1. Unknown
உடல் நலம்:
நாம் நன்றாகப் படிப்பதற்கும், நன்றாக வேலை செய்வதற்கும் சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்கும் அடிப்படைத் தேவை உடல்நலம். உடல்நலத்தை அடைவது எப்படி? ஆரோக்கியம் என்றால் என்ன? என்பது பற்றிப் பார்ப்போம். நோய் இல்லாமல் இருப்பது ஆரோக்கியமான நிலை அல்ல. அது நோய் இல்லாத நிலை மட்டுமே. பல நாள் ஆரோக்கிய சீர்கேட்டின் விளைவுதான் நோய். "நன்றாகத்தான் இருந்தாராம், திடீரென சர்க்கரை நோய் வந்துவிட்டது" இப்படிப் பலர் பேசுவதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். திடீரென ஒரு நோய் வரவே வராது. பல நாளாக ஆரோக்கியம் கெட்டு ஆரம்பித்து, அது ஒரு நாள் நோயாக வெளிப்படும். ஆரோக்கியம் என்பது ஒரு அருமையான அக உணர்வு. ஒரு ரம்மியமான, சுகமான உணர்வு. ரம்மியமான உணர்வு உங்களை விட்டு எப்போது அகல்கின்றதோ, குறுகலமான உணர்வு நம்மை விட்டு எப்போது அகல்கின்றதோ, அப்போதே நோய் உருவாகத் துவங்கும். ஆரோக்கியம் நம்மை விட்டுப் போக ஆரம்பித்துவிடும். மனதும், உடலும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது. சமுதாயம் நேரடியாக நம் உடலைப் பாதிப்பதில்லை. நம்முடைய மனதைத்தான் பாதிக்கின்றது. எனவே மனதின் பாதிப்பு உடலையும் பாதிக்கின்றது. இந்த மனழுதிர்வைப் பெற வேண்டியது எல்லோருக்கும் அடிப்படையான தேவை ஆகும். இந்த இரண்டுமே நலமாக இருக்கும்பொழுது மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்! ஒரு சாக்கடைக்கு அருகில் மல்லிகைப் பூவின் வாசனையோ அல்லது மல்லிகைப் பூவிற்கு அருகில் சாக்கடையின் துர்நாற்றத்தையோ எதிர்பார்க்க முடியாது. ஒரு மனிதனுடைய மன வலிமை, உடல் வலிமை இவை இரண்டும் எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்துத்தான் அவர்களின் தன்மை நிர்ணயிக்கப்படும். அவர்கள் நல்லவர்களாக, மனழுதிர்ச்சியுடன் இருந்தால் அவர்களிடம் நாம் கெட்ட விஷயங்களை எதிர்பார்க்க முடியாது. தொடர்ந்து அவர்களைச் சுற்றியுள்ள வட்டம் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கும். எனவே மனநலம், உடல்நலம் நன்றாக இருந்தால் இயற்கையாகவே அந்த நபர் ஆனந்தமாக இருப்பார். உடலிலோ, மனதிலோ, பிரச்சினை இருந்தால் இயற்கையாகவே அவர் பிரச்சினையை உருவாக்கிக்கொண்டிருப்பார். ஒரு வரவேற்பார் வரவேற்பறையில் அங்கு வருபவர்களையெல்லாம் சிரித்து வரவேற்பார். பின் அவர்கள் சென்றதும் என்று இருப்பார். இதுதான் அவர் வேலை. அன்றைக்கு அதே வரவேற்பார்களுக்கு மிகக்கடுமையான வயிற்று வலி. இப்பொழுதும் அதே சிரிப்பு அவரிடம் இருக்குமா? ஒருவருக்குப் பிரச்சினை இருக்கின்றதா? என்று அவர்களுடைய சிரிப்பை வைத்தே கண்டுபிடித்து விடலாம். சாதாரண வயிற்றுவலிக்கு இத்தனை சக்தி இருக்கிறது என்றால் நமக்கு ஏற்கெனவே உடலில் சக்தி ஓட்டம் குறைவாகவும் இருக்கிறது. மனதிலும் அதிகமான துக்கங்களையும் வைத்துக்கொண்டு நாம் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் சிரித்துப் பேச முயற்சி செய்கின்றோம். அப்படியேது அங்க் சிரிப்பு எப்படி இருக்கும்? என்று நினைத்துப் பாருங்கள். போலித்தனமாகத்தான் இருக்கும். ஒரு சாக்கடைக்கு அருகில் மல்லிகைப் பூவின் வாசனையோ அல்லது மல்லிகைப் பூவிற்கு அருகில் சாக்கடையின் துர்நாற்றத்தையோ எதிர்பார்க்க முடியாது. ஒரு மனிதனுடைய மன வலிமை, உடல் வலிமை இவை இரண்டும் எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்துத்தான் அவர்களின் தன்மை நிர்ணயிக்கப்படும். தடைக்கற்களைப் படிக்கற்களாக்குங்கள் "உன்னால் இவ்வளவுதான் முடியும்" என்ற சமுதாயம் நம்மைச் சிறிய வயதில் இருந்தே தட்டி வைக்கிறது. இந்த மனோநிலையை மாற்றினால் நிச்சயமாக நமது உறவுகளிடம் சந்தோஷமான உறவுமுறையை வைத்துக் கொள்ளமுடியும். அருமையான உறவுமுறை, உடல் நலம், மன நலம், நம்மிடம் இருக்கும் போது நம்மைப் போல் சந்தோஷமான, ஆனந்தமான நபர் இந்த உலகத்திலேயே இல்லை என்ற முடிவிற்கு நாம் வருவோம். நான் வாழ்வதற்குத் தகுதியானவன், நான் மதிக்கத்தக்கவன் என்ற உணர்வு எல்லோருக்குள்ளும் பெருகும். அந்த உணர்வை அடைவதுதான் நமது இலக்கு. அந்த இலக்கை நாம் அடைந்துவிட்டால், படிப்பென்ன? வேறு எதுவாக இருந்தாலும் நம்மால் சாதிக்கமுடியும். ஏனென்றால் அடிப்படையாகச் சாதிக்க வேண்டியதைச் சாதித்து முடித்து விட்டோம். அதன் பிறகு எதை நினைத்தாலும் நம்மால் சாதிக்கமுடியும். சாதிப்பதற்குத் தடையே இருக்காது. அந்தச் சாதிக்கும் பாதையில் முட்டுக்கட்டையாக நமக்கு எதுவுமே வந்து நிற்கமுடியாது,
நல்ல வாழ்க்கைக்காக!
