்கின்ற பலபேரை நான் சந்திக்கிறேன். அவர்களிடம் நான் கேட்கிறேன். ''ஏன் தொடர்ந்து வேதனை, துக்கம், அழித்தல், வஞ்சகத்தன்மை - போன்றவைதான் இயற்கையான வாழ்க்கைமுறை என்பதுபோன்ற கோற்றத்தைப் பதித்தும் வகையிலான நிகழ்ச்சிகளையே தரு கிறீர்கள் ? ''

சாதாரண மாட்டிக்கொள்ளாமல் திட்டம்போடுவதற்கு நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம், இதுவே இயற்கையான வாழ்க்கைமுறை என்ற ஒழுக்கமுறை நிறுவப்படுவது தான் மிகப்பெரிய கொடுமை. இதற்கு, 'சுதந்திரம்' என்று வேறு ஒரு தலைப்பு கொடுக்கிறார்கள்.

நல்லவேளை இதெல்லாம் நடப்பதற்கு முன் பிறந்து வளர்ந்துவிட்டோம்.

இதுபோன்ற கருத்துக்கள் தொடர்ந்து உள்சென்று கொண்டிருந்தால்.. உடலில் இரத்தத்திற்கு பதில் அமிலத்தை ஊற்றிச் சுத்த வைத்துக்கொண்டிருக்கிறோம்.

எந்த ஒரு சூழலிலும், உங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று நீங்கள் நம்பத்துவங்கிவிட்டால், உணர்வுப்படுத்திக்கொள்ளத் துவங்கிவிட்டால் நீங்களும் அநீதி இழைக்கத் தயாராகி விடுவீர்கள்.

இந்த நாகரீக உலகத்தில், எல்லாவிதமான ஊடகங்களும்... பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்ற பெயரில், உங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக உங்களை நம்பவைக்கின்றன. நீங்களும் அந்த நம்பிக்கை ரொம்ப சுகமாக இருப்பதால் அதைச் சாப்பிட ஆரம்பித்து விடுகிறீர்கள்.

மாமியாரைச் கொடுமைக்காரியாக சித்தரிக்கின்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து, 'இதில் வருகின்ற மருமகள் நான், என் மாமியார் இது' என்று எல்லா மருமகளும் நினைக்கிறார்கள். மருமகள் கொடுமைக்காரியாகச் சித்தரிகின்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து, 'இதில் வருகிற மருமகள் என் மருமகள், இந்த மாமியார் நான்' என்று எல்லா மாமியாரும் நினைக்கிறார்கள்.

நீங்கள் வஞ்சிக்கப்படுவதாக உங்களை நம்பவைப்பது சுலபம். அந்த நம்பிக்கை உங்களுக்குள் மற்றவர்களை வஞ்சிக்க மனதளவிலும், கருத்தளவிலும், உணர்வளவிலும் தயாராகிவிடுகின்றீர்கள். அந்தத் தயார் நிலையிலிருந்து நீங்கள் செய்கின்ற எல்லாச் செயலுமே, உங்கள் இருப்பு நிலைக்கு எதிரானதாக, உங்கள் இயல்பான சுபாவமான சிவபோத நிலையான நித்யானந்த நிலைக்கு எதிரானதாக இருக்கின்றது.

எப்பொழுது ஆரம்பிக்கின்றீர்களோ, அப்பொழுது எந்தவிதமான நல்லது-கெட்டது, ஞாயம் - தா்மம் எதையும் பார்க்காமல், எதை வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராகிவிடுவீர்கள். மிருகத்தன்மைக்குள் நுழைந்து விடுவீர்கள்.

அப்படியில்லாமல், இறைவனுடைய 64 லீலைகளையும் அறுபத்துமூவா கதைகளையும் நீங்கள் உள்வாங்குவீர்களானால், எப்பொழுதும், எந்தச்சூழலிலும் நீங்கள் காக்கப்படுகிறீர்கள், இரட்சிக்கப்படுகிறீர்கள், தாங்கப்படுகிறீர்கள்.

