64. புலன்களுக்குச் சுதந்திரமா ? புலன்களிலிருந்து சுதந்திரமா? Freedom for senses? or Freedom from senses?
Section 1
புலன்களுக்குச் சுதந்திரமா ? புலன்களிலிருந்து சுதந்திரமா? Freedom for senses? or Freedom from senses?
சுதந்திரமாக்கி இருக்கவிடச் சொல்லவில்லை. புலன்களுக்குக்குக் ட் லன்களைச் சுதந்திரமளிக்காதீர்கள். புலன்களிலிருந்து சுதந்திரமாகுங்கள்.
புலன்களுக்குச் சுதந்திரம் தருவதுதான், மேலைநாட்டுச் சுதந்திரம். வெளியுலகச் சு தந்திரம். விருப்பப்படியெல்லாம் வாழும் சுதந்திரம். இது வாழும் சுதந்திரமல்ல. வீழும் சுதந்திரம் !
அந்தப் புலன்களிலிருந்தே சுதந்திரம் பெறுவதுதான், இந்நாட்டு ரிஷிகள் கண்டறிந்த உன்னத சுதந்திரம். உள்ளுலகச் சுதந்திரம். இது வாழும் சுதந்திரம் மட்டுமல்லாமல், உங்களின் வீர்யம் பொங்க, உங்களின் வல்லமைகள் பொங்க, உச்சக்கட்ட ஆனந்தம் பொங்க வாழும் தேவ சுதந்திரம்.
புலன்களுக்குச் சுதந்திரம், உடலையே புழுக்க வைத்துவிடும்.
புலன்களிலிருந்து சுதந்திரம், உணர்வைப் பழுக்க வைத்துவிடும். உணர்வே பழுத்து உச்சக்கட்டச் சுகத்தில், புலன்களால் சிறிதும் தொந்தரவில்லாமல் வாழும் நிலைதான் ஜீவன்முக்தி. புலன்களிலிருந்து உங்களை விடுபடுத்திக் கொள்வதே ஜீவன்முக்த வாழ்வு.
ஜம்புலன்களில் சக்தியைச் சேமிக்கும் உபாயம்
Techniques to energise the five senses
அரை மணி நேரம் தியானம் செய்தால் ஜம்பலன்களும் அடங்கும் ; கருவிகள் அத்தனையும் ஒடுங்கும்.
தூக்கத்தில் உஉடலுக்குக் கை கொடுக்கிற வெவு, ஒய்வு என்று நினைக்காதீர்கள். தூக்கத்தில் உங்கள் கண் (புலன்) வேண்டுமானாலும் ஓய்வெடுக்கலாம். ஆனால், அந்தப் பார்க்கிற சக்தி (இந்திரியம்) ஓய்வெடுப்பதில்லை. அது கனவிலும் எதையாவது பார்த்துக் கொண்டிருக்கும்.
அதனால்தான் இரவிலே தூக்கத்தின் மூலம் பெறும் ஓய்வு, புலன்களுக்கு முழுமையாக ஓய்வை அளிப்பதில்லை.
தியானத்தின்போது மட்டும்தான் புலன்களுக்கு உண்மையான ஓய்வு கொடுக்க முடியும்.
உடம்பில் இருக்கிற ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு அரை மணி நேரமாவது ஒய்வு கொடுக்க வேண்டும்.
அரை ஐம்புலன்களும் அடங்கும். அத்தனையும் ஒருங்கும்.
நாள் ஒன்றிற்கு அரைமணி நேரமாவது இந்த ஐம்புலன்களுக்கும், கொடுத்தோமானால், அவை அவை முழுழுமையாக அடங்கி, அடுத்த இருபத்து மூன்றரை மணி நேரமும் ஆனந்தமாகவும் சக்தியைப் பெறும். உண்மையான ஒய்வு புலன்களுக்கு ஓய்வளிப்பதே.
தூக்கத்தில் உடலுக்குக் கொடுக்கிற ஒய்வை ஒய்வு என்று நினைக்காதீர்கள். தூக்கத்தில் உங்கள் கண் ( புலன் ) வேண்டுமானாலும் ஒய்வெடுக்கலாம். ஆனால் அந்தப் பார்க்கிற சக்தி இந்திரியம் ஒய்வெடுப்பதில்லை. அது கனவிலும் எதையாவது பார்த்துக் கொண்டிருக்கும்