ஒரு நாற்பத் திரண்டு வயதில், ஒரு ஐம்பத் தைந்து வயதில் உன்னை நான் இவ்வளவு நாள் நிறைய கஷ்டப்படுத்தி விட்டேன், தவறாகப் புரிந்து கொண்டேன் என்று சொல்வதினால் என்ன பலன்? அது இருபத் தைந்து வயதில் சொல்லி இருக்க வேண்டும். இளம் சமுதாயமே, இப்பொழுது நீங்கள்தான் வாழ்க்கையில் நுழையும் தருவாயில் இருக்கிறீர்கள். எனவே நீங்கள்தான் இந்தத் தியானத்தையும், ஞானத்தையும் முழுமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆன்மீகம் என்பது ஆனந்தமயமாக வாழ்வதுதான். ஆன்மீகம் என்றால் பெரிதாக நினைத்துக் கொள்ளவேண்டாம். இங்கும் கனவு இருக்கும், அங்கும் கனவு இருக்கும். இங்கும் ஆசை இருக்கும், அங்கும் ஆசை இருக்கும். வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்த திருப்தியை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய பாதை தான் ஆன்மிகம். ஆனந்தமயமான வாழ்க்கையை நீங்கள் எப்படி வாழ்வது? என்று கற்றுக்கொடுக்கக் கூடிய சாலைதான் ஆன்மீகம். எனவே ஆன்மீகத்தையும், தியான முறைகளையும் கணடிப்பாக வாழ்க்கையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது நம்முடைய அடிப்படைத் தேவை. அடிப்படை உரிமையும் கூட. வெற்றியின் இரகசியங்கள் நமது வெற்றிக்கு எது தடைகல்லாக இருக்கிறதென்று தெரிந்தால், வெற்றியின் இரகசியத்தை நாம் எளிதாகக் கொடுக்கு விடலாம், மாணவர்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய இரண்டு தவறுகள்....
2) முக்கியமற்றவைக்கு முக்கியத்துவம் அளிப்பது
இந்த இரண்டு தவறுகளைத்தான் எல்லோரும் செய்கின்றனர். தள்ளிப்போடுவது (Postponing) போன்ற ஒரு நகைச்சுவையான விஷயம் வேறு எதுவும் கிடையாது. அப்பொருமுத்தான் காலனைநுத் தேர்வு முடிவுகள் வந்திருக்கும் மதிபெண்ணைப்பார்த்தால் மிகவும் குறைவாக இருக்கிறது, கணடிப்பாக நாம் அரையான்டுத் தேர்வில் நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்ற பெரிய உத்வேகத்துடன் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்க்கு வந்து சேருவார்கள். இன்றிரவு போய்ப் படித்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்திருப்பார்கள். அன்று சனிக்கிழமையாக இருக்கும். மாலையில் ஒரு அருமையான படம் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும். சரி!. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு விடியற்காலையில் படித்துக்கொள்ளலாம். ஒரு ஐந்து அல்லது ஆறு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து படித்துக் கொள்ளலாம் என்று நினைத்து அந்த சினிமாவை நிம்மதியாக டிவியில் பார்த்துவிட்டுத் தூங்கச் சென்றுவிடுவார்கள். காலையில் 6 மணிக்கு அலாரம் அடித்தவுடன் 7 மணிக்கு எழுந்து கொள்ளலாம் என்று அப்படியே மெத்தையில் புரண்டுட்ப படுத்து விடுவார்கள். ஒரு 8 1/2 மணிக்கு, அப்பாவோ, அம்மாவோ தண்ணீரைத் தெளித்து எழுப்ப விட்டவுடன்தான் அரக்கப் பறக்க எழுந்திருப்பார்கள். இந்தத் தள்ளிப் போடும் மனோபாவம்தான் நம்முடைய படிக்கும் தன்மையைக் கீழே படித்து இறக்கி விடுகிறது. இல்லையென்றால் நம்முடைய படிக்கும் தன்மை மிகச்சிறப்பாக இருக்கும். அன்றைக்கு வகுப்பில் சொல்லித் தருவதை அன்றைக்கே படித்தால் அதைப் படிக்க வெறும் அரமணி நேரம்தான் ஆகும். அடுத்த நாள் படித்தால் முக்கால் மணி நேரம் ஆகும். இன்னும் இரண்டு நாள் கழித்துப் படித்தால் ஒரு மணி நேரம் ஆகும். சத்தமாக விட்டு விட்டுப் பிறகு படித்தோமென்றால் அதற்கு மூன்று மணி நேரம் ஆகும். எல்லாவற்றையும் முழுதாகத் தள்ளிப்போட்டுவிட்டுக் கடைசி நேரத்தில் படிப்பதினால்தான் நம்மால் நினைத்த அளவிற்கு மதிப்பெண் வாங்க முடியவில்லை. இதற்கு அடுத்து (Giving Prioritiesor Process) முக்கியமற்றவைக்கு முக்கியத்துவம் அளிப்பது. எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதைத் தெரிந்து கொள்வது படிப்பற்கு மட்டும் அல்லாமல் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உதவும்.