பிரபஞ்சத்தையே இயக்கும் பேரருட் கருணை சக்தி, எப்பொழுதும் உங்கள் உள்ளும் புறமும் பொங்கி, உங்களை நித்யானந்தத்தில் நிலைபெறச் செய்துகொண்டே இருக்கின்றது. இந்த உணர்வுப் பதிவு உங்களுக்குள் செல்வதற்கு இறைவனின் திருவிளையாடல்கள் மிகப்பெரிய வழிவகுக்கும்.

உங்களைத் தாங்கிக்கொண்டிருக்கும் திருக்கரம் எல்லாச் சக்தியுடையது மட்டுமல்ல, எல்லா வல்லமையும் உடையது மட்டுமல்ல, பெரும் கருணை உடையது. இந்த சத்தியம் உங்களுக்குள் மலரும்பொழுது எல்லோரையும் இனிமையோடும், ஆனந்தத்தோடும், அன்போடும், கருணையோடும், பொங்குகின்ற பொறுப்போடும், சிரத்தையோடும் அணுகத் துவங்கிவிடுவீர்கள்.

'தொலைக்காட்சித் தொடர்களும் - திருவிளையாடலும்' - அதுதான் இன்றைக்கு நான் சொல்ல விரும்புகின்ற கருத்து.

உங்களையும் வலிக்க வைத்துக்கொண்டு, உங்களைச் சுற்றி உலகமே உங்களை ஏமாற்றுவதற்காகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது நம்ப வைத்து, நீங்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறீர்கள் என்ற முடிவுக்கு உங்களை வரவழைத்து, தொடர்ந்து நீங்கள் வஞ்சிக்கப்படுவதனால் யாரை வேண்டுமானாலும் நீங்கள் என்ன செய்தாலும் அது தவறில்லை என்று உங்களை

நம்பவைத்து, வஞ்சக வாழ்க்கைக்குத் தயார்படுத்தி உங்களை வாழ்க்கைக்குள் அனுப்புவதற்கு பதிலாக, ஒரு கொடூரமான, குரூரமான, அழிக்கும் சக்தியாக, இராட்சஸ்த் தன்மையை உங்களுக்குள் உருவாக்கி, உங்களை வாழ்க்கைக்குள் அனுப்புகின்ற ஒரு எதிர்மறை சக்தி தொலைக்காட்சித் தொடர்கள்.

நீங்கள் வஞ்சிக்கப்படுகிறீர்கள், நீங்கள் யாரை எப்படி வஞ்சித்தாலும் அதில் தவறில்லை என்று நம்பினால் நீங்கள்தான் இராட்சஸர்கள்.

நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள், எப்போதும் போராட் பெருங்கரத்தால் தாங்கிப் பிடிக்கப்படுகிறீர்கள் என மிகத்தெளிவாக உங்கள் உணர்வில் உணர வைக்கப்பட்டு, அதே பேரருள், ஆனந்தம், கருணை இவை எல்லாவற்றையும் உங்கள் வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளிலும் நீங்கள் வாழ்ந்துகொண்டிருந்தால், சிந்தனையும் செய்துகொண்டிருந்தால், வெளிப்படுத்திக்கொண்டிருந்தால் நீங்கள்தான் சிவகணங்கள்.

இந்த இரண்டே இரண்டு விதத்தில்தான் வாழ்க்கை நடக்க முடியும். நீங்கள் வஞ்சிக்கப்படுகிறீர்கள் என்று நம்பி நாசமாகப்போவது. நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள் என்று நம்பி ஆனந்தமாக வாழ்வது.

எப்பொழுதும் நீங்கள் எம்பெருமானால் காத்து, இரட்சித்து, அவருக்கு நீங்கள் உண்மையாக இல்லாதபொழுதுகூட அவர் உங்களுக்கு உண்மையாக இருக்கின்றார் என்கின்ற சத்தியத்தை உங்களுக்குள் புகட்டுகின்ற, அந்த சாத்தியத்தை உங்களுக்குச் சொல்வதற்காகத்தான் சுந்தரமூர்த்திபெருமான் அவதாரம் செய்து, இந்த லீலை எல்லாம் நடத்திக்காட்டினார். நல்லவேளை பரவை நாச்சியும் - சங்கிலி நாச்சியும் தொலைக்காட்சித் தொடர்களையெல்லாம் பார்க்கவில்லை.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்,

தொலைக்காட்சித் தொடரில் காட்டுகிற மாதிரி துக்கங்களும், கொடுமைகளும் உங்கள் வாழ்க்கையில் எத்துணை முறை நடந்திருக்கிறது என்று நீங்கள் நம்புகின்றீர்களோ.. சத்தியமாக சொல்கிறேன் அதைவிட அதிக முறை திருவிளையாடல்களிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும் பெருமான நடத்திக்காட்டியதாக சொல்லப்பட்டிருக்கின்ற 'காப்பாற்றுதல், தாங்கிப்பிடித்தல், ஏற்றுக்கொள்ளுதல், நிகழ்ந்திருக்கிறது.

