ஆழ்ந்து கேளுங்கள். (Part 2)
ஆழ்ந்து கேளுங்கள். (Part 2)
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். இந்தப் பிரச்சினையைத் தொடங்கிய யாருமே அத்வைதத்தோட 'அ'னா, 'ஆ'வன்னாவைப் படித்ததில்லை, அநுபூதியாக உணர்ந்ததில்லை என்பது ஒருபுறம், அவர்கள் அறிவாலும் கூட அதை ஆராய்ந்ததில்லை.
பகுத்தெறிவதற்காக காரணத்திற்காகவோ, இந்தக் கேள்வி எழுந்துவிட்டது. அதனால் பதில் சொல்லியே தீரவேண்டிய இதற்குத் தீர்வளித்துத் தீரவேண்டிய கடமையும் பொறுப்பும் இருப்பதனால், இந்தப் பிரச்சனையை அலசி ஆராய்வோம்.
ஒரு சாரார், சைவம் த்வைதம் என்றும், ஒரு சாரார், விசிஷ்டாத்வைதம் என்றும், இன்னொரு குழுவினர் சைவம் அத்வைதம் சார்ந்தது என்றும் கூற, அதைப் பற்றிய மிகப்பெரிய வாதப்பிரதிவாதங்களும், அதைச் சார்ந்த மனக் கசப்புக(ளும் சஞ்சலங்களும் சங்கடங்களும் பல்வேறு பிரச்சினைகளும் சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் மூன்றுமே ஒரு ஜீவன் சிவத்துவத்தை அடைகின்ற பாதையிலே உணருகின்ற அநுபூதிகள். அவை பாதையில் வருகின்ற ஊர்களைப் போன்றவை. பாணியில் ? ? வருகின்ற இரயில் நிலையங்களைப் போன்றவை.
ஒருவன் தன்னை உடல் என்று உணரும் போது, பெருமானையும் பொருள் வடிவத்தில் பார்த்து ரசிக்கின்றான். அது த்வைதம்.
தன்னை தன்னுடைய மனதில் நிலவுகின்ற சந்தோஷம் அல்லது துக்கத்தோடு இணைத்து, தன்னை 'உணர்வு' என்று காணும் போது இறைவனையும் பிரபஞ்ச உணர்வாக பார்த்து, அதில் தன்னை ஒரு பாகமாக பார்த்து உணருகின்றான். இது விசிஷ்டாத்வைதம்.
இதைத் தாண்டி, 'தான்' எனும் தனி உணர்வே மறையும்பொழுது, ஜீவன் சி வனாக மாறும் 'சிவோஹம்' எனும் அத்வைத நிலையை அனுபவிக்கின்றான்.
இந்த மூன்றும், ஜீவன் சிவத்துவத்தை அடையும் வழியிலே இருக்கின்ற வேறு வேறு நிலைகள்கான்.
பரம்பொருள் அருளியிருக்கும் வாழ்வியல் நெறியான ஆதி சைவம் இந்த மூன்றையும் உள்ளடக்கி, இந்த மூன்றுக்கும் அப்பாற்பட்டதாய் திகமுகின்றது. சைவம் வெறும் த்வைத சம்பிரதாயம் அல்ல; வெறும் விசிஷ்டாத்வைத சம்பிரதாயம் அல்ல; வெறும் அத்வைத சம்பிரதாயம் அல்ல; இந்த மூன்றையும் உள்ளடக்கி, இதையும் தாண்டி சில படிகளையும் உள்ளடக்கியது சைவம்.
சைவத்தை த்வைத்திற்குள்ளும், விசிஷ்டாத்வைத்திற்குள்ளும் அடக்க முயற்சிக்க்கும் சிவ துரோகிகள் எரிபத்தா்களாலும், மூர்க்காகளாலும் கவனிக்கப்பட வேண்டிய மூடா்கள். ? ?
