I. மக்த்துவத்திற்கான அழைப்பு
I. மக்த்துவத்திற்கான அழைப்பு
தீரர்களே,
விவேகானந்தர் ஒரு சொற்பொழிவில் அவருடைய பக்தர்களை தீரர்களே! என்று அழைத்தார். 'தீரர்கள்' என்றால் தைரியசாலிகள் என்று பொருள். ஆம், தியான சிகிச்சையாளராக (Spiritual Healer) தீட்சை எடுத்துக் கொள்ள இருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் தைரியசாலிகளே!
ASP-ல் கலந்து கொள்வதும் Energy Dharshan-க்கு வருவதும், தொடர்ந்து பக்தராக மட்டுமே தொடர்வதுமே எளிதான விஷயம். தியான சிகிச்சையாளராக மாறுவது ஒரு படி மேல். சாதாரணமாக மக்களுக்கு கடினமான விஷயம். தீரர்களுக்கு எளிமையான விஷயப்.
ASP is just like a love affiar You can break any time - But To be a healer is more like a marriage It is a life long commitment
தியான சிகிச்சையாளராக மாறுவதற்கு அதிக சிரத்தையும், பொறுப்புணர்ச்சியும் தேவை. முழு உலகமும் துயரத்தாலும், வலியாலும் பாதிக்கப் பட்டிருக்கிறது. ஞான சக்தியின் தொடுதலுக்காக ஒவ்வொரு உயிரும் ஏங்கிக் கொண்டிருக்கிறது.
சுவாமியின் கருணை வெளிப்பாடுதான் தியான சிகிச்சை. தியான சிகிச்சை மூலம் ஞான சக்தியை மனித குலத்திற்கு கொடுத்து - மக்களை அவர்களின் கா்மத்தில் இருந்து மீட்க முடியும். அவர்களின் நோய்களை குணப்படுத்த முடியும். அவர்களை குழப்பத்திலிருந்து விடுவிக்க முடியும். அவர்கள் வாழ்வில் அனந்தம் என்னும் அற்புத மலரை மலர் வைக்க முடியும்.
Ii. நீங்கள் என்றுடைய கரங்கள் :
இத்தனை கோடி மக்களுக்கும் தியான சிகிச்சையின் தொடுதல் சென்று சேர வேண்டும். வெறும் இரண்டு கரங்களால் எத்தனை மனிதர்களை நான் தொட்டுவிட முடியும்? எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற என்னுடைய கருணையின் - வாய்க்கால்கள்தான் தியான சிகிச்சையாளர்கள்.
தியான சிகிச்சையாளரான பிறகு நீங்கள் ஒவ்வொருவரும் என்னுடைய கரங்கள். நீங்கள் நோயாளிகளை தொடும் ஒவ்வொரு நிமிடமும் என்னோடு முழு தொடர்பு கொள்ளுகிறீர்கள். என்னுடைய கரங்களில் வெளிப்படும் அதே சக்தி உங்களுக்குள் இருந்தும் வெளிப்படும்.