குறுக்கு வழி, மன உளைச்சலுக்கான வழி
குறுக்கு வழி, மன உளைச்சலுக்கான வழி
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், மனித மனம், நாகரிக காலத்தில் எல்லாவற்றையுமே குறுக்குப் பாதை, குறுக்கு வழி மூலமாக அடைந்துவிட துடிக்கிறது.
ஆனால், குறுக்கு வழி மூலமாக எல்லாவற்றையும் வேக வேகமாக அடைந்த பிறகு, அடைவதற்கு ஒன்றுமே இல்லாமல் வாழ்க்கை மட்டும் உங்கள் முன்னாடி வெறுமனே பரந்து விரிந்து கிடக்கும்பொது என்ன செய்வீர்கள் ? அப்பொழுது நீங்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனைதான் மன உளைச்சல், செய்வதற்கு ஒன்றுமில்லை, அனால் செயலிலி (செய்வதற்கென ஒரு செயல் இல்லா) ? ? ? வாழ்க்கை உங்கள் முன்னால் பரந்து கிடக்கின்றது. ஏனென்றால் எல்லாவற்றையுமே குறுக்கு வழியில் அடைந்து முடிந்தாயிற்று.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், குறிக்கோளும் ... குறியும் கோளும், அதை அனுசரிக்க வேண்டிய சரியையும் இருக்கும் வாழ்க்கையை வாழ்வீர்களானால் வாழ்க்கை இனிக்கும், மணக்கும். மீண்டும் மீண்டும் மனம் திகைத்து, திகைந்து ஆனந்தத்திற்குள் தீஞ்சுவையாய் இனிக்கும்.
செய்வதற்கு சரியையும், அனுசரிப்பதற்கு சரியையும், அது காட்டும் குறியும் கோளும் இல்லாமல் போனால், உங்கள் முன் காலம், வாழ்க்கை விரிந்து கிடக்கும். ஆனால் அதை வாழத் தெரியாது. அந்த நேரத்தில், தானாக உடலும் மனமும் ஒன்றோடு ஒன்று பொருந்தியிருக்க இயலாது நொடிந்து விழுவதுதான் மன அழுத்தம், மன உளைச்சல்.
குறிக்கோளும், அதை அடையும் சரியையும் வாழ்க்கையில் இருக்கும்வரை, நீங்கள் காலத்தின் தலைவனாய் இருப்பீர்கள். நேரம் கிடைக்க கிடைக்க வாழ்க்கை இனிக்கும். எத்துணை நாள் உங்களுக்கு கிடைக்கிறதோ, அத்துணை நாளும் வாழ்க்கை ஆனந்தமாகவும் இனிப்பாகவும் இருப்பதாகத் தோன்றும். குறிக்கோளும் சரியையும் இல்லாமல் போனால், அதே காலம் உங்களைக் கொல்லும்.
தினசரி அனுசரிக்க ஏதுமில்லையென்றால், அது காட்டும் உயர்ந்த குறிக்கோள் இல்லையென்றால். வாழ்க்கையை உங்கள் முன் வைக்குக்கொண்டு என்ன செய்வீர்கள் ? ரெண்டு நாள் படுக்கையிலிருந்து எழாமல் தூங்கலாம், மூன்றாவது நாள் என்ன செய்வீர்கள்? காலத்தை நகர்த்துவதே நரகமாக இருக்கும். காலத்தை நகர்த்துவதே நரகமாக இருத்தலைத்தான் மன உளைச்சல் என்று சொல்கிறோம்.
குறுக்கு வழி கண்டுபிடித்த சமுதாயங்கள் எல்லாமே உளைச்சலில்தான் இருக்கும். ஏனென்றால், குறிக்கோள் குறுக்கு வழியால் அடையப்படுவதனால், வாழ்க்கையின் பெரும் பகுதிக்கு, நிரப்புவதற்கு ஒன்றும் இருப்பதில்லை. குறிக்கோளை குறுக்கு வழியில் அடைந்தே பழகிய மனிதர்கள்தான், கடவுளை அடையவும் குறுக்கு வழி உண்டா என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள்.