உடம்பில் வேகமும், இரத்தத்தில் சூடும் இருக்கும் போதே, அநுபூதியைத் தேடி அடையுங்கள்
சைவத்தை த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் எனும் எந்த ஒரு சட்டத் திற்குள்ளும் அடக்கிவிட முடியாது. எந்த நிலையில் எந்த ஜீவன் இருந்தாலும், அந்தந்த ஜீவனுக்கு அந்தந்த நிலையிலேயே இருந்து சத்தியத்தை காட்டி, சிவத்துவத்தில் நிலைபெற வைக்கும் வாழ்வியல் முறை ஆதி சைவம்.
மடமையை அழித்து, பின் மடத்தின் அதிபதிகளாக அமைந்தால், அது மக்களுக்கு நன்மை செய்யும். மடமையை அழிக்காமல், மடமைக்கு அதிபதியாய் இருந்து கொண்டு, மடாதிபதிகளாக சிலர் இருப்பதனால், பீடத்திற்கு அதிபதிகளாக இருப்பதற்குப் பதிலாக, மக்களைப் பிடித்த பீடைகளுக்கு அதிபதியாக இருந்து கொண்டு, சத்தியம் மக்களுக்கு சாத்தியமாவதற்கு வழி சொல்லாது, நித்திலம் ? ? அவர்களைக் குழப்பத்தில் ஆழ்ந்தி, குருடும், குருடும் குருட்டாட்டம் ஆடி குழியில் விழுந்திடும் கதியை என்னவென்று சொல்வது ?
சைவம் த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் எனும் மூன்று சம்பிரதாயங்களையும் உள்ளடக்கியது. இவை மூன்றிற்கும் அப்பாற்பட்டது. இது ஒரு முழுமையான வாழ்வியல் முறை.
ஒரு ஊரில் ஒரு பெரிய குளம். அந்த ஊருக்கு நான்கு பேர், நான்கு வேறுவேறு இடத்திலிருந்து வருகிறார்கள். அதிலொருவர், அந்த ஊரிலிருந்த விவசாயியைப் பார்த்துக் கேட்கிறார்: ரொம்ப தாகமாக இருக்கிறது, தண்ணீர் எங்கே கிடைக்கும் ? குடியானவன் குளத்தைக் காட்டினான்.
வடநாட்டிலிருந்து வந்திருந்த இன்னொருவர் கேட்கிறார்: 'பானி' எங்கே கிடைக்கும் ? குடியானவன் குளத்தைக் காட்டினான்.
இன்னொருத்தர் ஆந்திராவிலிருந்து வந்திருந்தார், அவர் கேட்டார்: நீலு எங்கே கிடைக்கும். குடியானவனுக்கு வார்த்தை புரியவில்லை. ஆனால் சைகை மூலம் காட்டியதால், புரிந்து கொண்டு குளத்தைக் காட்டினான். அந்தக் காலத்தில், குடிப் பதுபோல் சைகை காட்டினால், வெறும் தண்ணீர் என்று மட்டும்தான் அர்த்தம்!
வெளிநாட்டிலிருந்து வந்திருந்த நான்காமவர், 'வாட்டா' எங்கே என கேட்டார். குடியானவன் குளத்தைக் காட்டினான்.
நான்கு பேருமே அந்தக் குளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் வழியில் சந்தித்துக்கொண்டார்கள். எங்கே போகிறீர்கள் என்று ஒருவரையொருவர் விசாரித்துக்கொண்டனர். தண்ணீரைத் தேடி என்று ஒருவரும், வாட்டரைத் தேடி என்று ஒருவரும், பானியைத் தேடி என்று ஒருவரும், நீலு தேடி என்று ஒருவரும் சொல்ல, என்ன ஐயா! வெவ்வேறு பொருளைத் தேடி நாம் நால்வரும் ஒரே இடத்திற்கா போய்க் கொண்டிருக்கிறோம் என்று ஒருவா வினா எழுப்ப, 'அங்கிருந்த இந்த ஊர்க்காரர் இங்கு நீலு கிடைக்குமென்றுதான் சொன்னார்' என்றும், 'இல்லை இல்லை, இங்கு பானி கிடைக்குமென்றுதான் சொன்னார்' என்றும், தண்ணீர் என்றும், வாட்டர் என்றும் சொல்லி, நான்கு பேரும் விவாதத்தில் ஈடுபட்டார்கள்.