இந்த இடத்தில் கோபப்படலாமா? கூடாதா?
இந்த இடத்தில் அழபாக இருக்கலாமா? இருக்கக்கூடாதா?. இந்த இடத்தில் கம்பீரமாக இருக்கலாமா? இருக்கக்கூடாதா? என்பதைத் தெரிந்து கொண்டால் நாம் தவறான ஒரு விஷயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டோம். சாலையில் நன்றாகப் பார்த்து நடக்கும்போது, எங்கேயாவது சகதியில் கால் வைக்க நம்மால் முடியுமா? எதையும் வரிசைப்படுத்தி, மதிப்பிட்டுப் பார்த்து நன்கு யோசித்தால் அனைத்தும் உள்நுள் முழுமையாக நிறைக்கப்பட்டுவிடும் புத்தசாலித்தனம் ஏற்கனவே உள்நுள் பதிவாக உள்ளது, (Pre registered) எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவர்கள் இந்த இரண்டு புத்துணர்வுப் பயிற்சிகளையும் செய்யக்கூடாது. இந்தியாவில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பள்ளிகள் இருக்கின்றன. அதில் 3 கோடி மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த மூன்று கோடி மாணவர்களில் 40 சதவிகிதம் அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மாணவர்கள் தேர்வு பயத்தில் இருக்கிறார்கள். இது சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் புள்ளி விவரம். தேர்வுப் பயிற்சிக்கான அடிப்படைக் காரணங்கள் இந்த இரண்டு மட்டும்தான்.
- உணர்வு நிலையில் இயங்கும்போது உள்ள உணர்வற்ற நிலையின் இயக்கம். இது நமது பர்சனாலிட்டி (Personality) பலவீனமாக இருந்தாலோ, அல்லது நாம் தேர்வுக்குத் தயார் செய்வதில் பலவீனமாக இருந்தாலோ வரும். தேர்வு பயம் என்பது நாம் நினைப்பதுபோல் பெரிய விஷயமாக கிடையாது. சிறிது காலம் தொடர்ந்து அதற்கான வேலையைச் செய்தோமானால் நம்மால் நிச்சயமாக சரி செய்ய முடியும். தியானமும், ஞானக் கருத்துகளும் இதற்கு மிகப் பெரிய அளவில் சிறப்பாக செயல்படும்.
- நமது கெளரவம் எங்கே பாதிக்கப்பட்டுவிடுமோ என்று எண்ணுவோம் போது, என்று நினைக்கும்போது அங்கு காலம் தொடர்ந்து அதற்கான வேலையைச் செய்தோமானால் நம்மால் நிச்சயமாக சரி செய்ய முடியும். தியானமும், ஞானக் கருத்துகளும் இதற்கு மிகப் பெரிய அளவில் சிறப்பாக செயல்படும். வகுப்பில் உடன் படிக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்களோ? என இந்த எண்ணம் அடிவங்கும்போது தேர்வு பயம் வெளியில் வருகின்றது. பர்சனாலிட்டியில் உள்ள பலவீனம், தேர்வுக்குத் தயார் செய்வதில் உள்ள பலவீனம். இந்த இரண்டையும் நாம் சரி செய்யும் போது தேர்வு பயம் நம்மை விட்டு ஓடிவிடும். தேர்வு பயம் என்பது நாம் நினைப்பதுபோல் பெரிய விஷயம் கிடையாது. சிறிது காலம் தொடர்ந்து அதற்கான வேலையைச் செய்தோமானால் நம்மால் நிச்சயமாக சரி செய்ய முடியும். தியானமும், ஞானக் கருத்துகளும் இதற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பான முறையில் உதவும். உங்களுடைய பலவீனமான பர்சனாலிட்டியை மாற்றுவதற்கும், அதிகரிப்பதற்கும் உங்களுடைய படிக்கும் பழக்கத்தை மாற்றுவதற்கும் மிகவும் உதவும்.