தொலைக்காட்சித் தொடர்களில் காட்டுகிற மாதிரி 'உடைந்துபோவது' 100 முறை நடந்திருந்தால், திருவிளையாடற்புராணங்களில் சொல்லப்படுகிற மாதிரி 'ஒட்ட வைத்து, தூக்கி நிறுத்தப்படுவது' 101 முறையாவது நடந்திருக்கிறது. அதனால்தான் இன்னமும் நீங்கள் நின்றுகொண்டிருக்கிறீர்கள். 100 முறை விழுந்தால் 101 முறை எழுந்து நின்றிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதனால்தான் இன்னும் நின்றுகொண்டிருக்கிறீர்கள்.

''எந்துனை? ? என் அப்பன் துணை இருப்பான்' என்கின்ற தெளிவுதான் சைவம் !

இந்த நவ நாகரீக பகுத்து எறியும் பன்றிகள், 'எத்துனை என் அப்பன் துணை இருப்பான்'? ? என்கின்ற கருத்தை, ஏதோ ஏமாற்றுக் கருத்துபோலவும், தன்னைத்தானே மயக்கத்தில் ஆழ்த்திக்கொண்ட வெகுளி மனிதர்கள்தான் இதுபோன்று நினைத்துக்கொண்டு வாழ்வார்கள் என்றும், இந்தக் கருத்தையே ஒரு சட்டவிரோத கருத்துபோன்று சமூகத்தில் மாற்றிவிட்டார்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், 'எந்த நேரத்திலும், எந்தப் பிரச்சினை வேண்டுமானாலும் வரலாம், நீ

ஒன்றுமில்லாமல் போய் விடுவாய்' என்கின்ற பயத்தை உங்களுக்குள் விதைப்பவர்கள் இராக்ஷஸர்கள். யார் அந்த பயத்தை உங்களுக்குள் விகைக்கிறார்கள் என்று உங்கள் எல்லோருக்கும் கெரியும் - நாக்கிதர்கள்.

'எப்பொழுதும் எப்பெருமான் இருக்கின்றான், எத்துணை வெந்தாலும் எம் துணையாய் எப்பெருமான் இருக்கின்றான்' என்கின்ற சத்தியத்தை உங்களுக்குள் சாத்தியமாக்குபவர்கள் தெய்வங்கள்.

உண்மையில் நீங்கள் மாயையில் இல்லை. அவர்கள்தான் மாயையில் இருக்கிறார்கள். நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள்.. மிகவும் தெளிவாகத்தான் இருக்கிறீர்கள்.

ஒரு குழு சொல்கிறது, ''என்ன பிரச்சினை வேண்டுமானாலும் வரலாம், என்னவேண்டுமானாலும் நடக்கலாம், யாரையும் நம்பாதே, என்னை மட்டும் நம்பு, நான்தான் ஏதாவது பிரச்சினை வந்தால் உன்னைக் காப்பாற்றுவேன்' என்று !

இன்னொரு குழு சொல்கிறது, ''ஒரு பிரச்சினையும் வராது அப்பனே, என் அப்பன் இருக்க எதுவும் வராது, நிம்மதியாக ஆனந்தமாக அவனைச் சிந்தித்து சிவமயமாய் வாழ்!' என்று!

'நிம்மதியாக இரு' என்று சொல்கின்ற குழுவுக்கு, அந்த இன்னொரு கூட்டத்தினரைப் பார்த்தால் கோபம் வருவதில்லை. ஆனால் அந்த இன்னொரு கூட்டத்தினருக்கு, 'நிம்மதியாக இரு' என்று சொல்கின்ற இந்தக் குழுவைப் பார்த்தாலே அடிவயிறு எரிகிறது. இதைப் பார்த்தே தெரியவில்லையா?! யார் மாயையில் இருக்கிறார்கள், யார் ஞானத்தில் இருக்கிறார்கள் என்று.