விவாதம், வேகத்தோடு சண்டை சச்சரவைக் கொண்டு வந்தது. சச்சரவில் ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளத் தொடங்கினார்கள். கடைசியில் நான்கு பேரும் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு... குளத்தில் இறங்கி, நான்கு பேரும் சொல்கின்ற வேறு வோர்த்தைகளால் குறிக்கப்படும் வஸ்து ஒன்று தான் என்று தெரித்து கொள்ளாமலேயே இறந்து போனார்கள்.
மடையார்களுக்கு அதிபதிகளாய் அநுபூதியை அடையாமல் குருபீடத்தில் அமர்ந்த அத்துனை மூடர்களுக்கும் இது தான் கதி.
தேட வேண்டிய வயதில் அநுபூதியைத் தேடி அடைந்துவிட்டு, குருபீடத்தில் அமர்பவர்கள்தான், தங்கள் வாழ்க்கையிலும் நிம்மதியாய் இருப்பார்கள். மற்றவர் வாழ்க்கையிலும் ஆனந்தத்தை உருவாக்குவார்கள்.
சின்ன வயதில் உடம்பில் வேகமும், இரத்தத்தில் குடும் இருக்கும் போது, அநுபூதியைத் தேடி அடையாதவர்கள், பீடங்களைத் தேடி அமர்ந்து கொண்டு, சுக போகமான வாழ்க்கையை வேண்டுமானால் வாழலாம் ஆனால், அவர்களுக்கு அந்தப் பீடமே பந்தமாக மாறி, இறுதிக்காலத்தில், தனியாக ஒரு தண்டனை தேவைப்படாது.
உரைய வைக்கப்பட்ட காமரை மலருக்குத் கனித்துவமான சக்தி இருப்பது இல்லை
அதனால் தான் என்னுடைய சந்நியாசிகளுக்கும், பிரம்மச்சாரிகளுக்கும் திரும்பத் திரும்ப சாமி சொல்றேன். மீண்டும் அவர் சொல்வதுண்டு, இளமையில் இறைவனைத் தேடு. இளமையிலேயே இரத்தத்தில் குடு இருக்கும்பொழுதே, உடலுக்கும் மனதுக்கும் சக்தி இருக்கும்பொழுதே, அவை இரண்டும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்பொழுதே இறைவனைத் தேடி அநுபூதியாய் உணர்ந்துவிடுங்கள். இருப்பால், அவனை உணர்ந்துவிடுங்கள்.
இளமையில் தேடாமல்விட்டவர்கள் முதுமையில் படும் கஷ்டத்தை நான் நேரில் பார்த்திருக்கின்றேன்.
'இளமையில் வறுமையும், முதுமையில் தனிமையும் கொடியது' என்று சொல்வார்கள். நான் சொல்கிறேன், 'இளமையில் இறைத் தேடல் இன்மையும், முதுமையில் இறை வெறுமை'யும்தான் மிகக் கொடுமையான நரகங்கள்.
தானே அநுபூதியை அடையாமல்விட்டது மட்டுமல்லாது, அநுபூதி
அடைந்தவர்கள் உலகிற்கு சொல்லும் உண்மையையும் முடத்தனத்தால் மறுத்துரைத்து, எதிர்த்துரைத்து, மேலும் கருமத்தை உருவாக்கிக் கொள்ளும் மனம் கொண்ட மூடர்கள், சைவத்தை த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் எனும் சிறு சிறு கூண்டுக்குள் வைக்க முயற்சிக்கிறார்கள்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், தத்துவங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் போன்றவற்றால் உறைய வைக்கப் பட்ட த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ? ? என்னும் மலர்களில் உயிர் இருக்க வாய்பேயில்லை.