தூக்கமும் படிப்பும்:
தூக்கத்தைப்பற்றி விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சி செய்தார்கள். அந்த ஆராய்ச்சியில் விதவிதமாகத் தூங்க வைத்துப் பார்த்தார்கள். இரவு 9 மணிக்கே தூங்க வைப்பது. இரவு 12 மணிக்குத் தூங்க வைப்பது. இரவெல்லாம் கண்விழித்துப் பின் விடியற்காலை 2 மணிக்குத் தூங்க வைப்பது. காலை 6 மணிக்கே எழுப்பிவிடுவது. மொத்தமாக 6 மணிநேரம்தான் தூங்கவிடுவது, 10 மணிநேரம் தூங்கவிடுவது, வெறும் 4 மணி நேரம் மட்டுமே தூங்க விடுவது. இப்படி வகைவகையான ஆராய்ச்சி செய்ததில் என்ன முடிவு தெரிந்ததென்றால் சரியான நேரம் தூங்குபவர்கள் நிறைய மதிப்பெண் பெறுகிறார்கள். தேவையான அளவு தூங்கி ஓய்வெடுப்பவர்களின் அறிவுப்பக்குவமும் அபரிமிதமாகி உள்ளது. குறைந்த நேரம் தூங்குபவர்கள் ஓய்வாக இல்லாமல் இருப்பதினால், பரபரவென்று இருப்பதினால் இயற்கையாகவே அதிகம் செயல்பட வேண்டியுள்ளது. தேர்வில் மதிப்பெண் குறைவாக வருகின்றது. எனவே, இந்த ஆராய்ச்சியின் ஆய்வு அறிக்கையை எதற்கு அடிப்படையாகத் தருகிறோம் என்றால, “நீங்கள் தூக்கத்தைக் குறைப்பதினால் உங்களுடைய மதிப்பெண் அதிகமாகக் குறையும் என்பதே உண்மை. தூக்கத்தின் நேரத்தைக் குறைப்பது எந்த வகையிலும் நல்லதல்ல. அது ஆபத்து. குறைந்தது மாணவர்கள் 6 மணிநேரம் தூங்க வேண்டும்” என்பது ஆராய்ச்சியின் முடிவில் வெளியிட்டுள்ள அறிக்கை. தியானம் தொடர்ந்து செய்யச் செய்ய உங்களுடைய தூக்கத்தின் தன்மை அதிகரிக்கும், தூக்கத்தின் அளவு குறையும். நாம் தூக்கத்தைத் தியாகம் செய்துவிட்டுக் கஷ்டப்படக்கூடாது. அதற்காக உடலையும், மனதையும் நாம் வருத்திக்கொள்ள வேண்டுமென்ற அவசியமே இல்லை. தியானம் தொடர்ந்து செய்யச் செய்ய உங்களுடைய தூக்கத்தின் தன்மை அதிகரிக்கும், தூக்கத்தின் அளவு (Quantity of sleep) குறையும்.
உணவும் படிப்பும்:
இது மிகவும் முக்கியமான பகுதி. உபநிடதம் மிக ஆழமாக கூறுகிறது, “அன்னம் பிரம்மம்” “Food is God” என்று பொய்யா ஞானி சொல்கிறார், “you are what you are eat” “நீ என்ன சாப்பிடுகின்றாயோ அது தான் நீ இவர்கள் சொல்லும் அளவிற்கு உண்மையாகவே அந்த உணவிற்கு, அந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறது.
எவ்வளவு ஆழமாக உங்களால் ருசிக்க முடியும்?
அதை நன்றாக ருசித்துப்பார்த்தீர்கள் என்றால், ஒரு பழத்தைச் சாப்பிட்டாலே 10 பழம் சாப்பிட்டதற்கான திருப்தியைக் கொடுக்கும். இயற்கையாகவே நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவின் அளவும் குறையும். நிறையச் சாப்பிடுவது குறையும். சாப்பிடும் தன்மை அதிகமாகும். கொஞ்சம் சாப்பிட்டால் போதும், நமக்குந் தேவையான சக்தியை நாம் எடுத்துக்கொள்ள முடியும். நாம் சாப்பிடுவது எல்லாமே நாவிற்குத் தேவையானதைத்தான் சாப்பிடுகிறோம். வயிற்றிற்கும், உடலுக்கும் தேவையானதை நாம் சாப்பிடுவதில்லை. ருசித்து, பொறுமையாகச் சாப்பிட்டால் மட்டும்தான் வயிற்றிற்குத் தேவையான அளவு சாப்பிட முடியும். ஏனென்றால் நாவிற்கு சலிப்புத் தட்டிவிடும். நீங்கள் ஒரே சாக்லேட்டைத் திரும்பத் திரும்ப அதிக நேரம் வாயில் வைத்துக்கொண்டு சாப்பிட்டால் அது நொந்துபோய், இயற்கையாகவே வேண்டாம் என்று சொல்லிவிடும். அதற்கு மேல் நமது உடலுக்கும் தேவையிருக்காது. எனவே உணவை ரசித்துச் சாப்பிடவேண்டும். தண்ணீரை ரசித்துக் குடிக்கவேண்டும். சிறிது சிறிதாக ரசித்துக் குடிக்கவேண்டும். அதற்கென்று சிறிது நேரம் செலவழிக்க வேண்டும். நாம் சாப்பிடுவது எல்லாமே நாவிற்குத் தேவையானதைத்தான் சாப்பிடுகிறோம். வயிற்றிற்கும், உடலுக்கும் தேவையானதை நாம் சாப்பிடுவதில்லை. ருசித்து, பொறுமையாகச் சாப்பிட்டால் மட்டும்தான் வயிற்றிற்குத் தேவையான அளவு சாப்பிட முடியும். தேவையான அளவு சாப்பிட முடியும். நம் எல்லோருடைய உடலுக்குள்ளேயும் நம்முடைய அனுமதி இல்லாமலேயே ஏகப்பட்ட நச்சுக்கள் நுழைந்திருக்கின்றது. Air Pollution, Food Pollution, Water Pollution என இது எல்லாவற்றையும் தாண்டி Thought Polution. காற்றினால் உருவாகும் மாசுகள், உணவினால் உருவாகும் மாசு, தண்ணீரினால் உருவாகும் மாசு, இது எல்லாவற்றையும் தாண்டி எண்ணங்களினால் உருவாகும் மாசு! இந்த நான்கு மாசுக்களினால் ஏகப்பட்ட நச்சுத்தன்மைகள், நமக்குள் நுழைந்திருக்கின்றது. இப்போது நாம் ஏதோ சாதாரணமாக இருப்பதைப் போல தினைத்துக் கொள்ளாதீர்கள். உலகப் போர்களத்தில் இருப்பதைப் போல இருக்கிறோம்.