இந்தப் பயமுறுத்துகின்ற குழுவை ஞானிகள் அடித்ததாக கதை இருக்கு. ஆனால் ஞானிகள் எப்போதாவது இவர்களை அடித்ததாகக் கதை இருப்பதாகப் பார்த்திருக்கிறீர்களா? ஏனென்றால் நமக்குத் தேவையில்லை. அதிகபட்சமாக நம்மைக் காத்துக்கொள்வோம். ஞானிகளை அடித்த காமம் அவர்களுக்கே திரும்பிச் செல்கிறது. அவ்வளவுதான்.

முடிந்தவரை, பெருமான் ஆற்றிய லீலைகள், அறுபத்து மூவா வரலாறுகளையும், 64 திருவிளையாடல்களையும் படித்து, சிந்தித்து, உணர்விற்குள்ளே பார்த்து, இரசித்து, அவைகளை உங்கள் மெய்-நினைவாகவும், உயிர்-நினைவாகவும்

மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் வாழ்க்கையே வசந்தமாய், ஆனந்தமாய், சிவபோதத்தில் இருப்பதை தானாய் உணர்வீர்கள்.

பிட்டிற்கு மண் சுமந்ததும்..

கால் தேய வெறும்காலோடு நடுநிசியில் சுந்தரருக்காக தூதுபோனதும்

கரிக்குருவிக்கு உபதேசித்ததும்

இவையெல்லாம் சத்தியமாக கற்பனை இல்லை. கற்பனை கடந்த சத்தியம்.

இதெல்லாம் அப்பொழுது மட்டும்தான் நடந்தது என்று நினைக்காதீர்கள். இன்னமும் அவன் செய்துகொண்டே இருக்கின்றான். உங்கள் வாழ்க்கையில் எல்லாம்கூட நிகழ்த்திக்கொண்டே இருக்கிறான். ஆனால் ஊடகங்களினால் பதியப்படும் தகவல்களே உங்கள் தசைப்பதிவு, உயிர்ப்பதிவாக இருப்பதனால், கெட்டது நடக்கும்பொழுதுதான் ஒப்பிட்டுப்பார்த்து, ஆய்வுசெய்வதற் கான மூலப்பொருள் உங்களுக்கு இருக்கிறது. நல்லது நடக்கும்பொழுது ஒப்பிட்டுப்பார்த்து, ஆய்வுசெய்வதற்கான மூலப்பொருள் உங்களுக்கு இல்லாம் போய்விட்டது.

எதிர்பார்க்காமல் திடீரென்று ஒரு உதவி வரும்பொழுது, பெருமான்தான் அனுப்பியிருக்கிறார் ஏற்கெனவே பெருமான் இதுபோன்ற லீலைகளை நடத்தியது எல்லாம் உங்கள் தசைப்பதிவிலோ, உயிர்ப்பதிவிலோ இல்லை.

காரணம் என்னவென்றால், அந்த மாதிரி நடந்ததெல்லாம் எதேச்சையாக நடந்ததென்று நினைக்கின்றோம். பிரச்சினையை மட்டும் அவர் திட்டமிட்டு உங்கள்மீது ஏவி விட்டார் என்று நினைக்கின்றோம். என்னங்க ஐயா இது ? தீர்வு நடந்தால் ஏதேர்ச்சையாக நடந்தது, பிரச்சினை வந்தால், சிவன், அவர் வேலையெல்லாம் விட்டுவிட்டு.. னும் பார்வதியுடன் அமர்ந்துகொண்டு, நந்தியையும் கூட அழைத்துக்கொண்டு, விளக்குப் பிடிக்கச் சொல்லி.. எல்லாம் ப்ளான் பண்ணி.. ''இவன் இருக்கான் பாரு.. இந்த ஊரில், இவனை நாம் சும்மா விடக்கூடாது. இவனை கட்டம் கட்டு' என்று நமக்காகவே நான்கு நாள் உட்கார்ந்து சிந்தித்து, திட்டபோட்டு, அந்தக் கதாப்பாத்திரங்களையெல்லாம் நம்மீது ஏவி விட்டதுபோல நினைக்கின்றோம். ஆனால் தீர்வு வரும்பொழுது, "எதேர்ச்சையாக நடந்துவிட்டதப்பா, நான் படு புத்திசாலிப்பா, அதனால் தப்பித்துவிட்டேன்பா!' என்கிறோம்.