உறைய வைக்கப்பட்ட தாமரை மலருக்குத் தனித்துவமான சக்தி இருப்பது இல்லை. எத்துணை நாள் அந்த மலர் தாமரைத் தண்டோடு தண்ணீரில் உயிரோடு இருக்கிறதோ, அத்துணை நாள் வரைதான் அதற்கு தனித்துவமான உயிர் உண்டு. உயிருள்ள மலர் பறிக்கப்பட்டு, உறைய வைக்கப்பட்ட உடனேயே அது தனித்துவத்தை இழக்கிறது. அதேபோல் வார்த்தைகளால் கொள்கை, கோட்பாடு என்று உறைய வைக்கப்பட்ட எந்த சத்தியத்துக்கும் பதில்லை ? ?.
கொள்கை, கோட்பாடு எழை சிறையில் அடைத்து. வார்த்தை எனும் சங்கிலியால் கட்டப்பட்ட உடனேயே சத்தியம் தன் நித்தியத்துவத்தை இழக்கிறது. த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் மூன்று கொள்கைகளும், தத்துவங்களும் இதுபோல் வார்த்தை எனும் சங்கிலியால் கட்டப்பட்டு கொள்கை, கோட்பாடு எனும் சிறையில் சிறை வைக்கப்பட்ட கருத்துக்கள். அவைகளுக்கு தன் தனித்துவத்தால் முழுமையாக ஒரு ஜீவனை சிவத்தன்மைக்குள் கொண்டு செல்லும் ஆற்றல் இல்லை.
ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட நிலையில், ஒரு குறிப்பிட்ட மனிதர்களுக்கு உதவுகின்ற சக்தி மட்டும்தான் அவற்றுக்கு உண்டே தவிர், ஒரு ஜீவன் அதன் இருப்பு நிலையிலிருந்து சிவத்தன்மையான இயல்பு நிலைக்குள் செல்லும்வரை வழிகாட்டுவதற்கான முழுமுமைத்தன்மையை எந்த ஒரு தத்துவ த்தாலும் தனியாக செய்துவிட இயலாது.
ஆனால், ஒரு ஜீவன் எந்த நிலையில் இருக்கிறதோ, அந்த நிலையில் தொடங்கி, இயைபு, இயல்பு, இருப்பு எனும் மூன்று நிலைகளிலும் ஜீவனைப் பயணிக்க வைத்து, சிவத்துவத்தில், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிரந்தரமாய் இருக்க வைக்கும் சக்தியும், தெளிவும் சைவத்திற்கே உண்டு. ஏனெனில், சைவம் எனும் வாழ்வியல் முறையை சொன்னவன், சுந்தரத் தமிழியில் இந்த சுகபோத ஞானத்தைச் சொன்னவன், என்னவன், மன்னவன், விண்ணவன், விண்ணோரும்
காணாத மன்னவன், விண்ணவன் விண்ணோரும் காணாத மன்னவன், தன் தனிப்பெருங்கருணையால் தென்னவனாய் தோன்றிய என்னவன்.
ஞான ரசவாதத்தின் எல்லா நுட்பங்களையும் நுண்மைகளையும் தன்னுள் அடக்கியது சைவம்
த்வைதம் ஒரு குறிப்பிட்ட ஆன்மிக பயணத்தின்போது, ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட மனிதர்களுக்கு மட்டும் உதவியாய் இருக்கும். விசிஷ்டாத்வைதம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட மனிதர்களுக்கு மட்டும் உதவியாய் இருக்கும். அத்வைதம் ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட மனிதர்களுக்கு மட்டும் உதவியாய் இருக்கும்.
ஆனால் சைவமோ இந்த மூன்றையும் உள்ளடக்கி, இதையெல்லாம் தாண்டி, நீங்கள் எங்கு, எந்நிலையில், எவ்வாறு இருக்கிறீர்களோ, அங்கிருந்தே உங்களுக்கு உதவத் தொடங்கி, எங்குச் சென்று சேர வேண்டுமோ அங்கு வரை உதவுகிறது.