கடவுள் ஒன்றும் பெட்டிப் பாம்பு அல்ல, நீங்கள் ஏதாவது ஒரு மந்திரத்தை மகுடி மாதிரி ஊதினால், உடனே எழுந்து ஆடுவதற்கு!
ஜீவன் சிவனாக மாறுவதற்கு, ஆதிசைவ வாழ்க்கைமுறையே நேர் வழி
தெளிவாகச் சொல்கிறேன், ஜீவன் சிவனாக மாறுவதற்கு தனியாக எந்தக் குறுக்கு வழியும் நுட்பமும் பிராணாயாமமும் தியானமும் கிடையாது. வாழ்க்கைமுறை மட்டும்தான் வழி. வாழ்க்கைமுறையே நேர் வழி. அது தவிர வேறொரு வழி கிடையாது.
வாழ்க்கைமுறை பிராணயாமம் இதெல்லாம் உதவலாம். ஆனால், இந்த யோகம், பிராணாயாமம், தியானம் எல்லாவற்றினாலும் உங்கள் உடலையும் மனதையும் மேம்படுத்தி இறைவனை உணர்ந்தால் கூட, உங்களுடைய சரியையின் மூலமாகத்தான் உணர்ந்த அபைவத்தைக்கூட நிரந்தாமான நித்யாளந்தமாத மாற்றிக்கொள்ள முடியும்.
என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன் - பன்னிரண்டு வயதில் ஜீவன் முக்த அனுபவம் எனக்குள் மலர்ந்தாலும் கூட, பதினொரு வயதில் அருணகிரியோகீஸ்வரரோடு அத்வைத அனுபவம், பன்னிரண்டு வயதில் சுத்தாத்வைத அனுபவம், இது எல்லாம் நடந்திருந்தாலும் கூட, சரியை என்னும் வாழ்க்கைமுறை மேம்பட்ட பிறகுதான் இருபத்திரண்டாம் வயதில் அந்த அநுபூதி இயற்கையான நித்யானந்தமாக நிலைபெற்றது.
சரியை என்னும் வாழ்க்கைமுறையை ஒதுக்கி வைத்துவிட்டு, ஏதோ
சில பிராணாயாமம், தியானம், ஏதோவொரு ரகசிய நுட்பங்கள், ரகசிய மந்திரங்கள்கொண்டு, கடவுளை மயக்கி நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடலாம் என்றும் நினைப்பது குருடன் குருடனுக்கு வழிகாட்டும் வழி மாதிரிதான். குருடன் குருடன்க்கு வழிகாட்டினால், குருட்டும் குருட்டும் குருட்டு ஆட்டமாடி குழியில்தான் விழும்.
நவீன கால குருமார்கள் மனித இனத்தைப் பீடித்த பீடைகள். இந்தப் பீடைகள் செய்கிற மிக பெரிய பிழை, விக்ரஹ வழிபாடு, தினசரி அனுசரிக்க வேண்டிய சரியை வாழ்க்கைமுறைகளெல்லாம் தேவை இல்லை என்று வாதிடுவதுதான். ஏனென்றால் நவீன கால மனிதனுக்கு, தான் எதைச் செய்தாலும் பெரும்படி உயர்வு, ஒரே தாவலில், தான் அடைய வேண்டிய இலக்கை அடையத் துடிக்கும் மனப்போக்கு உச்சத்தில் உள்ளது.
நவீன கால மனிதனுக்கு, எந்தவொரு பொருளை வாங்கினாலும், அதைப் படிப்படியாகக் கையாளுவதற்கான பொறுமையெல்லாம் கிடையாது. கார் வாங்கினாலும் அந்த உபயோகிப்பாளர் கையேட்டை யாரும் படித்துப் பார்ப்பது கிடையாது. உடனடியாக ஒட்டுநர் இருக்கையில் அமாந்து கார் ஒட்ட கற்றுக்கொள்ள வேண்டும்.
மூன்று நிமிடத்தில் ... இறைவன் அருள் தியானம் ... இரண்டே நிமிடத்தில் இறையருள்…! உடனே வாருங்கள் என்று நவீன கால குருமார்களின் நாயகன்கள் தரும் விளம்பரங்களை இணையத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம்.
