45. ஆனந்த வாழ்வின் ஆதார ஸ்ருதிகள்
# ஆனந்த வாழ்வின் ஆதார ஸ்ருதிகள்
விடர்ழ்வு ஒரு அழகிய வீணை.
ஆனந்தம் எனும் இசை, அதிலிருந்து மீட்டப்படுவதற்கு, அதன் நாண் (கம்பி), ஸ்ருதி (tune) ஏற்றப்படவேண்டும்.
ஸ்ருதி ஏற்றப்படாத வீணையை மீட்டினால், இசைக்குப் பதிலாக ஓசைதான் வரும்.
அதுபோல்தான் நம் வாழ்வும். நம் வாழ்வே தொடர்ந்து இயற்கையால் மீட்டப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு இன்னிசைக் கச்சேரிதான். ஸ்ருதி சரியாக ஏற்றப்பட்டிருந்தால், அதிலிருந்து ""ஆனந்தம்" எனும் கீதம் வந்து கொண்டே இருக்கும்.
உங்களின் வாழ்வில் ஸ்ருதியேற்றப்பட வேண்டிய மூன்று ""நாண்களை" இப்பொழுதே ஸ்ருதியேற்றிவிட்டால், உங்களை அழிக்கும் ""நான்' கரைந்துவிடும். ஆனந்த வாழ்வின் ஆதார ஸ்ருதிகள் மீட்டப்படும்.
ஆனந்த வாழ்வுக்கு உங்களைச் சுருதியேற்றும் அந்த மூன்று நாண்களைத்தான் ...
-
- நித்யம்.
-
- தியானம்.
3. ஆனந்தம்.
என்றழைக்கிறோம். ஆனந்த வாழ்வின் ஆதார சுருதிகளை உள்வாங்குவதே, ஆனந்த வாழ்வை அனுபவமாக்கும். வாழ்வின் பல புது மடல்களை மலர வைக்கும்.