குறிக்கோளாய், குறிக்கோள் காட்டும் நெறிப்பாதையாய், நெறிப்பாதையில் செல்லத் தூண்டும் உத்வேகமாய், எல்லா நிலையிலும் உடனிருந்து உண்மையைக் காட்டவும், கூட்டவும், சிவஞான போதத்துள், சிவத்துவ நிலைக்குள் எப்போழுதும் இருக்கச் செய்யும் வழியில் ஜீவன் எதிர்கொள்ளுகின்ற எல்லாத் தடைகளையும் அழிக்கும் திறனும், சந்தேகங்களை எல்லாம் தீர்க்கும் தெளிவும், வழியில் ஏற்படும் சோம்பல், மனச் சோர்வு இவைகளை எல்லாம் அழித்து, உற்சாக ஊஞ்சலில் ஏற்றி நம்மை உத்தம நிலைக்கு கொண்டு செல்லும் ஞான ரசவாதத்தின் எல்லா நுட்பங்களையும் நுண்மைகளையும் தன்னுள் அடக்கியது சைவம்.
நுட்பம் என்றால் (கூதுஞிடணடிணுத்து), நுண்மை என்றால் (கூதுஞிடணணிடு ணிஞ்தூ) ? ? .
அகம் பிரம்மாஸ்மி எனும் வார்த்தை, சிவோஹம் என்னும் சக்தியத்திற்குச் சமம் கிடையாது. அகம் பிரம்மாஸ்திமார்த்த ? ? அத்வைதம். சிவோஹம் சைவ சத்தியம். இரண்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசமூண்டு.
பிரம்மம் என்று ஸ்மார்த்தம் விளக்குவது - இருப்பின்மை என்கின்ற
எல்லாவற்றையும் முழுமையாக நேரடியாய் உணரக்கூடியதைக் குறிக்கும் வார்த்தையாக இருக்கிறதா என்றால் நடைமுறையில் இல்லை. பிரம்மம் என்ற வார்த்தை வெளிப்படாத மூலப்பொருள் என்றே எல்லோராலும் வருணிக்கப்படுகிறது. அனுபவித்தவர்கள் கூட அநுபூதியைப் பெற்றி எழுதும்பொழுது, அதை, வெளிப்படாத மூலப்பொருள் என்றும், அதை ஒரு தன்மை என்றும், பொருள் என்றுமே விவரிக்க முற்படுகிறார்கள்.
ஆனால் சிவம், வெறும் சில குணங்கள், தன்மைகள் இவைகளின் தொகுப்பு அல்ல. தன்னுடைய சுய விருப்பமும், வெறுப்பமும், தெரிப்பும், இயங்குவதும் இயங்காமையும் - திதுவைப்படின் இயங்காமல் இருக்கின்ற சுதந்திரமும் கொண்ட சக்தி, வல்லமையே சிவம். வல்லமை, சக்தியை வேண்டும்பொழுது வெளிப்படுத்தி, தேவையில்லாத போது வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்தி வைக்கும் இருப்பு நிலையே சிவம்.
சிவம் எனும் வார்த்தை, தன் கருணையாலே விதியை மாற்றக்கூடிய, செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை எனும் விதி நிசேஷதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு இயங்கும் இருப்பு நிலையை, நமக்குத் தெளிவாக அந்த உணர்வை உணர்த்துகிறது.
பிரம்மம் எனும் வார்த்தையைக் கேட்டவுடன் இந்த உலகத்தை எல்லாம் ஆக்கி, படைத்து, காத்து, அழித்து என்கின்ற ஒரு தன்மையை, குணங்களைத்தான் நீங்கள் உணர்கிறீர்கள், சிந்திக்கிறீர்கள், படிக்கிறீர்கள். ஆனால் சிவன் என்றால் இவை எல்லாவற்றோடு சேர்ந்து தன்னுடைய தனித்துவத்தினாலே, கருணையினாலே, விருப்பத்தாலே எப்படி வேண்டுமானாலும் இயங்குகின்ற உணர்கிறீர்கள்.