சிவன் -
உங்கள் 'முதன்மைவாய்ந்த விவரண வர்த்தகச் சின்னம்' அல்ல
சரியை வேண்டாம் என்று ஒதுக்கி, ஏதோ யோக நுட்பத்தாலேயே, தியான நுட்பத்தாலேயே மனிதன் முழுமை அடைந்து விட முடியும், ஜீவன் சிவத்தன்மை அடைந்து விட முடியும் என்று யாராவது முட்டாள்கள் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தால் அல்லது தங்களைப் புத்திசாலிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தால், ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், அவர்கள் ஆதி சிவனுக்கு எதிராய்ப் பேசும் விரோதிகள் மட்டுமல்ல, சில நேரத்தில் சிவனையே முன்னிறுத்தி சிவத்திற்கு எதிராய்ச் செயல்படும் துரோகிகள்.
அவரே அருளிய ஆகமங்களை உபயோகிப்பவர்கள், தயவுசெய்து அவர் பெயரை உபயோகியுங்கள். இது, நான் எல்லாருக்கும் விடுக்கும் வேண்டுகோள்.
சில பேர் கேட்பதுண்டு, 'இந்த ஆகமங்களையெல்லாம் சிவபெருமான்தான் சொன்னார் என்று எப்படித் தெரியும் ?
சில நேரத்தில் இந்த ஆகமங்களைப் படித்துவிட்டு யாரோ அறைந்ததுபோல அலண்டுபோய் அமர்ந்திருக்கின்றேன். ஏனென்றால் அந்த அளவுக்கு நுட்பத்தோடு பெருமான் ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்குகிறார். இந்த அளவுக்கு நுட்பத்தோடு யாராவது ஒருவர் சத்தியங்களை, வாழ்க்கைமுறையை ஆழமாகவும் நுட்பமாகவும் உலகத்துக்கு விளக்கியிருந்தால், அவர் சத்தியமாக சிவன்தான். இல்லையென்றால் சிவத்துவத்தை அடைந்த ஒரு நபராக இருக்கலாம். அதனால், அது சிவனுடைய வாக்கியங்கள் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.
சிவ விரோதிகளை விட்டுவிடலாம்! சிவன் உண்டு, சிவனுடைய முகத்தையும்
பெயரையும் படத்தையெல்லாம் உபயோகிப்போம். ஆனால் ஆகமத்தை வாழ மாட்டோம் என இருக்கும் சிவத்துரோகிகளுக்கு முதலில் பதில் சொல்லலாம்.
இவர்களுடைய முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்த ஆகமத்தை எல்லாம் சிவன்தான் சொன்னார் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது ? என்பதுதான்.
நீங்கள் சந்தேகப்பட்டால், சிவன் என்று ஒருவர் இருந்தாரா? ஆகமங்கள் உண்மையானவையா? - என்று சிவன் மற்றும் ஆகமம் இரண்டையும் சந்தேகப்படுங்கள்.
அப்படிச் செய்தீர்களானால், நீங்கள் விரோதிகள். உங்களைப் பகுத்தறிவு கும்பலோட ஒதுக்கிவைத்துவிட்டு, எங்கள் வேலையைக் கவனிக்கிறோம்.
சிவனுடைய வார்த்தைகளைக் கடைபிடிக்காமல், எங்கள் சொந்த வார்த்தைகளை, எங்களுடைய சொந்த நோக்கங்களைப் பிரபலப்படுத்துவதற்கு, சிவனை எங்கள் வர்த்தகப் பிரதிநிதியாக மட்டும், சிவன் என்கிற அந்த 'முதன்மைவாய்ந்த விவரண வர்த்தகச் சின்ன'த்தை மட்டும் உபயோகிப்போம்.
