ந்தைவுணர்விலிருந்து படைத்தலுக்கான நூட்பம்
ந்தைவுணர்விலிருந்து படைத்தலுக்கான நூட்பம்
இப்போது நான், உங்களுள் சரியான உணர்வை உருவாக்குவது பற்றியும், உங்கள் விருப்பத்தை நிதர்சனமாக்குவதைப் பற்றியும் விளக்குகிறேன், மேலும் அந்த அனுபவத்தையும் அளிக்கிறேன்.
நிதர்சனமாக வேண்டுமென்று நீங்கள் விரும்புகின்ற ஏதாவது ஆசையை எடுத்துக் கொள்ளுங்கள்- நீங்கள் செல்வந்தராக விரும்பலாம், ஆரோக்கியமானவராக விரும்பலாம், உறவுமுறைகளைச் சரிப்படுத்த விரும்பலாம், தலைவராக விரும்பலாம் அல்லது எதை விரும்புகிறீர்களோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
முதலில், உங்கள் ஆழமான சுய சந்தேகத்திலிருந்தும், கடந்த காலத்தோல்விகளிலிருந்தும் எழும் சாத்தியமில்லை என்னும் கருத்தை நிறைவுசெய்யுங்கள். அதனுடன் நிறைவுசெய்யுங்கள். உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள், ''சாத்தியமற்றது என்று ஒன்றுமே இல்லை!''
இரண்டாவதாக, உங்கள் விருப்பத்தை நிதர்சனமாக்குவதற்கான உணர்வை உருவாக்குங்கள். அதற்கு முன், சரியான உணர்வை உருவாக்கும் உங்கள் திறமையைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் சந்தேகத்தை நிறைவுசெய்யுங்கள். கண்களை மூடி அமருங்கள். நீங்கள் கொண்டிருக்கும் அந்தக் கருத்தை மேலே எடுத்து வாருங்கள். சாத்தியமற்றது என்கிற அந்தக் கருத்தை நிறைவுசெய்யுங்கள்.
இப்போது அந்த நிறைவுணர்விலிருந்து செயல்படுங்கள். உங்களின் செயல்களின் மூலம், உங்களின் அந்த விருப்பத்தை நிதர்சனமாக்குவது என்று தீர்மானியுங்கள். உங்கள் விருப்பத்தை நிதர்சனமாக்குவது என்று ஒப்புக்கொள்ளும் பொறுப்பே, அதற்கான பொறுப்பை எடுப்பதாகிறது.
சாத்தியத்திற்கான உணர்வை உருவாக்குவதும், அதற்கான பொறுப்பை எடுப்பதும்தான், உங்கள் விருப்பத்தை உங்கள் வாழ்வில் நிதா்சனமாக்குகிறது.
உங்கள் உணர்வு தளத்தில் எதையெல்லாம் உருவாக்குகிறீா்களோ, அவை அனைத்துமே உங்கள் வாழ்வில் மங்களகரமான நிஜங்களாக ஆகட்டும் என்று ஆசீர்வதிக்கின்றேன்.