சுதந்திரத்தன்மை சேர்த்த சுந்தர வெளிப்பாடாக நினைத்தவுடனேயே சிந்தை இனிக்கும். சிவபெருமான் உணர்வே மேலோங்கி நிற்பதால், அகம் பிரம்மாஸ்மி எனும் மகாவாக்கியத்தை விட சிவோஹம் எனும் மகாவாக்கியம் அதிகம் உபயோகத்திற்குரியது. சத்தியத்தைச் சாத்தியமாக்கும் சக்தி உடையது.
சைவத்தை, சின்ன தீப்பெட்டிக்குள் அடைக்க முயலாதீர்கள்
சைவம், அத்வைதத்தை ஏற்றுக்கொள்கிறதா, இல்லையா என்பது இங்குப் பிரச்சனை இல்லை. அத்வைதத்தை நம்பினாலும், விசிஷ்டாத்வைத்தை நம்பினாலும், த்வைத்தை நம்பினாலும் - எதையோ ஒன்றைக் கடைபிடித்து, சண்டையைத் தவிர்த்து, குளத்தில் இறங்கிப் பாருங்கள்.
கடைசிவரை தாகத்திலேயே செத்துப்போன அந்த நால்வா்போல இல்லாமல், குளத்திற்குள் இறங்கிப்பாருங்கள் என்கின்ற சத்தியம்தான் சைவம்.
குளத்தில் இறங்கிப் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும், 4 வார்த்தைகளால் 4 பேரும் சொன்னது ஒன்றைத்தான். ஆனால் அந்தப் பொருள் அந்த நாலு வார்த்தைக்கும் அப்பாற்பட்ட உண்மை. அதை அருந்தியிருந்தால் வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம், அருந்தாமல் வார்த்தையை மட்டும் பிடித்து க்கொண்டு சண்டையிட்டதனால் தாகமும் தீரவில்லை. வாழ்க்கையும் போனது. அதேபோல அத்வைதமா, விசிஷ்டாத்வைதமா, த்வைதமா என சண்டையிட்டுக் கொண்டிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு குளத்திற்குள் இறங்கிப்பாருங்கள் என்கின்ற சத்தியம்தான் சைவம்.
சைவத்திற்கான ஒரு ஆழமான விளக்கம் இதுதான். சண்டையைத் தவிர்த்து, சச்ச ரவை ஒழித்து, சத்தியத்தை எட்டிப்பார், இறங்கிப்பார், இது சாத்தியம், இதுவே சைவம்.
பாடிப்பாடி கரைந்து, உருகிய நாவுக்கரசரைப்போல ஒரு பக்திமானை எந்த த்வைத சம்பிரதாயமாவது உருவாக்க முடியுமா? த்வைதத்தின் உச்சியான ச விகல்ப சமாதியிலேயே வாழ்ந்தவர் திருநாவுக்கரசு பெருமான்.
நான் உன் வழி நிற்க நீ என் வழி நின்றால், அது த்வைதம்.
நான் உன் வழி நிற்க மறந்தாலும் நீ என் வழி நிற்க வேண்டும் என்றால் அது விசிஷ்டாத்வைதம்.
நானும் நீயும் எப்போதும் ஒன்றாய் இருக்க வேண்டும், ஒன்றோடொன்று கலந்திருக்க வேண்டும் என்றால் அது அத்வைதும்.
நான் உனை மறந்தாலும், மறுத்தாலும் நீ என் வழி நிற்க வேண்டும் என்பதே சைவம், என்பதன்படி, ஞானத்திற்காக மட்டுமல்ல, காதலி கூட அல்ல, இரண்டாவது கள்ளக்காதலிக்காகப் பெருமானையே தூது அனுப்பிய சுந்தரன், இதைப் போன்ற பக்தனை எந்தச் சம்பிரதாயத்தில் காட்ட முடியும் ? எந்த மதமோ தத்துவமோ இதுபோன்றதொரு பக்தியின் சக்தியை வெளிப்படுத்த முடியும் ?