குளிர்பானங்கள் என்ற பெயரில் சாக்கடைகளையெல்லாம் புட்டிகளில் அடைத்து, விளம்பரதாரர், அந்த ஊர்ல இருக்கின்ற பிரபலங்களையெல்லாம் பிடித்து, விளம்பரத்திற்காக உபயோகிப்பதுபோல், இவர்களுக்கு உள்ளேயிருந்து வந்த சாக்கடைகளையெல்லாம் கருத்துகளாகச் சொல்லி, அதுக்கு விளம்பரதாரராக மட்டும் சிவனுடைய பெயறையும் வடிவத்தையும் உபயோகப்படுத்துகின்ற சிவக்குரோகிகளுக்கான சில கேள்விகள்.
சரியையும் கிரியையும்,
யோகத்தையும் ஞானத்தையும் மலர்த்தும் நுட்பம்
சிவக்குரோகிகள் செய்கின்ற மிக பெரிய பிரச்சினை என்னவென்றால், சரியையும் கிரியையும் இல்லாமல், யோகத்தையும் ஞானத்தையும் மட்டும் குறுக்குவழி என்கின்ற பெயரில் உபயோகப்படுத்துவது மட்டும் இல்லாமல், சரியையும் கிரியையும் வாழ்பவர்களை மிகுந்த ஒரு தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் என்பது போன்ற மாய தோற்றத்தை உருவாக்கி, சரியை கிரியையின் முக்கியத்துவத்தை அழித்ததே இந்த நவீன கால சைவத் துரோகிகள்தான்.
அதனால்தான் மீண்டும் சொல்லுகின்றேன், சரியை உயர்ந்ததா, கிரியை உயர்ந்ததா, யோகம் உயர்ந்ததா, ஞானம் உயர்ந்ததா? என்கின்ற கேள்விக்கே இடமில்லை. ஏனென்றால் இந்த நான்கும் படிகள் அல்ல, பாகங்கள் மட்டுமல்ல அங்கங்கள். ஒன்றில்லாவிட்டால் இன்னொன்று இயங்க முடியாத அங்கங்கள்.
பாகம் எனும் வார்த்தை கூட குறைவான வார்த்தைதான். ஏனென்றால், பாகம் என்று சொன்னால் கூட, நான்கில் ஒன்றிரண்டு பாகங்கள் இல்லாவிட்டாலும் மற்ற பாகங்கள் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அங்கம் என்கின்ற வார்த்தையே சரியானது. ஒரு அங்கம் இல்லாவிட்டாலும், மற்ற எந்த அங்கமும் இருக்ககூட இயலாத அளவிற்கு மிகத்தெளிவாக ஒன்றோடு ஒன்று பின்னி பிணைக்கப்பட்ட அங்கங்கள் சரியையும் கிரியையையும் யோகமும் ஞானமும்!
ஒரு நவீன கால கால குரு வெளிப்படையாகவே, ''கிரியைகளையெல்லாம் செய்கின்ற மக்களெல்லாம் வேறு தொழிலைப் பாருங்கள், இதையெல்லாம் செய்ய வேண்டாம்," எனச் சொல்கிறார். என்ன தைரியம் இருக்கும் இவர்களுக்கு... யோகத்தையும் ஞானத்தையும் சரியை கிரியையிடமிருந்து பிரித்து எடுப்பதற்கு! சிவாச்சார்யார்களே சீறி எழுங்கள்.
ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள், சரியை கிரியை மாத்திரம் போதாது என்பது சத்தியம், சரியை கிரியை இல்லாமலும் போகாது என்பதே உத்தமம், சரியை கிரியை மாத்திரம் போதாது என்பது சத்தியம், சரியையும் கிரியையும் இருந்தால் மட்டுமே எல்லாம் சாத்தியம்.
வாழ்க்கைமுறையை, சரியையை அழித்தவர்களே சைவத்தை அழித்தவர்கள். இன்று உலகத்தில் இருக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் சரியையும் கிரியையும் அழித்தவர்களே. சரியையும் கிரியையும் அழித்துவிட்டு, யோகத்தையும் ஞானத்தையும் ஏதோ பாம்பு பிடிக்கும் குறுக்குவழிபோல, பகவானைப் பிடிப்பதற்கு உபயோகபடுத்தும் மூடர்கள். அநுபூதி இலா குருடர்கள், மற்றவர்கள் வாழ்க்கையையும் அழிக்கின்ற கலியின் கொடுமை! இதை, கால காலனே கேட்க வேண்டும்.