ஒரு சின்னக் கதை:
கதை கூட அல்ல. நடந்த ஆராய்ச்சி. ஒரு விளம்பரங்கள் குழு ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள். எண்ணங்களுக்கு எவ்வளவு வலிமை (Power of thoughts) இருக்கிறது என்ற தலைப்பின் கீழ் ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள். ஒரு மூன்று ரோஜாச் செடியை எடுத்துக் கொண்டார்கள். மூன்று ரோஜாச் செடிகளையும், மூன்று கூண்டுகளில் வைத்தார்கள், வைத்த பின்பு இருபத்தொரு நபர்களைக் கொண்ட குழுவினராக, காலையில் ஒரு செடியின் முன்பு போய் நின்று என்னென்ன வார்த்தைகள் சொல்லித் திட்ட முடியுமோ அவ்வளவு எதிர்மறை வார்த்தைகளாய்த் திட்டினார்கள். காற்றினால் உருவாகும் மாசுகள், உணவினால் உருவாகும் மாசு, தண்ணீரினால் உருவாகும் மாசு, இது எல்லாவற்றையும் தாண்டி எண்ணங்களினால் உருவாகும் மாசு! அந்தச்செடியைப் பார்த்து ஒரு நரகமான குழ்நிலையை, அங்கு அடிக்கடி சண்டை நடந்தால் எப்படி இருக்குமோ? அது போல் ஒரு குழ்நிலையை அந்த இடத்தில் உருவாக்கி விட்டு 10 நிமிடம் செலவழித்துவிட்டு, தண்ணீர் ஊற்றிய பிறகே அடுத்த செடிக்குச் சென்றார்கள். அடுத்த செடியிடம் நாம் சாதாரணமாக எவ்வாறு நீர் ஊற்றுவோமோ, அதுபோல் நீர் ஊற்றிவிட்டு அந்த செடியைக் கண்டுகொள்ளாமலும், கோபப்படாமலும், எதுவுமே செய்யாமல் சாதாரணமாக விட்டுவிட்டு அடுத்த செடியிடம் சென்றார்கள். மூன்றாவது செடியிடம் சென்ற உடன் அங்கு இனிமையான வயலின், கிடார் எல்லாம் வாசித்து குதித்து, கும்மாளத்துடன் கொண்டாடினார்கள். இனிமையான வார்த்தைகளாய் அச்செடியிடம் பேசினார்கள். இவ்வாறு தொடர்ந்து தினமும் செய்தார்கள். சரியாக இருபத்தியோராம் நாள் முடிவில், முதல் செடி சிறிது சிறிதாகச் சோர்ந்துகொண்டே வந்து, இறந்தே விட்டது. இரண்டாம் செடி எந்த விதச் செழிப்பும் இன்றிச் சாதாரணமாய் வளர்ந்தது. ஆனால் மூன்றாம் செடி சாதாரணமாய் வளாராமல் அபரிமிதமாக வளர்ந்திருந்தது. பார்ப்பதற்கே மிக அழகாக. இரண்டுமுழுன்று கிளைகளுடன் நான்கு, ஐந்து பூக்களுடன் பூத்துக் குலுங்கியது. அதன் பசுமைத் தன்மை மிக அருமையாக, ஆரோக்கியத்துடன் இருந்தது. எனவே ஆராய்ச்சியின் முடிவில் அந்த மருத்தவ விஞ்ஞானக் குழுத் தலைவர் “எண்ணங்களுக்கு வெளி உலகின் சக்தி மிகச் சாதகமாக இருக்கிறது” என்று எழுதியுள்ளார். (Thoughts has Tramendaous Power units Eternal Environment) இதன்பிறகு மனிதர்களிடம் இந்த ஆராய்ச்சியைச் செய்யலாம், என முடிவெடுத்தார்கள். ஆனால் அங்கேதான் பிரச்சினை. செடியிடம் ஆராய்ச்சியை எளிதாகச் செய்யலாம். ஆனால் மனிதனிடம் செய்யமுடியாது. ஏனென்றால் மனம் என்ற ஒன்று மனிதனிடம் உள்ளது. அது ஏமாற்றும். மனிதனுக்கே தெரியாமல் இந்த ஆராய்ச்சியைச் செய்யவேண்டும். விஞ்ஞானிகள் குழு ஒரு திட்டம் வகுக்கிறார்கள். அதன்படி அவர்கள் எல்லோரும் சமையல் செய்யும் ஒரு சமையற்காரரைத் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்து அவருக்கு எரிச்சலை