சில சம்பிரதாயங்களில் ஒரு வேளை இதுபோன்ற பக்தா்கள் இருந்தால்
கூட, இது மாதிரியான செய்திகளை எதிர்கால சந்ததியின் ஒழுக்கம் கருதி, எதிர்கால சந்ததியினர் தவறாகக் கடைபிடிக்கக் கூடாது என்று கருதி அதை மறைத்திருப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகம், ஆனால் இங்கு எதைப்பற்றியும் கவலைப்படாமல் இதை பட்டவர்த்தனமாக, தெளிவாக வரலாறாகப் பதிந்தும் வைத்திருக்கும் தைரியமான ஒரே சம்பிரதாயம் சைவம்.
ஏனென்றால் தனி மனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம், இயற்கையின் போக்கு, இது எல்லாவற்றையும் தன் கருனையின் மாத்திரத்தால் நடத்துவதும், நடத்தாததும், நிற்பதும், நிற்காததும், இயக்குவதும், இயக்காததும், தன் இச்சா மாத்திர சு தந்திரமெனும் பேரொமுக்கு பெருமான். சாதாரண விதிகள் ஒழுக்கங்கள். எந்த விதியை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எதனோடு வேண்டுமானாலும் விளையாடும் தன்மை பேரொழுக்கு பற்றி கவலைப்படாமல் வரலாறை உள்ளதை உள்ளபடியே உரைத்து வைத்தார்கள்.
உடலைக் கூட மிச்சம் விடாமல் இறை சக்தியோடு கரைத்துவிட்ட சு த்தாத்வைதிகள் ஞானசம்மந்தரும், மாணிக்க வாசகப் பெருமானும். அப்பர் மாதிரி த்வைதத்தின் உச்சத்தைப் பார்த்தவரையோ. சுந்தாரைப் போல பக்கியின் சக்தியை வெளிப்படுத்தியவரையோ, ஞானசம்பந்தரைப்போல, மாணிக்கவாச கரைப்போல் உச்சநிலையை, அத்வைதத்தை அநுபூதியாக உலகிற்குக் காட்டியவர்களையோ எந்தச் சம்பிரதாயத்தில் காண்பீர்கள் ?
இவைகளையெல்லாம் உருவாக்கிய சம்பிரதாயத்தை அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் எனும் சின்ன தீப்பெட்டிக்குள் அடைக்க முயற்சிப்பவர்கள் தீயால் சுட்டெரிக்கப்படுவீர்!
இவை எல்லாவற்றையும் தன்னுள் அடக்கும் சக்தி சைவம் ஒன்றிற்கே உண்டு. சைவத்தை ஒரு சம்பிரதாயம் எனும் சாதாரண வார்த்தைக்குள் அடைக்க முயற்சிப்பது மிகப் பெரிய மூடத்தனம். எல்லாச் சம்பிரதாயங்களையும் உள்ளடக்கி, அதற்கும் அதிகமானது இருக்கின்ற எல்லா எண்ண ஒட்டங்கள், சிந்தனை ஒட்டங்கள் இவை அனைத்திற்கும் மூலமான தாயாய், தந்தையாய், அம்மையாய், அப்பனாய் நின்றது சைவம்.
பிரபஞ்சத்திற்கே அம்மையப்பன் தந்த வாழ்வியல் என்பதனால், இதை ஒரு சிறு கட்டத்திற்குள் அடைக்க முயற்சிப்பவர்கள் மூடா்கள். அது ஒரு சிறு பகுதிக்குத்தான், சிறு கட்டத்திற்குச் சொந்தமானது என்று சிந்திக்க முயற்சிப்பவர்களும் மூடா்கள். அதைப் பரப்ப முயற்சிப்பவர்கள் பாவிகள்.