Chnidi NdachtiChapter 13 of 20
Chapter 13

இருபக்கமும் சாரும் பெருமான்

1 sections

இருபக்கமும் சாரும் பெருமான்

பெருமான், எல்லாத்தையும் கேட்டுத்தானே ஆகனும் - பொறுத்துட்டுதானே ஆக வேண்டும். உடனே சுந்தரமூர்த்தியிடம், சென்று ''அப்பா! அவளை விட்டுப்பிரியாமல் இங்கேயே இருக்க வேண்டும் என்று அவள் சொல்கிறாள்,' என்கிறார். இவர் உடனே, ''இந்த நிபந்தனைகளெல்லாம் இல்லாமல், திருமணம் செய்து வைக்க ஏதாவது திட்டம் செய்யுங்களேன்,'' என்கிறார். நல்லவேளை பெருமானுடைய முடியெல்லாம் சடை முடியாக இருந்ததனால பிச்சிகிட்டு கீழ வரல. சாதாரண முடியாக இருந்திருந்தால் பிச்சிகிட்டு எல்லாம் உதிர்ந்து போயிருக்கும். ''சரி, யோசித்து சொல்கிறேனப்பா!

அங்கே திரும்பச் செல்கிறார். ''ஏம்மா அவன் நிறைய சிவஸ்தலங்களுக்கெல்லாம் சென்று வருகின்ற பக்தன், இந்த மாதிரி ஒரே இடத்தில் இருக்கச் சொல்லி விதி போட்டால், அவனுக்கு அது கட்டுப்படுத்த முடியமா? அது சாத்தியமா ? கொஞ்சம் யோசித்துப் பார், '' என்று சொல்ல, சங்கிலி நாச்சியார் தெளிவாகச் திருவெற்றியூரிலேயே இருப்பேன் என்று உறுதிமொழி கொடுத்தால், வாருங்கள், அந்த உறுதிமொழியோடு வாருங்கள். '

உடனே பெருமான் சுந்தரரிடம் வருகிறார், ''இல்லைப்பா, அவள் மிக உறுதியாக இருக்கிறாள், மிக தெளிவாக இருக்கிறாள், அவளோடுதான் வாழ்ந்தாகவேண்டும், இந்த ஊர் எல்லையை விட்டுத் தாண்டக்கூடாதென்று சொல்கிறாள், அதுவும் உறுதிமொழி வேறு செய்துகொடுக்க வேண்டும் என்று சொல்கிறாள்,'' என்கிறார்.

சுந்தரமூர்த்த்தி நாயனார், இவர்தான் பெருமானுக்கே விளையாட்டுக் காட்டியவராயிற்றே... உடனே சொல்கிறார், ''அவ்வளவுதானே. சரி, நாளை அவளை அழைத்து வந்து, உங்களுடைய சன்னிதியில், 'அவளை விட்டுப்பிரிய மாட்டேன், திருவெற்றியூரிலேயே இருப்பேன் என்று சத்தியம் செய்து கொடுக்கின்றேன், நீங்கள் ஒரு அரைமணி நேரம், அருகிலிருக்கும் மகிழ மரத்தடியில் போய் அமர்ந்துகொள்ளுங்கள், நான் சத்தியம் செய்து கொடுத்தவுடன் திரும்ப வந்துவிடுங்கள், அப்பொழுது சத்தியத்திற்குப் பலமில்லாமல் போய்விடும்,''என்று சொல்ல, பெருமான் பிரச்சினைக்குத் தீர்வு பிறந்ததென, அப்பா'ன்னு பெருமச்சு விட்டார். பாருங்கள், பெருமானுக்கே விளையாட்டு!