உண்டாக்கினார்கள், சிறிது சிறிதாகத் தினமும் அந்த எரிச்சலை அதிகப்படுத்தினார்கள். அவரை வேலையை விட்டு எடுப்பது போன்று பேசுவது, எரிச்சலூட்டுவது போன்று எல்லோரும் அவரவர்களின் பங்கைச் சரியாகச் செய்து எவ்வளவு எரிச்சலூட்டமுடியுமோ, அவ்வளவு எரிச்சலை அதிகப்படுத்த, அதிகப்படுத்த, பதினெட்டாம் நாள் அந்தச் சமையல்காரர் சமையல் சாப்பாட்டைச் சாப்பிட்ட இருபத் தியொரு பேரில் 10 பேருக்கு அலர்ஜோ வந்து விட்டது. வயிறு எல்லாம் எரிய ஆரம்பித்தது. ப்ரீ அலர்ஜ் நிலை எல்லோருக்கும் வந்துவிட்டது. உண்மையில் எப்படி இருக்கிறதென்றால் இரண்டாம் உலகப்போரின் பொழுது இரண்டு பக்கமும் நாக்கெட்டுகள் சீறிவர, நடுவில் குண்டு மழைபொழியும் சூழ்நிலை இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். திறு, திறு என்று நாம் எதிர்பாராத சம்பவத்தில், எதிர்பாராத இடத்தில் இருக்காத எண்ணங்கள் நம்மை வந்து தாக்கிக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு மோசமான சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இதனால்தான் “எண்ணங்களால் உருவாகும் மாசுக்கள்” என்ற வார்த்தையே உருவானது. இந்த நச்சுத் தன்மையால் நம்முள் சமச்சீரற்ற நிலையில் ஹார்மோன்கள் சுரக்கிறது. ஒவ்வொரு முறை பயம் எழும்போது, உள்ளுக்குள் அட்ரினலின் சுரக்கிறது. அட்ரினலின் தன்மை Flight or Fight. அதாவது அந்த ஹார்மோன் வெளியானவுடன் ஒன்று ஓடவேண்டும் இல்லை அடிக்க வேண்டும். இரண்டில் எதாவது ஒன்று நடக்கவேண்டும். அவ்வாறு செய்யாமல் விட்டால் என்னாகும்? ஒரு ஹார்மோன் சொல்கிறது. ‘பயப் இன்னொரு ஹார்மோன் சொல்கிறது ‘பார்க்காதே!’ என்று. இன்னொரு ஹார்மோன் சொல்கிறது ‘ஓடு.’ இன்னொரு ஹார்மோன் சொல்கிறது ‘பயப்படு.’ இன்னொரு ஹார்மோன் சொல்கிறது ‘உஷ்சாகமாப் இரு’.
இப்படி ஒரே நேரத்தில் இத்தனை கட்டளைகளைப் பிறப்பந்தால் அது எப்படி இருக்கும்?
பள்ளித் தலைமையாசிரியர் நீங்கள் செய்யாத தவறுக்கு உங்களைத் திட்டும் போது உங்களுக்குக் கோபம் வருகிறது. கோபம் வரும்போது அட்ரினலின் வெளிப்படுகிறது. ஓட முடியாது. அந்த இடத்தில் கோபத்தை உங்களால் காண்பக்க முடியுமா? சண்டையிட முடியுமா? அல்லது ஓட முடியுமா? இதற்கு வாய்ப்பே இல்லை. சண்டையிடவும் முடியாது. ஓடவும் முடியாது, அங்கிருந்து அதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அந்த அளவிற்கு நமக்குப் பக்குவமும் கிடையாது. ஆனால் உள்ளுக்குள் ஹார்மோன் வெளியாகிவிட்டது. அதன் தன்மை என்னவென்றால் ஒன்று, அல்லது சண்டையிடு என்கிறது. எதாவது ஒன்றைச் செய்யச் சொல்கிறது. ஒன்று ஓடிப்போய்விடு, இல்லையென்றால் சண்டை போடு என்று தொடர்ந்து தகவல் Signal கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. ஆனால் நாம் வெளியில் எதுவும் செய்யாமல் தலையைக் குனிந்து கொண்டு அந்தக் திட்டுக்களை வாங்கிக் கொண்டு வந்து விடுகிறோம்.
உள்ளுக்குள் அப்போது சரந்த அந்த ஹார்மோன் என்ன செய்யும்? பிரச்சினை செய்யும்!