இயைபு, இயல்பு மற்றும் இருப்பு உங்கள் அங்கமாகட்டும்
சில பேர் என்னிடம் கேட்பதுண்டு, 'கண்ணப்பன், சரியை கிரியை செய்தா சி வபதம் அடைந்தான் ? '
ஐயோ மூடர்களே கண்ணப்பனின் உதாரணத்தைச் சொல்லாதீர்கள். அவன் என் தரப்பின் சாட்சி. அவன் செய்யாதது யோகமும் ஞானமும், அவன் செய்தது சரியையும் கிரியையும் !
சிவலிங்க வழிபாடும், கண்யை பிடுங்கி வைத்த பக்தி அன்பும்தான் சரியையும் கிரியையும். கண்ணப்பன் காலையிலே எழுந்து, மூக்கைப் பிடித்து யோகம் பயின்றான் என்றோ அல்லது சிவோஹம் என்று சொல்லி உட்கார்ந்தான் என்றா எந்தப் புத்தகத்திலாவது இருக்கின்றதா?
சிறு வயதில் எங்கோ வேட்டைக்குச் செல்லும் பொழுது, ஒரு சிவலிங்கத்திற்கு யாரோ அந்தணர் நீருற்றி வழிபாடு செய்வதைப் பார்த்திருக்கின்றான், தானும் அதைச் செய்ய வேண்டும் என்கின்ற சரியை அவனுக்குள் பொங்கியது, அதை அரைசரிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் பொங்கியது, தனக்குத் தெரிந்த விதத்திலே கிரியையாய் அதைச் செய்யத் துவங்கினான், அதனால்
கொண்ட பேரன்பினால் பொங்கிய ஆனந்தப் பேரூற்றினாலே சரியை, க்ரியை இரண்டினுடைய ஆழமான குட்சுமமான பக்தி என்ற உணர்வைப் பிடித்து க்கொண்டு, அது காட்டிய வழிபடியே சரியையும் செய்து சிவபதம் அடைந்தான் கண்ணப்பன்.
சில சிவத் துரோகிகள், அவர்களுடைய மாய மூட வியாபாரதந்திர கருத்துகளை விற்பதற்கு, கண்ணப்பன் எனும் பாட்டில் உறையை உபயோகபடுத்துகிறார்கள், கண்ணப்பன் என்ன சரியையும், கிரியையும் முறையாகக் கடைபிடித்தா குரானம் அடைந்தான்? என்று கேட்கிறார்கள்.
வேறு சிலர், கண்ணப்பனை நாயகனாகக் காட்டுவதற்காக, அந்த லிங்கத்தைத் தினந்தோறும் முறையாக ஆகம முறைப்படி வழிப்பட்டு வந்த சிவாச்சாரியாரை, வில்லனாக காட்டும் முயற்சியையும் செய்கிறார்கள். யோகம், தியானம் நான் தேவையில்லை என்று சொல்லவில்லை. சரியை, கிரியை தேவையில்லை என்று சொல்பவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டு இருக்கின்றேன்.
கண்ணப்பன் வாழ்க்கையைப் பாருங்கள், சரியையும் கிரியையும் சிரத்தையோடு செய்யப்பட்டால், யோகத்தையும் ஞானத்தையும் தானாகவே அது மலர்த்திவிடுவதை நாம் நேரடியாய் பார்க்கலாம்.
இயைபு என்றால் வாழும்பொழுதே அதை மேன்மைப்படுத்திக் கொள்வது, இயல்பு என்றால் அதை நம் வாழ்க்கையின் இயல்பாக மாற்றிக் கொள்வது, இருப்பு என்றால் அதை நாமாகவே மாற்றிக் கொள்வது.
சரியை எனும் வாழ்க்கைமுறை ஜீவன்முக்த அறிவியலின் அங்கம் மாத்திரம் அல்ல, முக்கியமான அங்கம், பங்கம் செய்யக் கூடாத தங்கமான முக்கிய அங்கம். சரியையில் இயைபு, இயல்பு மற்றும் இருப்பு - இம்மூன்றையும் உங்கள் அங்கமாக்குங்கள்.