எப்படியோ பிரச்சினை தீர்ந்தால் சரிதான் என்று சங்கிலி நாச்சியாரிடம் வருகிறார், சங்கிலி நாச்சியாரைப் பார்த்தவுடனேயே ''இந்தப் பேதை, ஏழைப்பெண், என்ன சிரத்தையோடு எனக்கு பக்தி செய்கின்றாள், இவளுக்கு நான் பொய்ப்பது சரியா?'' என மனம் கழிந்து, மனம் குழைந்து, ''மகளே ... சுந்தரன், வன்தொண்டன், சூட்சுமக்காரன், திருவெற்றியூர் எல்லை தாண்டாமல் உன்கூடவே இருக்கிறேன் என்று சத்தியம் செய்து கொடுக்கிறேன் என்று ஒத்துக்கொண்டான், ஆனால் இதில் ஒரு சின்ன விளையாட்டு செய்கிறான். நாளை அவன் கோயிலில் சத்தியம்செய்து கொடுக்கும்பொழுது, என்னை, கருவறையில் இல்லாமல் மகிழ மரம் பக்கம் ஒதுங்கிக்கொள்ள சொல்லியிருக்கிறான். அவன் சொல்லும்பொழுது, சரி... சரி' என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன், உன் முகத்தைப் பார்த்தவுடன் எனக்குத் தாளவில்லை, ஆனால் நீ சத்தியத்தை என் சன்னிதியில் கேட்காமல், மகிழ மரத்தின் முன்னால் கேள், இதை நான் சொன்னேன் என்று அவனிடம் சொல்லாதே, ' என்று சொல்லிவிடுகின்றார்.

இனிமை...இனிமை...இனிமை...

ஐயகோ!!! இதைவிட ஒரு இனிமை வேண்டுமா? சைவம் வாழ்ந்திட!! பெருமானே!! இந்த ஒருகதை போதுமையா.. ஒரு ஜென்மம் மட்டுமல்ல... நூறு ஜென்மம் எடுத்து சைவம் வாழலாம், சிவனைத் துதிக்கலாம், சிவனோடு வாழலாம், அவனை வாசிக்கவும், நேசிக்கவும், சுவாசிக்கவும், உனக்கே தாசியாய் இருந்து தாசிக்கவும் இன்னொரு கதை வேண்டுமா ஐயனே! இந்த ஒரு கதை போதுமைய்யா! ஆசுதோஷானந்தன், ஆசுதோஷன்' என்று சொன்னால் எளிமையாக மனம் இளகிவிடுபவன், இறங்கிவிடுபவன் என்று பொருள்.

மறுநாள் பொழுதும் விடிந்தது. சுந்தரமூர்த்திப் பெருமான் வெற்றி நடையோடு, வெற்றிப் புன்னகையோடு, தான் எல்லாவற்றையும் சரியாகத் திட்டமிட்டு, முதல்நாள் இரவே முடித்துவிட்டோம் என்கின்ற தெளிவோடு வருகிறார். வந்து கருவறை முன்னின்று சங்கிலி நாச்சியார் கரம் பற்றி, அம்மா, சத்தியம் செய்கின்றேன் வா!' என, உடனே சங்கிலி நாச்சியார், ஐயனே! பெருமான் முன்னிலையில் சத்தியம் செய்துவிட்டு, என்றாவது நீங்கள் வழுவிவிட்டால், அது உங்களுக்குப் பெரும் துக்கமாகுமல்லவா? அது எனக்கு மனம் தாளாது. ஆதலால் மகிழ மரத்தின் முன்பாக சத்தியம் செய்தால்போதுமானது ஐயனே! பெருமான் முன்பு எதற்காக இவ்வளவு பெரிய வேதனை? இந்த வினை வேண்டுமா ? மகிழ மரம் முன்பாகவே செய்துகொள்ளலாம் ஐயனே!

பெருமான் சிரிக்கிறார்... மகிழ மரம் சிரிக்கிறது ... சங்கிலி நாச்சியார் சிரிக்கிறார்... சுந்தரமூர்த்தி நடுங்குகின்றார் ...

சிரிப்புக்கு தமிழில் பல வார்த்தை உண்டு! பெருமான் முகத்திலே மலர்ந்தது - புன்னகை. மகிழ மரத்தின் முகத்தில் மலர்ந்தது எள்ளி நகையாடுதல், ஏமாந்தாயா ?' சங்கிலி நாச்சியார் முகத்தில் மலர்ந்தது மாயப்புன்னதை, மாட்டிக்கொண்டாயா ?'

