Chnidi NdachtiChapter 14 of 20
Chapter 14

பாதுகை அணியாமல், கால் தேய தூது

1 sections

பாதுகை அணியாமல், கால் தேய தூது

இன்னொரு விஷயம், அக்காலத்தில் தூது போகிறவர்கள் பாதுகை அணிந்து செல்லக்கூடாது, இது பாரம்பரியம். பாதுகை அணிந்துசென்றால் பரவை நாச்சி அடையாளம் கண்டுகொள்வாள் என்பதற்காக, பாதுகையை விட்டுவிட்டு பெருமான் செல்கின்றார். கால் தேய திருவாரூரிலே, சுந்தரன் தங்கியிருந்த மாளிகைக்கும் பரவை நாச்சியின் மாளிக்கைக்கும் தூதாகச் செல்லுகின்றார்.

பெருமான் சிவனடியார் திருக்கோலத்தில் கிளம்பி போகிறார். பரவை நாச்சியாரின் வீட்டுக் கதவைத்தட்டி, நடு ராத்திரியில் சுந்தரன் சொல்லி அனுப்பிய எல்லாவற்றையும் போய் பரவை நாச்சியாரிடம் சொல்கிறார். பரவை நாச்சியார் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ''வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா அடியாரே? நீங்கள் சிவனடியாராக இருந்ததனால் உங்கள் வார்த்தைகளை இவ்வளவு நேரம் கேட்டேன், நீங்கள் சென்று வரலாம்," என்று திருப்பி அனுப்பிவிடுகிறார்.

சுந்தரமூர்த்தி நாயனாரோ வாசலில் அமர்ந்துகொண்டு, எப்பொழுது பெருமான் வரப்போகிறார் என்று நல்ல செய்திக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். தூரத்தில் இருந்து பார்த்தால் பெருமான் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு வருகின்றார். முகத்திலே மலர்ச்சி இல்லை.

''சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறாள். நீ சொன்னதையெல்லாம் சொன்னேன், அவள் என்னென்னேவோ எதிர்கேள்வி கேட்கிறாள்."

அப்பொழுதான் சுந்தரனுக்கு உரைத்தது! பெருமானை, 'இதைச் செய்து முடித்துவிட்டு வா' என்று சொல்வதை விட்டுவிட்டு, 'நான் சொன்னதைச் சென் று சொல்லிவிட்டு வா' என்றா சொல்வது ?

ஆஹா!! சுந்தரனுக்கு சுளீர் என்று உரைத்தது! உரைத்த உடனே, "பெருமானே! பெருமானே வந்திருக்கிறீர்கள் என்று சொன்னீர்களா?''

''அதைச் சொல்லச்சொல்லி நீ என்னிடம் சொல்லவில்லை இல்லையா, அதனால் சொல்லவில்லை. ''

''ஆவார!!

''என்ன ?''

''இன்னொருமுறை சென்று வந்துவிடுங்கள்.''

"சரி -ம்" வேஷம் போட்டாச்சு செய்துதானே ஆக வேண்டும்.

பக்தனுக்காய் பரம்பொருள் இன்னொருதரம் கிளம்புகிறார். இந்தமுறை கிளம்பும்பொழுது ''என்னென்ன ் சொல்ல வேண்டுமென்று ஒழுங்காகச் சொல்லிவிடு. எல்லாவற்றையும் சொல்லிவிட்டு வருகிறேன். ''

இவர் சொல்கிறார், ''நீங்கள் வேறு எதுவும் சொல்ல வேண்டாம், நான்தான் பெருமான்னு அவளுக்கு காட்டுங்கள், அதுக்கு மேல நீங்க என்ன சொல்ல வேண்டுமோ அது உங்கள் விருப்பம், ஆனா வேலையை முடித்துவிட்டு வாருங்கள் !' '

பக்தன் சரணாகதிக்கு வந்துவிட்டான் என்கிற ஆனந்ததத்தைத் தன் புன்னகையில் காட்டிவிடாமல் மறைத்துக்கொண்டு, பெருமான் பாதுகையின்றி திருவடி தோய, மீண்டும் திருவாரூர் தெருக்களில் இறங்கி நடக்கத் துவங்கினான்.

வானவரெல்லாம் பெருமான் கருணையை நினைந்து ஒருபுறம் ஆனந்தத்தால் கண்ணீர் சொறிய, வானவப் பெண்டிரெல்லாம் பெருமான் திருப்பாதம், திருவடி இன்றி திருவாரூர் தெருக்களில் தேய்வதைப் பார்த்து துக்கத்தால் கண்ணீர் சொறிய, இரண்டு கண்ணீரும் மழையாய்ப் பொழிந்து திருவாரூரை நனைக்க, பெருமான் பெய்யும் மழைகனில் பரவை நாச்சியாரின் மாளிகை நோக்கிச் செல்கின்றார்.

தானேதான் 'தான் யார்' என்று காட்ட முடியும்

மாளிகைக்குச் சென்று கதவைத் தட்டுகிறார்... கதவைத் திறந்தவுடன், சுந்தரனுக்கு அளித்த வாக்கின்படி, நான்கு திருக்காங்களோடு, தானே பரம்பொருள் என்கின்ற ஆதிசிவ ஸ்வரூபத்தை, சதாசிவ வடிவத்தைக் காட்டி அருளுகின்றார்.

