Born to HealChapter 3 of 12
Chapter 3

தியானம்

1 sections

தியானம்

உங்களுக்கு உள்ளே உள்ள ஆற்றல் என்ன என்பதை அவதானியுங்கள். அது ஒரு செல்வம். உலகின் அனைத்துச் செல்வங்களையும்விட உயர்ந்தது அது.

உங்கள் மூச்சிலே கவனத்தைப் பதியுங்கள். அப்பொழுது அது நிதானமாக இருக்கும். அமைதியாகவும் இருக்கும். நீங்கள் ஒரு புதிய உலகில் நுழைவீர்கள். முற்றிலும் புதியதான அந்த உலகத்தில் உடல் நலம் உண்டு. மகிழ்ச்சி உண்டு. அது உங்கள் வாழ்க்கையின் தன்மையை அது உயர்த்தும், செறிவூட்டும்.

தியானம் மனதைத் தெளிவுபடுத்தும். உங்கள் ஆத்மாவை வெளிப்படுத்தும். சாதாரண மன நிம்மதியைத் தருவது மட்டுமல்லாமல், அது நிரந்தர மகிழ்ச்சியையும் தரும். நிலையான பேரானந்தம் அடைய உங்கள் ஆன்மீக குரு வழிகாட்டுவார். அவர் உங்களை அலை கடலி லிருந்து பாதுகாப்பாகக் கரை சேர்ப்பார். உங்களைச் சுகமான வாழ்வுக்கு இட்டுச் செல்வார்.

அருள் நிறைந்த அமுதக் கடலே உன் அருள்வுளி அண்டத்தையே குழ்ந்திருக்கிறது