Chapter 24
நிஜம் தெரியுமா
நிஜம் தெரியுமா
ஞானக்கருத்துக்கள் தியானம் செய்தவனிடம் சொன்னது ... நிம்மதிகளை மனம் தேடுதென உன்னிடம் சொல்லவந்தேன். எனவே, தியானம் செய்! கண்டுகொள்ள, தியானம் அந்தத் தியானியிடமே சொன்னது ... பார்! மனிதா பார்! உன் உடலென்னும் தொட்டிக்குள் தத்தித் தத்தளிக்குது உயிர் ! அதைப் பார்! விட்டுவிட்டு வாட்டும் உணர்ச்சிப் பகிவுகள் உள் மனமென்னும் ஏட்டில் ஏகமாயிருக்கிறதே ! அதைப் பார். கோபக் கனலையும் துக்க புகையையும் கக்க தயாராயிருக்கும் தூங்கும் எரிமலையான உன் குணக்குன்றின் முகடு தெரிகிறதே அதைப் பார். பின் குறிப்பு: உள்ளே இவ்வளவும் நிகழ்! எதுவும் நிகழாதது போல் ... அதாவது இப்போது நீங்கள் எப்படி அமைதியாய் இருப்பதாய் உங்களுக்குத் தெரிகிறதோ ... அப்படி அமைதியாய்த் தெரிந்தான் அந்தத் தியானி – பார்க்க !