இந்த ஒரு ஹார்மோன் மட்டும்தானா? எத்தனை, எத்தனை உணர்வுகளுக்கு எத்தனை எத்தனை ஹார்மோன்கள் வெளிப்படுகிறது. எல்லா உணர்வுகளையும் நம்மால் திருப்பிப்படுத்த முடியாது. எல்லா உணர்வுகளையும் திருப்பிப்படுத்த இந்தச் சமுதாயம் நம்மை அனுமதிக்கவில்லை. எல்லா ஹார்மோனும் வெளிப்பட்டு அங்கங்கே ஒவ்வொரு செல்லுக்குள்ளும் நின்று கொண்டிருக்கும். ஒரு ஹார்மோன் சொல்கிறது. ‘பார்’ என்று. இன்னொரு ஹார்மோன் சொல்கிறது ‘பார்க்காதே!’ என்று. இன்னொரு ஹார்மோன் சொல்கிறது ‘ஒடு.’ இன்னொரு ஹார்மோன் சொல்கிறது ‘பயப்படு.’ இன்னொரு ஹார்மோன் சொல்கிறது ‘உற்சாகமாய் இரு’. இப்படி ஒரே நேரத்தில் இத்தனை கட்டளைகளைப் பிறப்பித்தால் அது எப்படி இருக்கும்? புது வீட்டிற்குள் சென்ற மருமகளைப் போன்றுதான் இருக்கும். பத்துப் பேர் ஒரே நேரத்தில் வேலை சொன்னால், பாவம், அந்தப் பெண் என்ன செய்வாள்? அப்படியே ஸ்தம்பித்துப் போய் நிற்பாள். நம் எல்லோர் முகத்தையும் பாருங்கள். அதுபோல் ஸ்தம்பித்துப் போன ஒரு முகம் நம் எல்லோரிடமும் இருக்கும். அனைவரிடமும் இதுபோன்ற இறுக்கிப்போன தன்மை இயற்கையாகவே உருவாகிவிட்டது. அந்த இறுக்கிப்போன தன்மை மட்டும் இல்லாமல் தொடர்ந்து, உள்ளுக்குள் தொடர்ந்து துண்டுதல் இருந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் எதுவும் நம்மால் செய்ய முடியவில்லை. இப்படி ஒரு முள்ளின் மீது நிற்பது போன்ற ஒரு குழ்நிலையில் நம் உடம்பு இருந்து கொண்டிருக்கின்றது. உள்ளுக்குள் ஹார்மோன் வெறியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த ஹார்மோனுக்குப் பெயர்தான் ‘பயன்படுத்தப்படாத ஹார்மோன்கள்’ இந்தப் பயன்படுத்தப்படாத ஹார்மோன்கள்தான் நச்சுக்களாக மாறி பிற்காலத்தில் நோயாக வெளிப்படுகிறது. திடீரென்று இரத்தக்கொதிப்பு வருவதில்லை. திடீரென்று சர்க்கரை வியாதி வருவதில்லை. இப்படித்தான் படிப்படியாக நம்முள் உருவாகின்றது. இப்படி உருவாகும் விஷயங்கள் ஒருநாள் நமக்கு நோயாக வெளிப்படுகிறது. இந்த செல்களுக்குள் இருக்கும் நச்சுக்களை எப்படி வெளியே எடுப்பது? ஒவ்வொரு செல்லுக்குள்ளும் தேங்கி இருக்கும் நச்சுக்களை எப்படி வெளியே எடுப்பது? ஒரு துணியில் அழுக்கு இருக்கிறது. அவற்றைப் போட்டு அடித்துத் தோய்த்தால் வெளியில் வந்துவிடும். அதேபோல இப்போழுது நமது செல்களுக்குள் அழுக்கு இருக்கின்றது. அழுக்கு வெளியேற வேண்டும். என்ன செய்யலாம்? இவ்வாறு உள்ளுள்கள் இருக்கும் நச்சுக்களை நாம் பழிந்ததன் வெளியேற்ற வேண்டும். முறுக்குவதன்மூலம் வெளியேற்றலாம். நமது கைகளை முறுக்க முடியாது. ஒருவர் மற்றவரின் கைகளை பிடித்து முறுக்கமுடியாது. எனவே, இறுக்கமாக்க வேண்டும். உடல் பகுதிகளை இறுக்கமாக்குவதன் (Tight) மூலம் செல்களில் தேங்கி இருக்கும் நச்சுகள் வெளியேறிவிடும். இந்த முறையைத்தான் இந்தத் தியானத்தில் நாம் செய்யப்போகின்றோம்.
துக்கஹரணா தியானம் :
- உங்கள் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் விரித்து ஒரே சீரான சுவாசத்தை ஏற்படுத்த வேண்டும். முழங்கால் பாதியளவு மடியும்படி உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். குனிந்து கூடாது நோக்க நின்று பக்கவாட்டில் பறவை பறப்பது போன்ற கைகளை மேலும் கீழுமாக அசைத்து பாதியளவு மடக்கி எழுந்து, பின் மடக்கி எழுந்து ஒரே சீராக மூச்சு விடவேண்டும். இவ்வாறு பத்து நிமிடம் செய்தல் வேண்டும்.
- அடுத்து, பத்து நிமிடம் உடலின் பாகங்கள், கால் பகுதியிலிருந்து உச்சந்தலை வரை படிப்படியாகக் கவனமாக அந்த பாகத்தை மட்டும் உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு இறுக்கப்படுத்துங்கள்.