பெருமான் திருவடியில் வீழ்ந்தாள் பரவை நாச்சி, ''ஐயனே! தாங்களே வீடுதேடி வர என்ன புண்ணியும் செய்தேன்! ? வந்த காரியும் யாதோ! வாருங்கள் என்று, ஆசமனம் ஆசனம் முதலாகிய 16 உபச்சாரங்களையும் செய்து பெருமானைத் துதிக்க, ''அம்மா நம் தொண்டன், வன்தொண்டன், நம்தோழன் சுந்தரனுக்காய் தூதாய் வந்திருக்கின்றோம், நீ அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும்,'' என்று கேட்க, "ஐயனே வந்தது தாங்கள்தான் என்று சென்றமுறை வந்தபோதே சொல்லியிருக்கக்கூடாதா? இருமுறை உங்களை நடக்க வைத்தேன் என்று திருமுறை ஓதும் பக்தர்களுக்கெல்லாம் தெரிந்தால், அவர்கள் என்னை என்ன நினைப்பார்கள் ? கருணையே இல்லாத கொடுமைக்காரி என்று நினைக்கமாட்டார்களா? அவர்கள் மனமெல்லாம் நோகுமே! ஐயனே! இது தகுமா? இது முறையா? என்று இறைவனின் பாதங்களில் பூக்களாய்ச் சமாப்பித்து, பாத்யமாக தன்னுடைய கண்களில் பொங்கும் ஆனந்தக் கண்ணீரையே அர்ப்பித்து, ஐயனே! தங்களுடைய ஆணைக்கு மற்றொரு எண்ணம் உண்டோ! சுந்தரனை ஏற்றுக்கொள்கிறேன்,' என்று உறுதிமொழி அளிக்கிறார்.

ஆனந்தத்தோடு பெருமான்மீண்டும் தூது செல்லும் தூதுவனின்தாமப்படி, திருவடி இல்லாது திருவாரூர் தெருக்களில் கால் தேய நடந்து சுந்தரன் தங்கியிருக்கும் மாளிகையை வந்து சேர்ந்து, ''சுந்தரா, 'உன்னை ஏற்றுக்கொள்கின்றேன்' என்று பரவை நாச்சி வார்த்தை கொடுத்துவிட்டாள், சென்று அவளோடு வாழ்!'' என்று ஆசீர்வதிக்கிறார்.

மறுநாள் சுந்தரமூர்த்தி நாயனார் பெருமானைத் தொழுது, தியாகராஜனைக் கண்குளிரக் கண்டு தரிசித்து, வன்மீகநாதரை, புற்றிடம்கொண்டாரை தரிசி த்து, பூஜித்து பரவை நாச்சியாரின் இல்லைத்தை அடைந்து, பரவை நாச்சியார் மனம் உவந்து அவரை ஏற்றுக்கொள்ள, இருவரும் இனிதே வாழ்க்கையைத் துவங்கினார்கள்.

பெருமான் கருணை இதோடு முடிந்துவிடவில்லை! பெருமான் கருணையின் ஆழத்தை, சுந்தரமூர்த்தி நாயனாரின் பக்தியின் சக்தியை மேலும் காண்போம்.

விளையாடல்கள் செய்து சங்கிலி நாச்சியார் திருமணத்தை நடத்தியது உச்சம் அல்ல !

கால்தேய திருவாரூர் வீதிகளில் முன்னும் பின்னுமாய் தூது சென்று இருவரையும் சேர்த்து வைத்தது இதன் உச்சம் அல்ல!

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் சிவனடியார்களுள் ஒருவர், சுந்தரமூர்த்தி நாயனார் மீது கடும்கோபம் கொண்டார். நல்ல சிவ பக்தனாக இருந்தால் யாராக இருந்தாலும் இதைக் கேட்டவுடன் கடும்கோபம் கொள்வான். இரவிலே திருவடி இல்லாமல் பெருமானைத் தெருவின் தரைமீது முன்னும் பின்னுமாக தன் பெண்ணாசைக்காக நடக்க வைப்பவன் சிவபக்தனா? யாருக்குத்தான் கோபம் வராது. யாருக்குத்தான் கொதிப்பு வராது? கொதிப்படைந்த பக்தனையும் சுந்தரனையும் எப்படி சேர்த்து வைக்கிறார் என்பதுதான் உச்சம்!

ஆனால் அதற்குமுன், இதைக் கேட்டவுடன், உங்களுள் விதர்க்கத்தோடு சிரத்தையோடு குதர்க்கமில்லா எழும் ஒரு சந்தேகம் என்னவென்றால், நீங்கள் சுந்தரா் கதையை, அவா் பக்தியின் சக்தியை விவரித்த முறையைக்கண்டு ஆழ்ந்து சிந்தித்தால், பெருமான் தடுத்தாட்கொண்ட பின்பும், இரண்டு மனைவியரை மணந்துகொண்டு, ஒருவரின் உத்தரவு பெறாமலேயே இரண்டாம் திருமணம் செய்துகொண்டு, இது சமூக ஒழுக்கத்திற்கு எதிரானதல்லவா? இது சரியா ? என்பதாகத்தான் இருக்கும்.

தம்பிரான் தோழன் சுந்தரமாத்தி பெருமான் திருமேனி தாங்கியதே, உடல் தாங்கியதே, இந்த இரண்டு பெண்களின் மீதும் ஏற்பட்ட காமம் தணிந்து வாழ்ந்து முடித்துசிவனின் அனுக்கிஹத்தோடு மீண்டும் தன் சாமீப்ய முக்தி நிலையான பெருமானின் தொண்டு செய்யும் நிலைக்கு சென்றிட வேண்டும் என்பதற்காகத்தான். பிறவியின் நோக்கமே இந்த இச்சையை வாழ்ந்து தீர்ந்து முடிக்க வேண்டும் என்பது. அதனால்கான், இரண்டு பெண்களின் மீதும் காதல் வயப்பட்டார். இறைவனைக் கண்டபின்னும் காதல் வயப்பட்டார். தர்க்க ரீதியாக வந்த கேள்வி இது, அதனால் அதற்கு இதுதான் விடை.