Chapter 45

உங்கள் வாழ்வில் அதிசயங்களை நிகழ வையுங்கள்

2 sections

உங்கள் வாழ்வில் அதிசயங்களை நிகழ வையுங்கள்

நீங்கள் உயர்நிலை விழிப்புணர்வை அடையும்போது உங்களுக்குள் செயற்படுத்த தூண்டப்படுகின்ற அசாதாரணமான ஆன்மிக சக்திகளை சித்திகள் என்கிறோம். 4 சக்திகளுடன் நீங்கள் தொடர்ந்தும், சிரத்தையுடனும் வேலை செய்யும்போது, இந்த சித்திகள் உங்களுக்குள் விழிப்படையும்.

உங்கள் வார்த்தையில், எண்ணத்தில், உணர்வில், செயல்களில் தா்மத்தைச் சேருங்கள். 4 சக்திகளுடன் நீங்கள் தாமத்தைச் சேர்க்கும்பொமுது, உங்கள் வாழ்க்கையில் அதிசயங்கள் நிகழ்வதைக் காண்பீர்கள். உதாரணத்திற்கு, நீங்கள் அசாதாரணமான ஒருங்குவித்தலில் வாழும்போது, அந்தப் பிரபஞ்சமே உங்கள் வார்த்தைகளை நிறைவேற்ற ஓடோடி வருகிறது!

சரியான உணர்வை' உருவாக்,குவதைப்பற்றிய நகைச்சுவையான, ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சீன்ன கதை.

அசுர இளவரசனான சிறுவன் பிரஹ்லாதன், விஷ்ணுவின் சிறந்த பக்தன். இது அவனுடைய தந்தையும் அசுர அரசனுமான ஹிரண்யகசிபுக்கு மிகுந்த கோபத்தை மூட்டியது. ஏனென்றால் அவன், கடவுளுக்குப் பதிலாக தன்னையே வணங்க வேண்டுமென விரும்பினான். ஒரு நாள் ஹிரண்யகசிபு, பிரஹ்லாதனை நோக்கி ஒரு சவால் விட்டான். அரண்மனையிலிருந்த தூண்களைக் காட்டி, நீ உன்னுடைய கடவுள் விஷ்ணு எல்லா இடத்திலும் இருப்பதாகச் சொல்கிறாயே, அப்படியானால் அவன் இங்கிருக்கும் தூண்களில் இருக்கிறானா ? என்று கேட்டான்.

'' ஆம், அவர் இங்கிருக்கும் தூண்களிலும் இருக்கிறார்!'' என்றான் பிரஹ்லாதன்.

''ஓ, அப்படியா! எந்தத் தூணில் விஷ்ணு இருக்கிறான் என்று சொல், அதைப் பிளக்கிறேன், அவன் வருகின்றானா என்று பார்க்கலாம், ' என்று ஹிரண்யகசிபு கர்ஜித்தான்.

பிரஹ்லாதன், தூணைச் சுட்டிக் காட்ட தன் பிஞ்சுக்கரத்தைத் தூக்க ஆரம்பித்தான்.

ஹிரண்யகசிபு பிரஹ்லாதனை கேள்வி கேட்கும்போது, விஷ்ணு தன் இருப்பிடமான வைகுண்டத்தில் ஓய்வாகப் படுத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. பிரஹ்லாதனின் கரம் அசைய ஆரம்பித்ததும், விஷ்ணு துள்ளிக் குதித்து எழுந்து, பூமியை நோக்கி ஒட ஆரம்பித்தார்! இதைக் கண்டு அதியத்துப்போன அவர் மனைவி லட்சுமி, ''என்ன நடந்தது, இவ்வளவு வேகமாகப் போகிறீர்கள் ?'' என்று கேட்டார்.

"என்னுடைய பக்தன், ஒரு தூணைச்சுட்டிக் காண்பிக்கப் போகிறான். அவன் எந்த தூணைச் சுட்டிக் காண்பிக்கிறானோ, அந்தத் தூணில் நான் நுழைந்தாக வேண்டும்!' என்றார்.

களங்கமற்ற பிரஹ்லாதனின் ஒருங்குவித்தலும் சிரத்தையும், அவன் விரல் எங்குச் சுட்டிக் காண்பிக்கிறதோ அங்கு விஷ்ணு தோன்றியே ஆகவேண்டும் என்கிற அளவுக்கு ஆழமானது! சக்தி மிக்க சாத்தியத்தை, சாத்திய உணர்வை நீங்கள் உருவாக்கும்பொழுது, அந்த இடத்தில் தெய்விகம் இறங்கி வருகிறது, உங்களுக்காக !