- அமைதியாக இருந்து இடக்கிலேயே அமர்ந்து சாட்சியாகப் பார்க்கல் [10 min] வேண்டும். "ஜயா! இரத்தக் கொதிப்பு (BP) சர்க்கரை (Suger) வியாதி போன்ற நோய்கள் பரம்பரையான வியாதிகள் என்று கூறுகிறார்கள். ஆனால் நீங்களோ ஹார்மோனின் நச்சுத்தன்மையால் வருகிறது என்கிறீர்களே! எது சரி?" என்று தியான சத்சங்கத்தில் ஒரு அன்பர் கேட்டார்.
இரண்டும் சரியே!
ஒருவருடைய உடல் அனைம்பு பரம்பரையைப் பொறுத்தது. கண்டிப்பாக அது அவர்களின் வம்சாவளியை, பரம்பரையைப் பொறுத்துத்தான். நீங்கள் இந்த மாதிரி வடிவமைப்புடன் இருக்கிறீர்கள் என்றால் அது பரம்பரையினால்தான். உங்கள் தோலின் நிறம் இப்படி இருக்கிறது என்றால் அதுவும் பரம்பரையால்தான். இப்பொழுது நீங்கள் அழகுநிலையம் சென்று அழகு சாதனப்பொருட்களைப் பயன்படுத்தி உங்கள் தோலில் சிறிதளவு மாற்றம் ஏற்படுத்த முடியுமா? முடியும். அதே போன்று சிறிது கூடுபட்டு, அதே தோல் கறுப்பாக முடியுமா? நிச்சயமாக முடியும். நான் சொல்லியது கூடுதான் வருவது. நச்சுத் தன்மையால் வரும் வியாதியைப் பற்றித்தான். வியாதியே வராமல் இருப்பது என்பது மிகவும் கடினம். எந்த ஒரு முடிந்த மனிதனும் மூப்பால் இறக்கவில்லை. மூப்பால் இறந்ததாக மருத்துவ ஆய்வில் குறிப்புகளே Medical Record இல்லை. ஒன்று, இதயம் செயலிழந்திருக்கும். இல்லையெனில் மூளை செயலிழந்திருக்கும். இல்லையென்றால் சிறுநீரகம் செயலிழந்திருக்கும். ஏதோ ஒரு உறுப்பின் செயலிழப்பின் காரணமாகத்தான் இறக்கிறார்கள். சாதாரணமாக ஒருவரின் உயிர் போனதற்கான அத்தாட்சிகளே மருத்துவ உலகில் இல்லை. பல மருத்துவர்களும் இன்று தங்களுடைய வாழ்வில் தியானங்களைக் கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கும் பரிந்துரை செய்கின்றார்கள். தியானங்களை நீங்கள் செய்வதன் மூலமாக விழிப்புணர்வற்ற நிலையில் நிபந்தனைகளைச் சரிசெய்யும் சக்தியைப் பெறுகின்றீர்கள். (தியானம்) ஞானக் கருத்துக்களைத் தொடர்ந்து கேட்பதன் மூலம் (நித்யம்) விழிப்புணர்வு நிலையில் இருக்கும் நிபந்தனைகளைச் சரிசெய்யும் புத்தியைப் பெறுகின்றீர்கள். நித்யமும், தியானமும் ஒன்று சேர்ந்தால் ஆனந்தம் தானாகவே மலரும். தடைகளையே படிக்கற்களாக்கி ஆனந்தமாய் வாழ்வீர்கள். ஆனந்தமாய் இருங்கள்.
வாழ்க்கைக்காக என்ன செய்தீர்கள்?
25 வருடம் சுறித்து நீங்கள் படித்து முடித்து வாழ்க்கையைச் சந்திக்கப் போகிறீர்கள். வாழ்க்கைக்குப் பணத்தையும் வசதிகளையும் தேவையான அளவு தயார் செய்து வைத்துவிட்டீர்கள்! ஆனால் வாழ்க்கையை வாழ்வதற்கு நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள்? ஒரு மனிதனைப் புரிந்து கொள்வதற்கு என்ன கற்றுக் கொண்டீர்கள்? எதுவுமே புரிந்து கொள்ளாமல் எப்படி காலடி எடுத்து வைக்கப்போகிறீர்கள்? இப்படித்தான் நாம் எல்லோருமே மிகப்பெரிய அபாயத்தில் இருந்தாலும், அபாயத்தில் இல்லாதது போல, சுதந்திரப் பறவைகளைப் போல் திறந்து கொண்டிருக்கிறோம். இதுமிகமிகத் தவறு. கோபம் என்னும் உணர்வு ஒருபக்கம் எழுகின்றது. கவலை, என்னும் உணர்வு மறுபக்கம் வந்து முட்டுகிறது. துக்கம் என்னும் உணர்வு பிடித்து ஒரு பக்கம் இழுக்கின்றது. இது எல்லாவற்றிற்கும் நடுவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது வெற்றிக்கு எது தடைக்கல்லாக இருக்கிறது என்பதை எவ்வளவு விரைவில் தெரிந்து கொள்கிறோம் என்பதில் அடங்கியிருக்கிறது வெற்றியின் ரகசியம். இது தெரிந்துவிட்டால் தடைகள்லும் படிக்கல்லே!