கிணறும் லிங்கமும் நடந்துகொண்டுதான் இருக்கிறதப்பனே!!!

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை பொய் இல்லை ! நீங்கள் வஞ்சிக்கப்படுகிறீர்கள், ஏமாற்றப்படுகிறீர்கள் என்று உங்களைத் தொடர்ந்து நம்பவைப்பவர்கள் உங்களைப் பலவீனர்களாக மாற்றுகிறார்கள்.

'இறைவன் எப்போதும் உங்களைத் தாங்குகின்றான், எப்போதும் உங்களைக் காக்கின்றான், எப்போதும் உங்களை மேம்படுத்துகின்றான், எப்பொழுதும் உங்களைத் தாங்கி நிற்கின்றான்' என்று நீங்கள் நம்பும்பொழுது பலசாலியாக, தெய்வீகத்தன்மை உடையவா்களாக மாறுகின்றீர்கள். எந்த நம்பிக்கை வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்.

சுந்தரமூர்த்தி நாயனார்.. தன்னுடைய உணர்ச்சி - உணர்வு - உயிர் மூன்றிலும், பெருமான் என்னவன் நான் தம்பிரான் தோழன்.. என்கின்ற உணாவை, தன் உணர்வுப்படுத்தி அனுபவமாக வைத்திருந்தார். அதனால் ஒரு பெண் என்ன? இரு பெண் என்ன? எத்துணை பெண், பொன், மண் கேட்டாலும் பெருமான் தூது சென்றிருப்பான். ஏனென்றால் அவர் உணர்வு எதுவோ அது மிகுந்த உத்தம நிலையில் இருந்தது. உணர்வை உத்தமமாக்கும் உயர் வாழ்க்கைமுறையே சைவம்.

பெருமான் தூது சென்றது மட்டுமல்ல, அடுத்தது என்ன செய்தார் என்றும் சொல்கிறேன், கேளுங்கள்..

இதுதான் உச்சக்காட்சி.

காமிக ஆகமம் - வாழ்வை வழிநடத்தும் விஞ்ஞானம்

ஆழ்ந்து கேளுங்கள், சுந்தரர் கேட்டதையெல்லாம் கொடுத்தது மட்டுமல்லாது, கேட்டதையெல்லாம் செய்தது மட்டுமல்லாது, அதையும் தாண்டி பெருமான், சுந்தரருடைய பெயர்கூட கெட்டுவிடக்கூடாது என்று எந்த அளவிற்கு சிரத்தையோடு இருந்தார் என்று பாருங்கள்.

இரவிலே பெருமானை, கால்தேய திருவடிகூட இல்லாமல் திருவாரூரின் தெருக்களிலே தூதுக்காக நடக்கச் செய்து, தன்னுடைய காம சுகத்திற்காக பெருமானை ஏவல் கொண்ட செய்தி நாடு முழுவதும் தீ எனப் பரவியது.

சோழ நாட்டிலே, திருப்பெருமங்கலத்தில் ஏயர்கோன் கலிக்காமர் என்று ஒரு பெரிய சிவனடியார் இருந்தார். இதைக் கேட்டதும் அவருக்கு நெஞ்சு பதைத்தது! ஐயோ!! ஒரு சிவனடியார், தொண்டன், பக்தன் பெருமானை ஏவல் கொல்வது சரியா? ஏயா்கோன் கலிக்காமருக்கு மட்டுமல்ல, அதைக் கேட்ட எல்லாச் சிவனடியாருக்குமே நெஞ்சு பதறும். தன்னுடைய காம சுகத்திற்காக, தன்னுடைய தேவைக்காகப் பெருமானைத் தூது செய்வது, அதுவும் இரண்டுமுறை பெருமானை ஏவல்கொள்வதா? ஏயர்கோன் கலிக்காமரால் இதைக் காங்கிக்கொள்ள முடியவில்லை.