பெருமான் புன்னகைக்கிறார், மகிழ மாம் எள்ளி நகையாடுகிறது. சங்கிலி நாச்சியார் மாயப் புன்னகையால் முகம் மலர்கின்றார், சுந்தரமூர்த்தி மூன்றையும் கண்டு நடுங்குகின்றார்.

பெருமானைச் சற்றே சந்தேகத்தோடு பார்க்கின்றார். சொல்லிட்டியா'? – நமக்கொன்றும் தெரியாதப்பா, நான் சிவனே நீ சொன்னதைத்தானே செய்தேன்! மகிழ மரத்தில் அமைதியாக அமர்ந்திருக்கின்றார். எனக்கென்ன தெரியும் ? நீ வேற யார்கிட்யாவது பேசனியான்னு கேட்டுப்பாரு, இராத்திரி ஏதாவது சத்தமா இதையெல்லம் பெனாத்தினியாப்பா ? பக்கத்துல இருந்தவன் கேட்டு சங்கிலி நாச்சிக்கு உளவு சொன்னானான்னு கேட்டுப்பாரு..! எனக்கென்ன தெரியும்! ?

சங்கிலி நாச்சியாரைக் கூர்ந்து நோக்குகிறார் சுந்தரர், எப்படி டீ கண்டுபிடிச்ச ? .. கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு வில்லங்கம் பன்ற. அவள் மாயப் புன்னகையை மந்தகாசப் புன்னகையோடு கலந்து, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்கின்ற பெயராலே முக்காடிட்டு முகத்தை மூடிக்கொள்கின்றாள். பார்த்தா கண்டுபிடிச்சிடுவாரோ என்னவோ? யாருக்குத் தெரியும்! பெருமானோடே விளையாடும் வன்தொண்டர். இதுக்கு மேல ரொம்ப நேரம் யோசிக்க

திருவாளூர் திருத்தலம்

விட்டா ஆபத்து, வாங்கபோலாம் மகிழ மரத்துக்கு.' இதுக்கு மேல என்ன பன்றது! இருக்கு. சத்தியமும் செய்துகொடுத்து விடுகிறார், திருமணமும் இனிதாக நிறைவேறிவிடுகின்றது.

மனம் தளரா சைவன்...

சில நாள்களிலேயே, கால் அரிக்க ஆரம்பித்துவிடுகிறது. தம்பிரான் தோழன், பெருமான் சுகம் கண்டவர், ஒருவேளை மனம் மயங்கி, ஒருவிநாடி பெண் சுகத்தைச் சிந்தித்திருக்கலாம், ஆனால் பெண் சுகத்திலேயே இருந்துவிட முடியாது.

ஆசை 60 நாள், மோகம் 30 நாள் என்பது சாதாரண மனிதர்களுக்கே!

தெற்கு வீதி, தெற்கு மாடத்தில் அமைந்துள்ள பரவை நாச்சியின் மாளிகை - திருவாரூர்

சிவனையே உயிராய் வைத்து வாழ்கிற சிவனடியார்களுக்கு ஆசை 6 மணி நேரம், மோகம் 30 நிமிடம். ஆசை, மோகம் - இவையிரண்டும் பறந்தன, திருத்தலங்கள் செல்ல வேண்டும் என்று கால்கள் வேகவேமாய் கேட்கத்துவங்கியது. ஆனால் ஒரு நல்ல விஷயம் பரவை நாச்சியை சென்றுப் பார்கக் வேண்டும் என்பதற்காக அல்ல, பெருமான் திருத்தலங்கள் சென்று பார்க்கவேண்டும் என்றுதான் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு உணர்வு மேலோங்குகிறது.

ஆனால் இதை, பெருமானிடம் சொல்வதற்குப் பயம்! என்னபன்றது பயம்! அதுமட்டுமில்லாமல், இப்பொழுது ஒரு அளவிற்கு அனுமானத்திற்கு வந்துவிட்டார், பெருமான் இரண்டு பக்கமும் விளையாடுகிறார், ஒ! நம்முடைய பக்தி அளவிற்கே அவளுடைய பக்தியும் பலமானதுபோல, அதனால், நான் சொன்னாலும் கேட்டுக்கொள்கிறார், கேட்டதைச் சரியாக அந்தப்பக்கம் போய் சொல்லிவிடுகிறார். எப்படிச் சொல்வது ? திருத்தலங்களுக்கு எப்படிச் செல்வது ?

கடைசியில் ஒருநாள், ரொம்பவும் தாள முடியாமல், திருத்தல யாத்திரை புறப்படுவதென்று முடிவெடுத்து, திருவெற்றியூரைத் தாண்டி விடுகின்றார். தாண்டியவுடன் இரண்டு கண்ணும் போய்விடுகிறது. தம்பிரான் தோழனே ஆனாலும் சத்தியத்திற்கு மாறாய் நடந்ததனால், இரண்டு கண்ணும் போய்விடுகிறது.

எத்துணைநாள் இரண்டு கண்ணும் இல்லாமல் எனை இறைவன் வைத்திருக்கிறான் பார்த்துக்கொள்கிறேன்' என்ற வைராக்கியத்தை இருத்தி, வன்தொண்டன்... மனம் தளரவில்லை. சைவன்... மனம் தளரவில்லை.

மெதுவாக அருகில் இருந்த திருத்தலங்களெல்லாம் தரிசிக்கச் செல்கிறார். கரிசிப்பதற்காகச் செல்வதனால்கான், கண்கள் போய்விடுகிறது. ஆனாலும் மனம் தளரவில்லை. நான் உன்னைக் காணாவிட்டாலும் பரவாயில்லை, நீ என்னைக் காண்பாய், அதுபோதும், அதற்காக கோவில் கோவிலாக வருகிறேன்' என்று நினைத்துத்தான் தல யாத்திரை தொடங்குகிறார்.

அடுத்த ஆலயத்திலேயே பெருமான் பார்க்கிறார், சுந்தரர் அடியார்கள் தோளைப் பற்றிக்கொண்டு வருவதைப் பார்க்க அவராலேயே தாங்க முடியவில்லை. ஊன்றி வரத் தங்கத்தடி கொடுக்கின்றார். தடி ஊன்றி நடக்கின்றார் சுந்தரர்.

அடுத்த திருத்தலம் காஞ்சிபுரம். காஞ்சிபுரம் வந்து சுந்தரமூர்த்திப் பெருமான் பாட

திருவாரூர் தெருக்களில் பாதுகையின்றி நடந்த எம்பெருமான்

இறைவன் தம்பிரானுக்கே தாங்கவில்லை, ஒரு கண்ணை அளித்துவிடுகின்றார்.

பாதுகை வேதனையே வந்தாலும் சோதனைன்னு நினைத்தால் சாதனையாகிவிடும்

ஒரு கண்ணுடனேயே பல திருத்தலங்களுக்குச் சென்று, இறுதியில் திருவாரூரும் வந்துவிடுகின்றார். புற்றிடம்கொண்டாரைத் தியாகராஜனைச் சென்று, ஐயனே! உன் அழகு காண்பதற்குக் கோடிக்கண்களும் போதாது, ஒரு கண்ணை வைத்து எப்படி நான் கண்டு ரசிப்பேன், ருசிப்பேன் என்று கரைந்து அழுதவுடன், எம்பெருமான் பேரருள் பெருங்கருணை பேராளன் மற்றொரு கண்ணையும் அளித்துவிடுகின்றார்.

எம்பெருமான் என்றென்றும் நிறைவுத்தன்மையிலேயே இருக்கின்றவர், நாம் நிறைவுசெய்தால் போதும், நாம்தான் குறைவுணர்வென்னும் படுகுழியில் விழுந்து கிடக்கிறோம். அவர் நிறைவுத்தன்மையில்தான் இருக்கிறார், நம் குறைவுணர்வினுடைய ஆழம் என்னவென்று ஆழம் பார்ப்பாரே தவிர அவர் குறைவுணர்வினுள் போவதே இல்லை.

மரம், மண் சார்ந்தது. மண்சார்ந்த மரத்தின்முன் செய்த சத்தியம் என்பதனால், பஞ்ச பூதங்களிலே மண் சார்ந்த திருத்தலங்கலான திருவாரூரிலும் காஞ்சிபுரத்திலும் - இரண்டிலும், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கண்ணை அளித்துவிடுகின்றார்.

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், இறைவன் கொடுக்கும் 'தண்டனைகள்' என்று நீங்கள் நினைக்கின்ற எல்லாமே, நம்முடைய பலத்தை அவர் செய்கின்ற சோதனை தானே தவிர, தண்டனை கிடையாது. சோதனையை வேதனையாக எடுத்தால் வாழ்க்கை போய்விட்டது.

வேதனையே வந்தாலும் சோதனைன்னு நினைத்தால் சாதனையாகிவிடும்.

சத்தியம் செய்து கொடுக்கும்பொழுது, அதில் குளறுபடி செய்ய முயற்சித்தது, அதன்பின், செய்துகொடுத்த சத்தியத்தையும் மீறியது - இவற்றுக்கான தண்டனையையும் பெற்று, அந்தத் தண்டனையையும் அனுபவித்து முடித்து வெற்றிகரமாக வெளியில் வந்துவிட்டார்.

அடுத்த கதையைக் கேளுங்கள், இதுதான் கதையின் உச்சம்! சுந்தரமூர்த்தி சுவாமிகள் வந்துவிட்டார், திருவாரூரில் இருக்கிறார், வீட்டுக்கு வரப்போகிறார் என்று செய்தி அனுப்புகிறார் பரவை நாச்சியாருக்கு, உடனிருக்கும் தொண்டர்கள் மூலமாக. பரவை நாச்சியார் கதவைப் பளீரென்று சாத்திவிட்டு, சொல்லாமல் இன்னொரு திருமணம் செய்ததனால், இந்தப்புரம் வரக்கூடாது' என்று ஜன்னல் வழியாக சொல்லியனுப்புகிறார்கள். சந்திக்கக்கூட மறுத்துவிடுகிறார்கள்.

சுந்தரமூர்த்திபெருமான் உணரில் இருக்கும் சான்றோர்களையெல்லாம் ஒன்றுசேர்த்து அனுப்புகிறார். முதலில் படை நடத்தும் சேனை முதலியார்கள் செல்கிறார்கள், கதவைப் படாரென்று' சாத்தி அனுப்பிவிடுகிறார்கள் பரவை நாச்சி. சான்றோர்கள் சைவ வேளாளாகள் செல்கிறார்கள், கதவைப் சடாரென்று' சாத்தி அனுப்பிவிடுகிறார்கள். ஆதிசைவர்களான சிவாச்சாரியார்கள் தூது போகிறார்கள், அப்பொழுதும் கதவைச் சாத்தி திருப்பி அனுப்பிவிடுகிறார். பிறகு சுந்தரருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இப்ப ஒரே வழி என்ன ? பெருமான்தான்!

நோர்க பெருமானிடம் செல்கின்றார்.

என்ன ?'

அது வந்து, அது வந்து, ம்ம்ம்... பரவை நாச்சி வீட்டிற்கு வரவேண்டாமென்று சொல்கிறாள் ... '

ஒருவேளை பெருமான் மனசுக்குள்ளயே நினைத்திருக்கலாம், நீ செய்த வேலைக்கு ஊருக்குள்ளேயே விட்டிருக்கக்கூடாது, வீட்டுக்கு மட்டும்தானே வரவேண்டாமென்று சொன்னாள். வெளிப்படையாகவே சொல்லியிருக்க மாட்டாரு... ஆசுதோஷன் அல்லவா! அன்பிற்கு இனியான்.

சரி, நான் என்ன செய்ய வேண்டும் ?'

பெருமானே, ஒருதரம் தூது போய்விட்டு வந்தால் நன்றாக இருக்கும்!'

ஆஹா!! அது ஒன்னுதாம்பா செய்யாம இருந்தோம். சரி நான் சென்று என்ன சொல்ல வேண்டுமென்பதைச் சொல்.

இவர் உடனே, பெருமான் சொல்ல வேண்டிய அந்த வசனங்களை எல்லாம் தயார்செய்து கொடுக்கின்றார்.

பெருமான் அதைக்கேட்டுவிட்டு, சரி அப்படியே சொல்கிறேன்.' என்று சொல்லி, பரவை நாச்சியாரின் வீட்டுக்குப் புறப்படுகிறார்.